Thursday, April 2, 2009

நாடகம் பாகம் I ( கேள்வி (ஈ) i மற்றும் (ஈ) ii தொடர்பான பயிற்சி 2

கடந்த வாரம் கொடுக்கப்பட்ட பயிற்சிக்கான மாதிரி விடை

பயிற்சிக்கும் முயற்சிக்கும் 1


(ஈ) கீழ்க்காணும் சூழலை வாசித்து, தொடர்ந்துவரும் வினாக்களுக்கு விடை எழுதுக.

"ஒரு பெண் அவ்வளவு துணிவுடன் நமது அவைக்கே வந்து, நம்மைத் தாழ்த்திப் பேசுகிறாளென்றால், அதற்குப் பின்னணி ஏதாவது இருக்க வேண்டும். அதை முதலில் கண்டுபிடியுங்கள். அப்படி யாராவது அவளைத் தூண்டிவிட்டிருந்தாள் அவளையும் அந்தக் கூட்டத்தையும் சேர்த்துத் தண்டியுங்கள்."
(காவிய நாயகி - காட்சி 5 - பக்கம் 23)

(i) இக்கூற்றில் இடம்பெற்ற இரண்டு கதைப்பாத்திரங்கள் யாவர்?

(ii) இவ்வாறு கூற நேர்ந்த முன் சூழல் யாது?

மாதிரி விடை

(i) வேண்மாள், கரிகாலன்

(ii) கரிகாலனின் அரசாட்சியைக் கவிழ்க்க நீண்ட காலமாகவே சதித்திட்டம் தீட்டிவரும் காளிங்கராயர் பொன்னியை ஒரு கருவியாகப் பயன்படுத்த திட்டமிடுகிறார். அவ்வகையில் இரும்பிடர்த்தலையாரைச் சந்தித்து பொன்னிக்கு விரைவாக தண்டனை பெற்றுத்தர தூபமிடுகின்றார். அதன் பொருட்டு கரிகாலனைச் சந்திக்கும் இரும்பிடர்த்தலையார் பொன்னியை சேரநாட்டின் ஒற்றர் படையைச் சேர்ந்தவள் எனக் கூறி விரைந்து தண்டிக்குமாறு பணிகிறார். ஆனால், கொள்கையில் உறுதி கொண்ட கரிகாலன் தீர விசாரித்தே தீர்ப்பு வழங்குவேன் எனத் தீர்க்கமாகக் கூறுகின்ற சூழலில் மேற்கண்ட கூற்று வெளிப்படுகிறது.

பயிற்சிக்கும் முயற்சிக்கும் 2

(ஈ) கீழ்க்காணும் சூழலை வாசித்து, தொடர்ந்துவரும் வினாக்களுக்கு விடை எழுதுக.

"எங்கள் சோழநாட்டு நெற்பயிருக்குக் கூடப் பகைவரை எதிர்த்துப் போராடும் வல்லமை உண்டு. எனவே வந்திருப்பவள் பெண்தானே என்று சொற்களைச் சிதறவிடாதே. முதலில் உங்கள் மன்னரை நான் சந்திக்க வந்திருப்பதாகப் போய்ச் சொல்"
(காவிய நாயகி - காட்சி 33 - பக்கம் 104)

(i) இக்கூற்றில் இடம்பெற்ற இரண்டு கதைப்பாத்திரங்கள் யாவர்?


(ii) இவ்வாறு கூற நேர்ந்த முன் சூழல் யாது?


(மேற்கண்ட சூழல் கேள்விக்கான விளக்கத்தை மாணவர்களுக்காக எழுதி அனுப்பியவர் ஆசிரியை புஷ்பவள்ளி சக்திவேல், SMK TAMAN SELESA JAYA, SKUDAI, JOHOR BAHRU)- நன்றி



No comments:

Post a Comment