tag:blogger.com,1999:blog-69118373991022316932024-03-13T08:00:08.846+08:00எஸ்.பி.எம். தமிழ் இலக்கியம்KESUSASTERAAN TAMIL SPMspmilakiamhttp://www.blogger.com/profile/07727289203440877726noreply@blogger.comBlogger71125tag:blogger.com,1999:blog-6911837399102231693.post-82746696347084050382012-11-04T22:35:00.001+08:002012-11-04T22:38:28.923+08:00<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<span style="color: red;"><strong>கோம்பா ஆறு கவிதையில் கவிஞர் கூறும் கருத்துகளை விளக்கி எழுதுக</strong>.</span><br />
<br />
<br />
கவிதையைத் தன் உயிர்மூச்சாகக் கொண்டு அன்னைத் தமிழுக்குத் தொண்டு செய்யும் கவிஞர்களுள் மலேசியக் கவிஞர் தீப்பொறி பொன்னுசாமியும் ஒருவராவார். இவரது கைவண்ணத்தில் உருவான கோம்பா ஆறு எனும் இக்கவிதையானது கவிதை பூங்கொத்து எனும் நூலில் இடப்பெற்றுள்ளது. ஒரு நாட்டின் இயற்கை வளங்களுள் ஆறு இன்றியமையாத ஒரு கூறு என்ற மையக் கருத்தினைக் கருப்பொருளாகக் கொண்டு இக்கவிதை புனையப்பட்டுள்ளது. சிலாங்கூர் மாநிலத்தின் முக்கிய ஆறாக விளங்கும் கோம்பா ஆற்றின் பெருமையை மலேசிய மக்கள் அனைவரும் உணரும் வகையில் அதன் சிறப்புகளுக்குக் கவிஞர் மணிமகுடம் சூட்டியுள்ளார்.<br />
<br />
இயற்கை அன்னையின் அருட்கொடையான கோம்பா ஆறு ஓடும்போதே தன் நீரால் கோலம் தீட்டியும் வழியிலுள்ள மணலை மேவிப் பாதையாக்கியும் விரும்புவதை எல்லாம் நனைக்கிற ஆற்றலுடையதாய், முற்காலத்தில் போர்கள் நடந்த வரலாற்றில், நேரடியாக அல்லாமல் மறைவாகத் தானும் கலந்து இன்றளவும் புகழுக்குரியதாய் விளங்குகிறது என்று கவிஞர் நமக்கு கோம்பா ஆற்றை அறிமுகப்படுத்துகிறார். <br />
<br />
சாதனைப் படைப்பவர்களே வரலாற்றுப் பெட்டகத்தில் இடம் பெற முடியும் என்பது வெள்ளிடைமலை. அவ்வகையில் முற்காலத்தில் போர்களிலும் மற்ற பணிகளிலும் தேர்களைப் பயன்படுத்திய பாண்டியன் மன்னன் புகழ் பெற்றான்; ஊருக்காகப் போராடிய புலித்தேவன் வரலாற்றில் இடம் பெறுவதில் வெற்றி பெற்றான். அவர்களைப் போல, இன்று நீரைக் காலாகக் கொண்டு சிலாங்கூரில் ஓயாமல் நிதமும் நடந்து செல்லும் கோம்பா ஆறு மலேசிய நாட்டின் வளம் பெருக காரணியாக இருந்து நாட்டின் வரலாற்றிலும் இடம் பெரும் மங்கா சிறப்பைப் பெற்றுள்ளது எனக் கவிஞர் புகழ்ந்துரைக்கிறார்.<br />
<br />
சலசலத்து ஓடும் கோம்பா ஆற்றின் எழில் ஓவியம் சொல்லில் மாளாது என்கிறார் கவிஞர். காலையில் உதய சூரியனின் ஒளியால் தங்கமாகவும், கடுவெப்பமான நண்பகல் வெயிலில் கன்னியரின் கன்னமாகவும், மாலை நேரத்து கதிரொளியில் செம்பரத்தைப் பூவைப் போல செந்நிறமாகவும், மணியின் ஒளியாக வெளிச்சம் சூழ்ந்த இரவில் வெண்ணிலவின் சுடர்பட்டு முல்லைப் பூவாக வெண்ணிறத்திலும் பல வண்ணக் கலவை பூணுவதாக கவிஞர் இரசித்துக் கூறுகிறார். கோம்பா ஆறானது பூஞ்சோலையில் புகுந்து ஓடும்பொழுது அங்கே உலவும் தென்றலின் அசைந்தாடலுக்குத் தொட்டிலாக விளங்குவதாகக் கவிஞர் எடுத்துரைக்கிறார். சளைக்காமல் இரவுபகலாக ஓடி தன் கடமையைச் செவ்வனே செய்து கொண்டிருக்கும் கோம்பா ஆற்றின் கடமையுணர்ச்சி மனிதனுக்கு நல்லதொரு பாடமாகும். மேலும், நாளை எனப்படும் மறுநாள் பிறக்குமுன் இரவு வந்தாக வேண்டும் என்பது போல் நாம் சிறப்புற வேண்டுமானால் உறவுகளாக நமக்குப் பயன் தரும் ஆறுகள் நாட்டில் ஓடவேண்டும் என்று கவிஞர் அவா கொள்கிறார்.<br />
<br />
இதுமட்டுமல்லாது, கோம்பா ஆறும் கிள்ளான் ஆறும் ஒன்றாக சங்கமிக்கும் இடத்தில் நாட்டின் தலைநகரமாகிய கோலாலம்பூர் அமைந்துள்ளது. இவ்விரு ஆறுகளும் இவ்விடத்தில் இணையாதிருந்தால் இந்த நகரம் அமைந்ததனால் உருவான இப்போதைய வரலாறும் இருந்திருக்காது. அந்த இரண்டு ஆறுகளும் ஒன்று சேர்ந்ததனால் அவற்றின் விளைவுகளாக ஏற்பட்ட பல பெருமைகளை மொத்தமாக உணர முடிந்தது என்ற உண்மையையும் நாம் உய்த்துணர வைத்துள்ளார்.<br />
<br />
இதனைத் தவிர்த்து, மலேசிய நாட்டில் வாழும் பல்லின மக்கள் இருமுகங்கள் ஒருமுகமாதல் போல வேற்றுமையைக் களைந்து ஒன்றுபடாவிட்டால் தேசிய நலனின் எதிர்காலம் இருளால் சூழப்படும் என்ற கவிஞரின் எச்சரிக்கை மணி கேட்கிறது. எனவே, நாட்டில் வறுமை ஒழிந்து வளம்பெருக வேண்டுமெனில், கோம்பா ஆறு கிள்ளான் ஆறுடன் இணைந்ததுபோல, இங்கு வாழும் மூன்று இனத்தவரும் அன்பால் ஒன்று கலத்தல் வேண்டும் என்ற சிந்தனை முத்தினை கவிஞர் அழகாய்க் கோர்த்திருக்கிறார் எனலாம்.<br />
<br />
கோம்பா ஆறு சுற்றுலா செல்வோருக்கு ஒரு வரப்பிரசாதம் என்கிறார் கவிஞர். இயற்கையான நீரில் குளித்து மகிழவும், காதலிக்கும் பெண்களோடு கொஞ்சி விளையாடவும் இயற்கைச் சூழலில் இதமாகச் சிறிது நேரம் கண்ணயர்ந்து தூங்கவும், குடும்பக் கவலைகளை எல்லாம் மறந்து மகிழ்வோடு பொழுதைக் கழிக்கவும் பொருத்தமான இடமாக உலு கோம்பா திகழ்கிறது. அந்த இடத்தை அடைவதற்கான பயணம் இன்பமாக இருப்பதற்கு, வழிநெடுக விற்கின்ற சுவைமிக்க கோம்பா டுரியான் உதவியாக இருக்கும். பசி வயிற்றைக் கிள்ளினாலும், அங்கே விற்கிற கோம்பா கூவே என்னும் களிப்பாக்கின் நிறங்கொண்ட பலகாரம் அதனைப் போக்க உதவும். எனவே, மகிழ்ச்சி எனும் இன்ப வெள்ளத்தில் திளைக்க கவிஞர் அங்குச் செல்லுமாறு விழைகிறார். <br />
<br />
<br />
ஆகவே, கோம்பா ஆற்றினைப் போன்று பல்வேறு பயன்களை வழங்கும் ஆறுகளை அரசும் மக்களும் உரிய முறையில் பேணிப்பாதுகாக்க வேண்டும்; அப்படிச் செய்யா விட்டால் மனித குலம் அழிவு பாதையில் காலடி பதிக்கும் என்ற உன்னத செய்தியையும் கவிஞர் இக்கவிதை மூலம் நயம்பட உணர்த்தியுள்ளார். <br />
<br />
<br /><div style="text-align: right;">
<span style="color: blue;"><em>- நன்றி :புஷ்பவள்ளி சக்திவேல், SMK Taman Selesa Jaya, Skudai, Johor Bahru</em></span></div>
</div>
spmilakiamhttp://www.blogger.com/profile/07727289203440877726noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6911837399102231693.post-36524125788229902162012-11-04T22:28:00.000+08:002012-11-04T22:28:14.333+08:00<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<strong><span style="color: blue;">பொன் விலங்குகு நாவலில் காணப்படும் சமுதாயச் சிந்தனைகளை விளக்கி எழுது.</span></strong><br />
<br />
<br />
தமிழக நாவலாசிரியர் நா.பார்த்தசாரதியின் கைவண்ணத்தில் மலர்ந்துள்ள சிறந்த நாவல்களில் பொன் விலங்கும் ஒன்றாகும். சத்தியமூர்த்தி என்ற இளைஞன் தனிமனித வாழ்விலும் பொதுவாழ்விலும் எதிர்நோக்கும் சிக்கல்களை இந்நாவல் சுவைப்படச் சொல்கிறது. இது வெறும் பொழுதுபோக்கு நாவலாக அல்லாமல் அரிய சமுதாயச் சிந்தனைகளால் பின்னப்பட்ட சமூக நாவலாகத் திகழ்கிறது.<br />
<br />
ஒருவனுக்கு ஒருத்தி என்ற தமிழரின் சிறந்த வாழ்வியல் இந்நாவலில் வலியறுத்தப்படுகிறது. இரயிலில் தற்கொலைக்கு முயன்ற நடன மங்கை மோகினியைச் சத்தியமூர்த்தி காப்பாற்ற அது இருவரையும் ஆழமான அன்பில் பிணைக்கிறது. மோகினியை மனைவியாக மனத்தில் வரித்தபின் அவன் அன்புக்கு ஏங்கும் பாரதியிடமிருந்து விலகி நின்று கவனமாகப் பழகுகிறான். அதுபோல் சத்தியமூர்த்தியைத் தன் கணவனாக எண்ணி வாழும் மோகினி மஞ்சள் பட்டி ஜமீந்தாரின் அத்துமீறலாலும், சத்தியமூர்த்தி தன்னை விட்டுப் பிரிந்து வெளிநாடு போவதாலும் தன் உயிரை மாய்த்துக் கொள்கிறாள். அவனும் மறுமணம் செய்யும் எண்ணமில்லாமல் மோகினி நினைவோடு வெளிநாடு போகிறான். உள்ளத்தால் இணைந்த இருவரின் தூய அன்பை இது தெளிவாக்குகிறது.<br />
<br />
குலத்தால் தாழ்ந்தாலும் குணத்தால் உயர முடியும் என்ற சிந்தனை மோகினியின் மூலம் வெளிப்படுகிறது. மோகினி தாசிப் பெண்ணாகப் பிறந்தாலும் ஒழுக்கத்தை உயிரினும் மேலாகக் கருதும் பெண்ணாகவும், விரும்பியவரையே மணந்து தூய வாழ்வை வாழத் துடிக்கும் கதை மாந்தராகவும் படைக்கப்பட்டுள்ளாள். பணத்துக்காக ஆண்களிடம் பேசவும் பழகவும் தன்னைத் தூண்டும் அம்மாவை மோகினி வெறுக்கிறாள். அவளின் சிறந்த குணத்தை அறிந்தே சத்தியமூர்த்தி அவளைத் தன் மனைவியாக ஏற்றுக் கொள்ள விரும்புகிறான்.<br />
<br />
எளியாரை வலியார் அடிமைப்படுத்தி அவர்களின் இரத்ததை உறிஞ்சி வாழும் பண்ணை அடிமை வாழ்க்கையின் தீமை இந்நாவலில் காட்டப்படுகிறது. மஞ்சள் பட்டி ஜமீந்தார் பெரும் செல்வர். பழைய ஜமீன் பரம்பரையின் பிரதிநிதியாக வரும் அவர் பணபலத்தைக் கொண்டு மோகினியைத் தம்மக்கு அடிமையாக்கி மணமுடிக்க முயலுகிறார். சத்தியமூர்த்தியின் தந்தையைத் தமக்கு எடுபிடியாக்குகிறார். பூபதிக்குப் பின் கல்லூரியைத் தம் முழுக்கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து சத்தியமூர்த்திக்குக் கொடுதல் செய்கிறார். பணபலத்தால் எதையும் சாதிக்கலாம் என்று எண்ணிய அவரின் எண்ணம் நிறைவேறவில்லை.<br />
<br />
1960இல் தமிழகத்தில் மொழிப்போராட்டமும் திராவிட எழுச்சியும் மேலோங்கியிருந்த காலக்கட்டத்தில் எழுதப்பட்ட இந்நாவலில் தாய்தமிழைப் போற்ற வேண்டும் என்ற உணர்வு பதிவாகியுள்ளது. பூபதி வீட்டில் நடைபெற்ற தேநீர் விருந்தில் மற்றவர்கள் ஆங்கிலத்தில் உரையாற்ற சத்தியமூர்த்தி தமிழில் பேசி பூபதியின் பாராட்டைப் பெறுகிறான். அதிகப் பணம் ஈட்டக்கூடிய கணக்குத் துறையில் அவன் படித்துப் பட்டம் பெற வேண்டும் எனத் தந்தை எதிர்ப்பார்க்கிறார். ஆனால் சத்தியமூர்த்தியோ தமிழ் மீது மோகங்கொண்டு தமிழில் முதுகலைப்பட்டம் பெறுகிறான்.<br />
<br />
தம் இன்ப துன்பங்களைப் பகிர்ந்து கொள்ள நல்ல நட்பு வேண்டும் என்ற சிந்தனை நாவலில் பதிவாகியுள்ளது. சத்தியமூர்த்தி தன் உயிர் நண்பனான குமரப்பனிடம் பல வேளைகளில் தன் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்கிறான். சத்தியமூர்த்திக்கு மோகினி எழுதிய கடிதங்களை அனுமதியின்றி குமரப்பன் படித்துவிட்டு நண்பனிடம் மன்னிப்புக் கேட்கிறான். தன் அந்தரங்கத்தைத் தெரிந்துகொள்ள உயிர் நண்பனுக்கு உரிமையுண்டு என்று சத்தியமூர்த்தி கூறுகிறான். வெளிநாடு செல்லும் சத்தியமூர்த்திக்குப் பண உதவி செய்வதோடு கண்ணாயிரத்திடம் பட்ட கடனையும் அடைக்க உதவுகிறான் குமரப்பன். இருவருமே தூய நட்புக்கு இலக்கணமாகத் திகழ்கிறார்கள்.<br />
<br />
தனி மனித விருப்பு வெறுப்புகளுக்கு இடந்தராமல் மாணவர் நலம் ஒன்றே நோக்கமாகக் கொண்ட கல்லூரி நிர்வாகம் தேவை என்ற சிந்தனை நாவலில் வலியுறுத்தப்படுகிறது. ஒழுக்கமும் கட்டுப்பாடும் நிறைந்த கல்லூரியை நடத்த வேண்டும் என்று பூபதி விரும்பினாலும் நிர்வாகக் குறைபாடுகள் அதற்குத் தடையாக இருக்கின்றன. சத்தியமூர்த்தி சிறந்த பணிகளால் மாணவர்களின் நன்மதிப்பைப் பெறுகிறான். இதைக்கண்டு நிர்வாகத்தினர் அவன் மீது பொறாமைப்படுகின்றனர். உதவி வார்டன் பொறுப்பிலிருந்து அவனை நீக்குவதோடு கல்லூரிக்குத் தீ வைத்ததாக வீண் பழி சுமத்துகின்றனர். இதனால் மாணவர்கள் போராட்டத்தில் இறங்கி வகுப்புகளைப் புறக்கணிக்கின்றனர்.<br />
<br />
மாணவர்களுக்கு நல்ல வழிகாட்டல் தேவை என்ற கருத்து சத்தியமூர்த்தியின் மூலம் வெளிப்படுகிறது. கல்லூரி முதல்வரின் கடுமையான போக்கினால் மாணவன் ராஜாராமன் தன் தேர்வின் தோல்விக்கு அவரைக் காரணங்காட்டிக் கத்தியால் குத்துகிறான். சத்தியமூர்த்தியோ, சிறந்த போதனையாலும் நற்பணிகளாலும் அன்பான அணுகுமுறையாலும் மாணவர்களின் பாராட்டைப் பெறுகிறான். தமிழ் மன்ற விழாவுக்கு நவநீத கவியை வரவழைக்கிறான். மாணவர்களைச் சமூகப்பணியில் ஈடுபடடுத்துகிறான். இரவில் விடுதியை விட்டு வெளியேறும் மாணவர்களை அறிவுரை கூறித் திருத்துகிறான். இதனைக் காரணங்காட்டி கல்லூரி நிர்வாகம் சத்தியமூர்த்தியைப் பழிவாங்க முனைந்தபோது மாணவர்கள் அவனுக்காகப் போராடத் துணிகிறார்கள்.<br />
<br />
<br />
அநீதி இழைப்போருக்குத் தண்டனை உறுதி என்ற கருத்தையும் நாவலாசிரியர் முன் வைக்கிறார். வஞ்சகமும் அற்பத்தனமும் நிறைந்து, பணமொன்றே குறிக்கோளாகக் கொண்ட மனிதராக கண்ணாயிரம் திகழ்கிறார். புகழுக்காகப் பணத்தை வாரி இறைக்கும் ஜமீந்தார், பூபதி மறைவுக்குப்பின் கல்லூரியைத் தம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து சத்தியமூர்த்தியைப் பழிவாங்க முனைகிறார். ஆயினும் நாவலின் இறுதியில், கள்ள நோட்டுக் கும்பலோடு தொடர்பு இருந்ததால் கண்ணாயிரமும் மஞ்சள்பட்டி ஜமீந்தாரும் போலீசாரால் கைது செய்யப்படுகின்றனர். அறவழியைவிட்டு விழகி நடப்போர்க்கு இஃது எச்சரிக்கையாக அமைகிறது.<br />
<br />
இலக்கியம் மனிதரைப் பண்படுத்தி நற்பாதையில் நடக்க உதவும் ஆற்றல்மிக்கது. இத்தகையச் சிறப்பையும் சமுதாயச் சிந்தனைகளையும் பொன் விலங்கு நாவலில் காண முடிகிறது. படித்துச் சுவைப்பதோடு அவற்றை அசைபோடவும் அரிய செய்திகளாக விளங்குகின்றன.<br />
<br />
<br />
<div style="text-align: right;">
<em><span style="color: #351c75;">ஆக்ககம்: குமாரி ஷோபனா, </span></em></div>
<div style="text-align: right;">
<em><span style="color: #351c75;">தாமான் செலேசா ஜெயா இடைநிலைப்பள்ளி, ஜோகூர் பாரு, மலேசியா</span></em>.</div>
<br />
</div>
spmilakiamhttp://www.blogger.com/profile/07727289203440877726noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6911837399102231693.post-88279812339547359362012-11-03T23:33:00.003+08:002012-11-03T23:33:59.673+08:00<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: justify;">
<span style="color: red;"><strong>பொன் விலங்கு நாவல் வாசகர்களுக்குச் சிறந்த படிப்பினையைத் தரவல்லது. அதனை விளக்கி ஒரு கட்டுரை எழுதுக.</strong></span></div>
<div style="text-align: justify;">
</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நாவலாசிரியர் நா.பார்த்தசாரதி எழுதிய சிறப்பான நாவல்களில் பொன் விலங்கும் ஒன்றாகும். சத்தியமூர்த்தி என்ற இளைஞன் தன் தனி மனித வாழ்விலும் பொது வாழ்விலும் எதிர்நோக்கிய சிக்கல்களை இந்நாவல் மையமாகக் கொண்டது. அவ்வகையில் வாசகர்களுக்கு நல்ல படிப்பினைகளைத் தந்து சமூகத்தின் வளர்ச்சிக்குத் துணை நிற்கும் முக்கிய இலக்கிய வடிவமாகச் செயல்படுகிறது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
வாய்மையே வெல்லும் என்ற நீதி இந்நாவலில் வலியுறுத்தப்படுகிறது. மல்லிகைப் பந்தல் கலைக்கல்லூரியின் நிர்வாகி பூபதி விமான விபத்தில் இறந்தவுடன் அக்கல்லூரியின் நிர்வாகம் மஞ்சள்பட்டி ஜமீந்தாரின் கைக்கு மாறுகிறது. அவருடன் கூட்டுச் சேர்ந்த கண்ணாயிரம் சத்தியமூர்த்தியைப் பழிவாங்கும் பொருட்டு, பல தீங்குகளை விளைவிக்கின்றனர். உச்சகட்டமாகக் கல்லூரிக் கூரைக்குத் தீ வைத்து விட்டான் என்று பொய் குற்றம் சுமத்தி அவனைச் சிறையில் தள்ள முனைகின்றனர். சத்தியமூர்த்தியோ அவர்களின் சூழ்ச்சிக்கு அடிபணியாமல் இறுதிவரை போராடுகிறான். கல்லூரி மாணவர்கள், குமரப்பன் போன்ற நல்லவர்களின் பக்கத்துணையுடன் இறுதியில் வெற்றிப் பெறுகிறான். 'வாழ்க்கையே போர்க்களம், வாழ்ந்துதான் பார்க்கணும்' என்ற சத்தியமூர்த்தியின் நம்பிக்கை விதைகள் இன்றைய இளைஞர்களின் மனதில் விதைக்கப்படவேண்டும்.</div>
<div style="text-align: justify;">
கெட்டவர்கள், சதிகாரர்கள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்ககள் எனும் கருத்து இந்நாவலில் வலியுறுத்தப்படுகிறது. 'மூன் லைட்' விளம்பர நிறுவனத்தின் உரிமையாளர் கண்ணாயிரம் வஞ்சகத்தன்மை நிறைந்தவர். மஞ்சள் பட்டி ஜமீந்தாரோ பணபலத்தைக் கொண்டு பிறரை அடக்கி விடலாம் என்று எண்ணுகிறார். அவர்கள் இருவரும் சத்தியமூர்த்திக்கும் மோகினிக்கும் சொல்லொணா துன்பத்தை விளைவிக்கின்றனர். இருப்பினும், அடாது செய்பவன் படாது படுவான் என்பதற்கொப்ப இறுதியில் ஜமீந்தாரும் கண்ணாயிரமும் கள்ள நோட்டுத் தயாரிக்கும் கும்பலோடு சம்மந்தப்பட்டிருப்பதாகக் கைது செய்யப்படுகின்றனர். எனவே, நாம் பிறருக்குத் துன்பத்தை விளைவிப்பதை விடுத்து நல்லதே நினைத்து நல்லதே செய்தால் வையத்தில் வாழ்வாங்கு வாழலாம் என்ற கருத்து சிந்தனைக்கு விருந்தாகிறது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
மேலும், குலத்தால் தாழ்ந்தாலும் குணத்தால் உயர முடியும் என்ற கருத்தினை வாசகர்கள் இந்நாவலின் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது. தாசி குலத்தில் பிறந்தாலும் ஒழுக்கத்தை உயிரினும் மேலாகக் கருதிய மோகினி போற்றப்படவேண்டியவள். மோகினியிடம் குடிகொண்டிருந்த அடக்கம், பொறுமை, ஒழுக்கம் போன்ற குணங்களே இலட்சியவாதியான சத்தியமூர்த்தியின் உள்ளத்தைக் கவர்ந்தன. சேற்றில் முளைத்தாலும் செந்தாமரை உயர்ந்த தெய்வாம்சம் பொருந்திய மலராகக் கருதப்படுவதைப் போன்று நாம் பிறரின் குலத்தையோ வறுமை நிலையையோ எண்ணி அவர்களை எள்ளி நகையாடாமல் அவர்களிடத்தில் காணப்படும் குணத்தைப் போற்றி வாழப் பழக வேண்டும் என்ற உன்னத கருத்தினை நாவலாசிரியர் நமக்குப் படிப்பினையாகத் தந்துள்ளார்.</div>
<div style="text-align: justify;">
<br /> </div>
<div style="text-align: justify;">
இதனைத் தவிர்த்து, நல்ல நட்பு வாழ்வை உயர்த்தும் என்ற சிந்தனையையும் நாவலாசிரியர் இந்நாவலில் பதியமிட்டுள்ளார். சத்தியமூர்த்தி தனது தனிமனித வாழ்விலும் பொது வாழ்விலும் எதிர்நோக்கிய சிக்கல்களைத் துணிவுடன் எதிர்கொள்ள அவனுக்குத் தோள் கொடுத்து உற்ற நண்பன் குமரப்பனே. படிப்பறிவிலும் தொழிலிலும் இருவரும் வெவ்வேறு நிலையினைக் கொண்டிருந்தாலும் நகமும் சதையும்போல இணைபிரியாமல் வாழ்ந்தனர். சத்தியமூர்த்திக்கு வந்த மோகினியின் கடிதங்களை அவன் அனுமதியில்லாமல் படித்தமைக்குக் குமரப்பன் மன்னிப்புக் கேட்கும் பொழுது தன் அந்தரங்கத்தைப் பற்றித் தெரிந்து கொள்ள நண்பனுக்கு உரிமையுண்டு என்று கூறுகிறான். அன்பான நண்பனை ஆபத்தில் அறி என்பதற்கேற்ப சதிக்காரர்களின் கூட்டுச்சதியை முறியடிக்கவும் பணக்கஷ்டத்தைத் தீர்க்கவும் சத்தியமூர்த்திக்குக் குமரப்பன் உதவியது நட்பின் உச்சத்தைக் காட்டுகிறது. இத்தகையவரைப் போன்று நாமும் ஆராய்ந்து நட்பு கொண்டால் வாழ்வில் சிறக்கலாம் என்பது வெள்ளிடைமலை.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அத்துடன் தூயக் காதல் நிலைபெற வேண்டும் என்ற உயர்ந்த படிப்பினையையும் வாசகர்கள் அறிந்து கொள்ள இந்நாவல் ஏதுவாக அமைந்துள்ளது எனலாம். சத்தியமூர்த்தி மோகினி காதலானது ஆத்வீகமானது; இன கவர்ச்சிக்கு அப்பாற்பட்டது. மோகினியை மானசீகமாக மனைவியாக ஏற்றுக்கொண்ட சத்தியமூர்த்தி சபலபுத்திகொண்ட ஆணாக இல்லாமல் பாரதியுடன் கண்ணியமாகவே பழகினான். சத்தியமூர்த்தியைத் தவிர வேறு எந்த ஆண்மகனையும் கனவிலும் நினையாத மோகினி மாதவிபோன்று கற்புக்கரசியாகவே வாழ்ந்து உயிரை மாய்த்தாள். பாரதியோ, சத்தியமூர்த்தி தன்னை விரும்பவில்லை என்று தெரிந்தும் பழிவாங்கும் எண்ணங்கொள்ளாது உண்மைக் காதலைச் சேர்த்து வைக்கப் போராடி தனது காதலை உண்மை என மெய்ப்பித்தாள். இன்றைய இளைஞர்களுக்கு இது நல்ல படிப்பினையாக அமையும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஆகவே, மனிதரைப் பண்படுத்தி நற்பாதையில் நடக்க உதவும் அரிய நல்ல கருத்துகளை உள்ளடக்கிய பனுவலாகப் பொன் விலங்கு திகழ்கிறது. வாசகர்கள் கண்டிபாய் இந்நாவலைப் படித்துச் சுவைப்பதோடு சிந்தனைக்குத் தீனியாய்ப் பயன்படுத்தி ஏற்றம் பெற வேண்டும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: right;">
<em><span style="color: blue;">- நன்றி :புஷ்பவள்ளி சக்திவேல், SMK Taman Selesa Jaya, Skudai, Johor Bahru</span></em></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
</div>
</div>
spmilakiamhttp://www.blogger.com/profile/07727289203440877726noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-6911837399102231693.post-57529543972442584372012-02-01T20:40:00.001+08:002012-02-01T20:51:29.633+08:00எஸ்.பி.எம். தமிழ் இலக்கியப் பிரச்சார இயக்கம்<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEisrIMol8lW03I2ywfukICCEnGJqotXx7sCsbFR5JqGEK8QRUyiv7iGxJ5_-uWWm6v5vfpEnvfYNXH7qClb1HCO-7hwd0mJX2ijvfoJJ2vh2dWwJdI7DkzkSQZctVCOBv5ScgODIE9JdM8/s1600/ilakia+prachara+iyakam+blog+1.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 240px; height: 400px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEisrIMol8lW03I2ywfukICCEnGJqotXx7sCsbFR5JqGEK8QRUyiv7iGxJ5_-uWWm6v5vfpEnvfYNXH7qClb1HCO-7hwd0mJX2ijvfoJJ2vh2dWwJdI7DkzkSQZctVCOBv5ScgODIE9JdM8/s400/ilakia+prachara+iyakam+blog+1.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5704148547459734818" /></a>spmilakiamhttp://www.blogger.com/profile/07727289203440877726noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6911837399102231693.post-38169963314701374592012-01-30T10:20:00.006+08:002012-01-30T10:32:03.406+08:00யார் தமிழ் படிப்பார் (கவிஞர் பொன்முடி)<div align="center"><span style="color:#ff0000;"><strong>யார் தமிழ் படிப்பார்?</strong></span><br /><span style="color:#000099;"><span style="font-size:85%;"><strong><em>(கவிஞர் பொன்முடி, மலேசியா)</em></strong> </span></span></div><br /><div style="TEXT-INDENT: 30px">தமிழ்மா ணவரே தமிழ்மா ணவரே<br /><div style="TEXT-INDENT: 30px">தமிழைப் படிக்கத் தயங்குகின் றீரே<br /><div style="TEXT-INDENT: 30px">தமிழைத் தமிழ்மா ணவர்ப்படிக் காமல்<br /><div style="TEXT-INDENT: 30px">இமிழ்கடல் உலகில் எவர்படிப் பாரே!<br /><div style="TEXT-INDENT: 30px">தாய்மொழி நமக்குத் தமிழ்மொழித் தேனே<br /><div style="TEXT-INDENT: 30px">தாய்நலங் காப்பது சேய்கடன் தானே<br /><div style="TEXT-INDENT: 30px">தொடக்கப் பள்ளியில் தோளில் சுமந்ததை<br /><div style="TEXT-INDENT: 30px">இடைநிலைப் பள்ளியில் இறக்கி வைப்பதா?<br /><div style="TEXT-INDENT: 30px">ஓராண் டல்ல ஈராண் டல்ல<br /><div style="TEXT-INDENT: 30px">ஆறாண் டாக அடிப்படைக் கல்வி<br /><div style="TEXT-INDENT: 30px">அளித்த மொழியின் அருமை மறந்து<br /><div style="TEXT-INDENT: 30px">புளித்தது என்று புகல்வதா இன்று!<br /><div style="TEXT-INDENT: 30px">ஆதியில் அறிவில் உறைத்த தமிழை<br /><div style="TEXT-INDENT: 30px">பாதியில் ஏளனம் படுத்தி ஒதுக்கிட<br /><div style="TEXT-INDENT: 30px">எண்ணும் எண்ணம் எப்படி வந்தது?<br /><div style="TEXT-INDENT: 30px">உண்ணும் உணவோ உவட்டிப் போகலாம்<br /><div style="TEXT-INDENT: 30px">தின்னும் பண்டம் தெவிட்டிப் போகலாம்<br /><div style="TEXT-INDENT: 30px">கண்ணும் கூடக் காண மறுக்கலாம்<br /><div style="TEXT-INDENT: 30px">பெற்ற தாயைப் பிள்ளை மறுப்பதும்<br /><div style="TEXT-INDENT: 30px">உற்றதாய் அன்பினை உதறிப் போவதும்<br /><div style="TEXT-INDENT: 30px">மற்றவர் நடுவில் மதிப்பை நல்குமா?<br /><div style="TEXT-INDENT: 30px">கற்றவர் அவையில் கையொலி பெறுமா?<br /><div style="TEXT-INDENT: 30px">சொந்தம் என்று வந்த பந்தம்<br /><div style="TEXT-INDENT: 30px">சோறு போடுமா என்று கேட்கும்<br /><div style="TEXT-INDENT: 30px">ஓரினம் தமிழர் போலிவ் வுலகில்<br /><div style="TEXT-INDENT: 30px">வேறினம் இல்லை விதிவிதி என்றே<br /><div style="TEXT-INDENT: 30px">வீறு குறைந்த வீணன் இவனைக்<br /><div style="TEXT-INDENT: 30px">கூறுபோட்டுக் கொன்றிட்டாலும்<br /><div style="TEXT-INDENT: 30px">தீரா தென்றன் சினம்தீ ராது!<br /><div style="TEXT-INDENT: 30px">எந்த நாட்டினில் எந்த மொழிதான்<br /><div style="TEXT-INDENT: 30px">எவர்க்கும் சோற்றை ஏந்தி வந்து<br /><div style="TEXT-INDENT: 30px">துவையில் கறியுடன் ஊட்டு கின்றது?<br /><div style="TEXT-INDENT: 30px">உழைப்பும் உறுதியும் உள்ளவன் எவனும்<br /><div style="TEXT-INDENT: 30px">மொழியில் பழியை ஏற்றுவ தில்லை<br /><div style="TEXT-INDENT: 30px">தமிழால் தமிழன் தாழ்ந்துபோ னானாம்<br /><div style="TEXT-INDENT: 30px">தமிழ்தான் இவனைத் தலையெடுக் காமல்<br /><div style="TEXT-INDENT: 30px">தரையொடு தரையாய்ச் சிறைப்படச் செய்ததாம்<br /><div style="TEXT-INDENT: 30px">இப்படி யாஇவன் செப்பித் திரிவது<br /><div style="TEXT-INDENT: 30px">ஒப்பிடும் செய்தியா அப்படிச் சொல்வது<br /><div style="TEXT-INDENT: 30px">தாயா அருமைச் சேயினுக் கெதிராய்த்<br /><div style="TEXT-INDENT: 30px">தீயாய் மாறித் தீய்க்க முனைவாள்<br /><div style="TEXT-INDENT: 30px">மொழிநம் உணர்வு மொழிநம் உயிர்ப்பு<br /><div style="TEXT-INDENT: 30px">மொழிநம் உரிமை காக்கும் பட்டயம்<br /><div style="TEXT-INDENT: 30px">உரிமை வாழ்வை உலகில் இழந்தவர்<br /><div style="TEXT-INDENT: 30px">பெருமை வாழ்வைப் பெறவா முடியும்<br /><div style="TEXT-INDENT: 30px">மொழிநலம் என்றே இனநலம் காக்கும்<br /><div style="TEXT-INDENT: 30px">மொழிக்காப் பொன்றே இனக்காப் பாகும்<br /><div style="TEXT-INDENT: 30px">தமிழ்இந் நாட்டில் தழைப்பதும் இளைப்பதும்<br /><div style="TEXT-INDENT: 30px">தமிழ்மா ணவர்தம் தங்கக் கைகளில்<br /><div style="TEXT-INDENT: 30px">தமிழைப் படிப்பதே தமிழை வளர்க்கும்<br /><div style="TEXT-INDENT: 30px">இமயச் செயலாம் என்மாணவரே! </div></div></div></div></div></div></div></div></div></div></div></div></div></div></div></div></div></div></div></div></div></div></div></div></div></div></div></div></div></div></div></div></div></div></div></div></div></div></div></div></div></div></div></div></div></div></div></div></div></div></div>spmilakiamhttp://www.blogger.com/profile/07727289203440877726noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6911837399102231693.post-36210330314433634252011-11-13T09:23:00.003+08:002011-11-13T09:28:42.216+08:00பூபதியின் பாத்திரப்படைப்பை ஆராய்க<div align="justify"><strong><span style="color:#ff0000;">பூபதியின் பாத்திரப்படைப்பை ஆராய்க.</span></strong><br /><br />தமிழக நாவலாசிரியர் நா.பார்த்தசாரதியின் கைவண்ணத்தில் மலர்ந்த பல சிறந்த நாவல்களில் பொன் விலங்கும் ஒன்றாகும்.சத்தியமூர்த்தி என்ற இளைஞன் தன் தனி மனித வாழ்விலும் பொது வாழ்விலும் சந்திக்கும் போராட்டங்களை மையமிட்டு இந்நாவல் எழுந்துள்ளது. இந்நாவலில் முக்கிய துணைக் கதைப்பாத்திரமாக வலம் வரும் பூபதி நாவலின் கதை ஓட்டத்திற்கும் திருப்புமுனைக்கும் பெரும் பங்காற்றியுள்ளார். </div><br /><div align="justify"><br />மல்லிகைப் பந்தல் கலைக்கல்லூரியின் அதிபரான பூபதி பாசமிகு தந்தையாகô படைக்கப்பட்டுள்ளார். தாயில்லா பிள்ளையான பாரதியை அக்குறை தெரியாமலே அன்பும் அரவணைப்பும் செலுத்தி வளர்க்கிறார். அவளுக்கு எந்தக் குறையுமில்லாமல் பேணி பாதுகாக்கும் அதே வேளையில் நற்பண்புகளையும் ஊட்ட அவர் தவறவில்லை. நேர்முகத் தேர்வின்போது மூன்று ஆண்களுக்குத் தேநீர் கொடுத்து விட்டு நான்காவது நாற்காலியில் தானும் உட்கார்ந்து விடாமல் சற்றே நாணத்துடன் ஒதுங்கி நின்ற பாரதி, சத்தியமூர்த்தியின் கண்களுக்கு அவன் சந்தித்த அகம்பாவமிக்க செல்வகுடும்பத்துப் பெண்களில் முற்றிலும் புதுமையானவளாக இருந்ததற்கு பூபதியின் வளர்ப்பு முறையையே காரணமாகக் கூறலாம். </div><br /><div align="justify"><br />எதையும் தீர ஆலோசித்து முடிவெடுக்கும் மனிதராகப் பூபதி இந்நாவலில் வலம் வருகிறார்.தமிழ் விரிவுரையாளர் பணிக்காக மதுரையிலிருந்து மல்லிகைப் பந்தலுக்கு நேர்முகப் பேட்டிக்கு வருகிறான் சத்தியமூர்த்தி. நேர்முகத்தேர்வின்போது சத்தியமூர்த்தி கூறும் பதிலால் மனத்திருப்தி அடைந்தாலும் இன்னோரு வயோதிக ஆசிரியரையும் அழைத்துப் பேட்டி காண்கிறார்.கல்லூரி முதல்வரின் முறையீட்டுக்கு இணங்காமல் நன்கு தீர சிந்தித்து சத்தியமூர்த்தியையே தமிழ் விரிவுரையாளர் பணிக்கு நியமிக்கிறார்.இதன் மூலம் அவரின் இப்பண்பு வெளிப்படுகிறது. </div><br /><div align="justify"><br />மேலும், பூபதி உயர்ந்த இலட்சியவாதியாகவும் நாவலாசிரியர் படைத்துள்ளார். தொழிலதிபராக இருந்தாலும் கல்விச் சேவையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட அவர் மல்லிகைப் பந்தல் கலைக்கல்லூரியை சிறந்த போதானா முறையுடன் ஒழுக்கமும் கட்டுப்பாடும் நிறைந்த கல்லூரியாக உருவாக்க வேண்டும் என்ற கொள்கையுடன் செயல்படுகிறார். அதற்குச் சிறந்த ஆசிரியர்களைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பை தானே மேற்கொள்கிறார். உடல்நலம் சரியில்லாமல் இருந்தாலும் தன் வீட்டிலேயே நேர்முகத்தேர்வை வைத்து சத்தியமூர்த்தியின் அறிவையும் பண்பையும் சோதிக்கிறார். தன் தந்தை மல்லிகைப் பந்தல் கல்லூரியை பல்கலைக்கழகமாக உயர்த்தும் எண்ணம் கொண்டிருப்பதைப் பாரதி சத்தியமூர்த்தியிடம் தெரிவிப்பது இதற்கு நற்சான்று. </div><br /><div align="justify"><br />பிறரின் திறமையைப் பாராட்டி உற்சாகப்படுத்தும் உன்னத மனிதராகவும் பூபதி இந்நாவலில் பிரதிபலிக்கிறார்.கல்லூரி தேநீர் விருந்தில் அனைவரும் ஆங்கிலத்தில் பேசியபோது சத்தியமூர்த்தி மட்டும் தமிழில் பேசியதைப் பாராட்டுகிறார். அதைத் தொடர்ந்து, சத்தியமூர்த்தி ‘ஷி வாக்ஸ் இன் பியூட்டி’ என்ற ஆங்கிலக் கவிதையை விளக்கியதை வகுப்பின் வெளியிலிருந்து கேட்கும் பூபதி அவனைப் பாராட்டுகிறார். சத்தியமூர்த்தியின் திறமைக்கு அங்கீகரமாக அவனை உதவி வார்டனாகவும் நியமிக்கிறார்.</div><br /><div align="justify"><br />அத்துடன், பூபதி கண்டிப்புமிக்க மனிதராகவும் படைக்கப்பட்டுள்ளார்.தாம் நிர்வகிக்கும் கல்லூரி மாணவர்கள் கட்டொழுங்குடன் திகழ வேண்டும் என்பதற்காகப் பல சட்டதிட்டங்களை அமல்படுத்திகிறார். இறுதியாண்டு மானவர்கள் ஓர் அறையில் ஒருவர் மட்டுமே தங்க வேண்டும், மாணவர்கள் இரவு ஒன்பது மணிக்கு மேல் வெளியே செல்லக் கூடாது, அவசர காரியங்களுக்காக வெளியே செல்லும் மாணவர்கள் வார்டன் அல்லது துணைவார்டனிடம் அனுமதி பெற்றுச் செல்ல வேண்டும், இல்லையேல் தண்டம் கட்ட வேண்டும் வேண்டும் போன்றவை அவற்றுள் அடங்கும். இராஜாராமன் என்ற மாணவன் தான் தேர்வில் தோல்வி அடைந்ததற்குக் கல்லூரி முதல்வரே காரணம் என்று கூறி அவரைக் கத்தியால் குத்திய சம்பவத்தைத் துணிவுடன் எதிர்நோக்கி அவனுக்கு அறிவுரை கூறி தன்னிலை உணரச் செய்தது அவரது கண்டிப்பை நன்கு வெளிப்படுத்துகிறது எனலாம்.</div><br /><div align="justify"><br />சான்றாண்மைப் பண்புகள் இருக்கும் அதே வேளையில் பூபதியிடம் சில குறைகளும் இருக்கவே செய்கின்றன.புகழுக்கு ஆசைப்படும்சாதாரண மனிதராகவே பூபதி விளங்குகிறார்.டில்லியில் வழங்கப்படும் விருதைப் பெறுவதற்கு மதுரை வரும் பூபதி சத்தியமூர்த்தியிடம் தன் பிறந்தநாள் விழாவையும் கல்லூரி ஸ்தாபகர் தின விழாவையும் சிறப்பாகக் கொண்டாட ஏற்பாட்டைச் செய்யச் சொல்லி அவனை வரவேற்பு இதழ் தயாரிக்கச் சொல்கிறார். அதுவரை சத்தியமூர்த்தியின் உள்ளத்தில் மிக உயர்ந்த இடத்தில் சிம்மாசனம் பெற்றிருந்த பூபதி இக்குணத்தாலேயே மிக அற்பத்தனவராகக் காட்சியளிக்கிறார். </div><br /><div align="justify"><br />இதைத் தவிர, பூபதி தீயவருடன் நட்பு பாராட்டும் குணம் கொண்டவராகவும் இருக்கிறார். மஞ்சள்பட்டி ஜமீன்தார், கண்ணாயிரம் போன்ற நயவஞ்சகர்களுடன் ‘ஏய் பூபதி’ என்று பேசிக் கொள்ளும் அளவுக்கு நெருக்கமான தொடர்பைக் கொண்டிருக்கிறார். அவர்களோடு சீட்டாடி பொழுதைக் கழிப்பதைக் காணும் சத்தியமூர்த்தியும் அதிர்ச்சிக்குள்ளாகிறான்.</div><br /><div align="justify"><br />ஆகவே, “நெல்லுக்கும் உமியுண்டு, புல்லிதல் பூவுக்குமுண்டு” என்பதைப் போல பூபதியிடம் சில குறைகள் காணப்பட்டாலும் மற்றவர்களுக்கு நன்மை செய்யும் சான்றாண்மை குணத்தால் உயர்ந்தே காணப்படுகிறார். செல்வம் படைத்தவர்கள் தான் மட்டும் வாழ்ந்தால் போதும் என்றில்லாமல் சமுதாயத்திற்குத் தொண்டு செய்ய முன்வர வேண்டும் என்ற கருத்தையும் நாவலாசிரியர் பூபதியின் மூலமாக மறைமுகமாகச் சுட்டிக்காட்டியுள்ளார். </div><br /><div align="justify"></div><br /><div align="right"><em><span style="color:#006600;">குமாரி புஷ்பவள்ளி, ஜொகூர், மலேசியா</span></em></div>spmilakiamhttp://www.blogger.com/profile/07727289203440877726noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-6911837399102231693.post-71704499768261891372011-08-02T09:08:00.002+08:002011-08-02T09:15:32.481+08:00பேராக், தஞ்சோங் ரம்புத்தான் வட்டாரத்தில் உள்ள எஸ்.பி.எம். / எஸ்.டி.பி.எம். மாணவர்களின் கவனத்திற்கு...<div align="center"><span style="color:#000099;"><strong>எஸ்.பி.எம். மற்றும் எஸ்.டி.பி.எம். தமிழ் இலக்கியத் தேர்வு எழுதும் மாணவர்களுக்குச் சிறப்பு இலக்கிய வகுப்பு, <br>தஞ்சோங் ரம்புத்தான் இலக்கியச் சங்கம் நடத்துகிறது</strong></span>. </div><br /><div align="justify"><br />எஸ்.பி.எம்., எஸ்.டி.பி.எம்., தேர்வில் தமிழ் இலக்கியத்தைப் பாடமாக எடுக்கும் மாணவர்களுக்குப் பிரத்தியேக வகுப்புகளை நடத்திட பேராக், ஈப்போ அருகேயுள்ள தஞ்சோங் ரம்புத்தான் தமிழ்இலக்கியச் சங்கம் ஏற்பாடுகளைச் செய்து வருகிறது. </div><br /><div align="justify"><br />தம்பூன், தஞ்சோங் ரம்புத்தான், சிம்மோர், பெர்ச்சாம் ஆகிய வட்டாரங்களில் வசிக்கும் இந்திய மாணவர்கள் இந்த வகுப்பில் கலந்து கொண்டு பயன்பெற அழைக்கின்றனர். </div><br /><div align="justify"><br />சங்கங்களின் பதிவிலாக்காவால் முறையாகப்பதிவு பெற்ற சங்கமான, தஞ்சோங் ரம்புத்தான் தமிழ் இலக்கியச் சங்கம், தமிழ்மொழி, தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் தொடர்ந்து பாடுபடுமென்று சங்கப் பொற்ப்பாளர்கள் தெரிவித்தனர். மேல் விபரங்களுக்குத் தொடர்பு கொள்ள வேண்டிய கைப்பேசி எண்: <strong><span style="color:#ff0000;">016-5944528</span></strong>. </div>spmilakiamhttp://www.blogger.com/profile/07727289203440877726noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6911837399102231693.post-46632444194970183202011-07-06T11:26:00.006+08:002011-07-09T13:35:32.049+08:00நாடகம்: காவிய நாயகி (நீண்ட கேள்வி)<div align="justify"><span style="color:#ff0000;"><em><strong>காளிங்கராயரும் தளபதியும் தீட்டிய சதித்திட்டங்களை விளக்கி எழுதுக</strong></em>.</span> </div><br /><div align="justify">இரா.பழனிசாமியின் வைவண்ணத்தில் மலர்ந்த ‘காவிய நாயகி’ நாடகம் புறநானூற்றுப் புலவர் வெண்ணிக் குயத்தியாரின் பாடலை ஆதாரமாகக் கொண்டதாகும். இதில் எதிமறைக் கதைப்பாத்திரங்களான காளிங்கராயரும் தளபதியும் பல சதித்திட்டங்களைத் தீட்டி சோழ அரசாட்சியைக் கைப்பற்ற நினைக்கின்றனர். </div><br /><div align="justify">முதலில், பொன்னிக்குத் தண்டனை பெற்றுத் தந்து சோழன் கரிகாலனுக்கு எதிராக மக்கள் புரட்சியை ஏற்படுத்த இருவரும் சதித்திட்டம் தீட்டுகின்றனர். கரிகாலன் போர் நெறியை மீறியதாகக் குற்றஞ்சாட்டும் பொன்னியை மன்னன் விருந்தினர் விடுதியில் தங்க வைக்கிறான். இருவரும் இரும்பிடர்த்தலையாரைத் தூண்டிவிட அவர் கரிகாலனைச் சந்தித்துப் பொன்னி சேரனின் ஒற்றர் படையைச் சேர்ந்தவள் எனக் குற்றம் சுமத்துகிறார். ஆனால், கரிகாலனோ வழக்கு விசானைக்கு முன்பே பொன்னியைத் தண்டிக்க மறுத்து, தீர விசாரிப்பதாகக் கூறினான். சதித்திட்டம் தீட்டியவர்களுக்கு இஃது ஏமாற்றமாக முடிந்தது. </div><br /><div align="justify">இரண்டாவதாக, பொன்னிக்கும் கரிகாலனுக்கும் காதல் என்று கூறி கரிகாலன் குடும்பத்தில் குழப்பத்தை ஏற்படுத்த முயலுகின்றனர். பொன்னியின் வழக்கை இரண்டு நாட்களுக்குக் கரிகாலன் ஒத்திவைத்ததைச் சாதகமாக்கி, பொன்னி எழுதியதுபோல் ஒரு பொய்யான ஓலையைத் தயாரித்து அதை அந்தப்புரத்தில் கரிகாலன் தவறவிட்டதாக வேண்மாளிடம் தருகிறார் தளபதி. அவள், அது குறித்து இரும்பிடர்த்தலையாரிடம் புகார் செய்ய, அவர் கலிகாலனிடம் முறையிடுகிறார். அவ்வேளை பொன்னி உண்மையாக எழுதிய ஓலை வர கரிகாலன் குற்றமற்றவன் என்பது உறுதியாகிறது. இதனால் அவர்களின் இரண்டாவது திட்டமும் தோல்வியடைகிறது. </div><br /><div align="justify">மூன்றாவதாக, பாண்டிய மன்னனின் சோழ நாட்டைக் காப்பாற்ற இருவரும் திட்டம் தீட்டுகின்றனர். காளிங்கராயர் ஒரு நாள், பாழ்மண்டபத்தில் துறவி வேடத்தில் வந்த பாண்டிய மன்னனின் ஒற்றனைச் சந்திக்கிறார். இருவரும் ஓலைகளை மாற்றிக் கொள்கின்றனர். அதை மறைந்திருந்து கவனிக்கும் துறவி வேடம் பூண்ட கரிகாலன், காளிங்கராயர் மீது மோதி ஓலையைப் பறிக்கிறான். அதன்வழி பாண்டிய மன்னனின் படை இரகசியங்களையும் காளிங்கராயரின் துரோகத்தையும் அறிகிறான். சதித்திட்டத்தை நிறைவேற்ற ஐயாயிரம் கொற்காசுகளைக் காளிங்கராயரிடம் கொடுத்து விட்டுப் போன அந்த ஒற்றனைக் கலிகாலன் பின்னர் கைதுசெய்கிறான். பாண்டியனையும் அவனது படைகளையும் பின்னர் சிறைச் செய்து சதித்திட்டத்தை முறியடிக்கிறான். </div><br /><div align="justify">நான்காவதாக, பொன்னியைக் கொன்று அந்தப் பழியை மன்னன் மீது போட விஷ வைத்தியன் கார்கோடனை ஏவுகின்றனர். கார்கோடனை அரசாங்க விடுதிக்கு அதிகாரியாக நியமித்துப் பொன்னியை விஷம் வைத்துக் கொல்லுமாறு தூண்டுகின்றனர். மந்திரி பதவி கிடைக்கும் என்ற ஆசை வார்த்தையில் மயங்கி அவன் சம்மதிக்கிறான். விருந்தினர் விடுதியில் கார்கோடகன் பொன்னியைத் தேடுகிறான். கோட்டைக் காவலர்கள் தீவட்டி, அமாவாசை மூலம் கார்கோடகனின் வருகையை அறிந்த கரிகாலன் அங்கு வருகிறான். கார்கோடகனிடமிருந்த சோற்று வட்டிலைப் பறித்துக் கரிகாலன் குருவிகளுக்கு உணவிடுகிறான். விஷம் கலந்த உணவைச் சாப்பிட்ட குருவிகள் துடிதுடித்து இறக்கின்றன. சதித்திட்டத்தை அவன் ஒப்புக்கொள்ள, அவனை இரகசியச் சிறையில் அடைக்கிறான். </div><br /><div align="justify">இறுதியாக, கார்கோடகனைச் சிறையில் அடைப்பதற்குக் காரணமான துறவியைக் (கரிகாலன்) கொல்லத் திட்டம் தீட்டுகின்றனர். வேங்கையன் என்னும் முரடன் தன் குடும்பச் செலவுகளுக்குப் பொருள் வேண்டி காளிங்கராயரைக் காண வருகிறான். அதைத் தங்களுக்குச் சாதகமாக்கி அவனுக்குப் பொருளைத் தந்து துறவியைக் கொன்று விடுமாறு பணிக்கின்றனர். ஆனால், அவன் துறவியைக் கொல்ல முயன்ற பொழுது பொன்னி எச்சரித்ததால் துறவி வேடத்தில் இருந்த கரிகாலன் காப்பாற்றப்படுகிறார். பின்னர், கரிகாலன் வேங்கையனைச் சிறையில் அடக்கிறான். </div><br /><div align="justify">இப்படி, எல்லாச் சதித்திட்டங்களும் தோல்வியடைய காளிங்கராயரும் தளபதியும் கரிகாலனிடம் வசமாக மாட்டிக்கொள்கின்றனர். இருவரும் செய்த சதிகளை அரசவையில் அம்பலப்படுத்திய கரிகாலன் இருவருக்கும் தக்க தண்டனை வழங்க ஆணையிடுகிறான். </div>spmilakiamhttp://www.blogger.com/profile/07727289203440877726noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6911837399102231693.post-74896916846951793972011-06-20T10:39:00.001+08:002011-06-20T10:42:24.762+08:00தப்படி வைத்தவர் தப்புவதுண்டோ (நீண்ட கேள்வி)<div align="justify"><strong><em><span style="color:#3333ff;">தப்படி வைத்தவர் தப்புவதுண்டோ எனும் கவிதையில் கவிஞர் கூறுவனவற்றைத் தொகுத்து எழுதுக.</span></em></strong><br /><br />சொற்முத்துகளைக் கோர்வையாக்கி கவிதை எனும் மாலைத் தொடுப்பதில் வல்லமை பெற்றவர் கவிவாணர் ஐ. உலகநாதன். அவரது கைவண்ணத்தில் உருவான தப்படி வைத்தவர் தப்புவதுண்டோ எனும் கவிதையானது கவிதைப் பூங்கொத்து எனும் கவிதைத் தொகுப்பு நூலில் இடம் பெற்றுள்ளது. தாய் நாட்டின் பாதுகாப்பில் ஒவ்வொரு குடிமகனுக்கும் கடப்பாடு உண்டு என்ற மையக் கருத்தினை ஒட்டி இக்கவிதை புனையப்பட்டுள்ளது.<br /><br />பெற்றெடுத்த அன்னைக்குப் பழி ஏற்பட்டால் வீறு கொண்டு எழும் பிள்ளைபோல் பிறந்த பொன்னாட்டுக்குப் பகைவரால் ஊறு ஏற்படும் தருவாயில் அதனைக் களைய போராடுவது நாட்டு மக்களின் கடமை. அதனை நோக்கமாகக் கொண்டே கவிஞரின் பேனா முனையும் எழுச்சிக் கோலம் வரைந்துள்ளது.<br /><br />நாட்டைச் சீர்குலைக்கும் கொடிய எண்ணத்துடன் நம் நாட்டினுக்குள் புகுந்தவர்களின் வரம்பு மீறிய செயலை முறியடிக்க ஆள்பலம் தேவைப்படுவதால் நாட்டு குடிமக்களைத் தற்காப்பு அரனாகச் செயல்பட கவிஞர் அழைக்கிறார். மேலும், தற்காப்புச் செலவினத்திற்குப் பணம் தேவைப்படுவதால் தயங்காமல் பொருளுதவி செய்யுமாறும் கவிஞர் அறைகூவல் விடுக்கிறார்.<br /><br />சிறிய மாநிலங்கள் ஒன்று சேர்ந்து பெரிதாக உருவாகிற சீர் மிகுந்த நம் மலேசிய நாட்டின்பால் வலிந்து பகைமை காட்டுபவர்களை நாம் தீர்த்து ஒழிப்பது காலத்தின் கட்டாயமாகும். நம்மைச் சீரோடும் சிறப்போடும் வாழ வைத்துக் கொண்டிருக்கும் தாய் நாட்டைப் பாதுகாத்து அதன் சிறப்பு விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்திட நாம் பொருளுதவி செய்வது இன்றியமையாத தேவையாகும் என்று கவிஞர் வலியுறுத்துகிறார்.<br /><br />ஆறுகளும் மலைத்தொடர்களும் நிரம்பி இயற்கை எழில் கொஞ்சும் மலேசிய நாட்டில் வாழும் பல்லின மக்கள் அன்புமிக்க உறவால் பிணைந்துள்ளனர். பலவித பண்பாட்டுக் கலைகளும் சிறந்தோங்கி வளர்ந்து வருகின்றன. இத்தகைய சிறப்புமிக்க தாய் நிலத்தை வேற்று நாட்டவர் வெல்லும் எண்ணத்துடன் செயல்பட்டால் நம் வீரர்கள் எதிர்த்து வெடிக்கும் குண்டுகளின் தாக்குதலில் அவர்களின் தலைகள் துண்டிக்கப்பட்டுத் தொலைவில் போய் விழும் என்று கவிஞர் தம் சினத்தின் உச்சத்தில் நின்று கூறுகிறார்.<br /><br />அவ்வகையில், நாட்டைத் தற்காக்கும் உன்னத நோக்கத்திற்குத் தேவையான வீரர்கள் வேண்டும் என்பதால் கவிஞர் பெற்றோர்களிடம் அறைகூவல் விடுக்கிறார். தங்கள் வீடுகளைச் சிறந்து விளங்கச் செய்வதற்குப் பெற்று வளர்த்து இளைஞர்களாக உருவாக்கியிருக்கிற குழந்தைகளை நாட்டைப் பகைவரிடமிருந்து காத்து அதன் தன்மதிப்பை விளங்கச் செய்வதற்குத் தருமாறு வேண்டுகிறார். பிள்ளைகளைப் பெற்றவர்களாக விளங்கும் அவர்களும் பகைவரால் விளையும் கேடுகளைக் களைந்து பெருமை விளையச் செய்ய இயன்ற உதவிகளைச் செய்யுமாறு கேட்கிறார்.<br /><br />வேற்று நாட்டினர் நம் தாய் நாட்டின் மீது பகைமை கொண்டு லலிந்து போரைத் திணிக்க முயலுவதால் அவர்களை முறியடிப்பதற்கு நாட்டு மக்கள் திரளாக அணிசேர வேண்டுமென்ற நம் தலைவர் துங்குவின் ஆணைக்குச் செவிசாய்க்கும்படி கவிஞர் வேண்டுகிறார். மேலும், வீறு கொண்ட வேங்கையென எதிரிகளை எதிர்க்க நாம் பொங்கி எழுந்துவிட்டால் அந்தத் தீயவர்களுக்கு நிலத்தின் அடியில்தான் இருப்பிடம் வாய்க்கும் என்ற உண்மைப் புலப்படும் என்று கவிஞர் ஆணித்தரமாகக் கூறுகிறார்.<br /><br />அத்துடன், எப்படியாவது நம் நாட்டின் எல்லைக்குள் நுழைந்துவிட வேண்டும் என்ற தீய நோக்கத்துடன் நேரான வழியைவிட்டு அங்கும் இங்குமாக மாறித் தப்பான பாதையில் பகைவர்கள் அடியெடுத்து வைத்துவிட்டனர். எனவே, அவர்கள் வைத்த ஒவ்வொரு காலடியையும் கூறாகச் செய்து, அவர்கள் மறுக்க இயலாது ஒப்புக் கொள்ளுமாறு நம் வீரத்தை அவர்களுக்கு உணர்த்திட வேண்டியது நம் கடப்பாடாகும் என்று கவிஞர் நினைவுறுத்துகிறார்.<br /><br />புறத்தே பகை சூழும் காலத்தில், உள்ளே நிலவும் வேறுபாடுகள் நாட்டை வலிமைகுன்றச் செய்து பகைவருக்கு உதவியாக அமைந்துவிடும். எனவே, நாட்டுக்கு இடர்சூழும் காலத்தில் மக்கள் நாட்டுத் தலைவரின் ஆணையை ஒற்றுமையுடனும் கட்டுப்பாட்டுடனும் முழுமனத்துடன் ஏற்றுச் செயற்பட வேண்டியது முக்கியமானது என்ற கருத்தினையும் கவிஞர் முன்வைத்துள்ளார். அதைத் தவிர, ஒரு நாட்டில் எத்துணை இயற்கை எழிலும் வளமும் செறிந்திருந்தாலும், கலைகளும் பண்படும் வளர்ந்திருந்தாலும், புறப்பகைவரிடமிருந்து அந்நாட்டைப் பாதுகாக்க முடியாத மக்களுக்கு அந்த நலன்களும் வளங்களும் பயன்பட வாய்ப்பில்லை என்று மறைமுகமாகச் சுட்டிக்காட்டி நம்மைச் சிந்திக்க வைக்க கவிஞர் தவறவில்லை.<br /><br />ஆகவே, கவிஞர் கூறியபடி நாம் நன்றியுணர்ச்சியுடன் தாய் நாட்டின் சுதந்திரத்தைப் பாதுகாக்க முனைப்புடன் செயல்படுவது இன்றியமையாததாகும். அப்பொழுதுதான் உலக அரங்கில் மலேசிய தலைநிமிர்ந்து வெற்றிநடை போடும். </div>spmilakiamhttp://www.blogger.com/profile/07727289203440877726noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6911837399102231693.post-40978965932210074342011-05-18T12:48:00.003+08:002011-05-18T13:09:11.087+08:00கவிவாணர் ஐ.உலகநாதன் (அவர்களைப் பற்றிய சிறு குறிப்பு)<div align="center"><strong><span style="color:#33cc00;">கவிவாணர் ஐ.உலகநாதன் (மலேசியா / தமிழ்நாடு) - அவரைப் பற்றிய சிறு குறிப்பு</span></strong><br /></div><dl><br /><dt><span style="color:#3333ff;">பிறப்பு</span></dt><br /><dd>ஈப்போ, மலேசியா</dd><br /><br /><dt><span style="color:#3333ff;">கல்வி / தொழில்</span></dt><br /><dd>மலேசியாவில் கல்வி பயின்று, சிங்கையில் பல பணிகள் மேற்கொண்டார். பின்னர் பெங்களூரில் (இந்தியா) குடியேறினார்.</dd><br /><br /><dt><span style="color:#3333ff;">துறைகள் / திறன்கள்</span></dt><br /><dd>கவிதை, இலக்கியச் சொற்பொழிவு, இதழியல்.</dd><br /><br /><dt><span style="color:#3333ff;">பணிகள்</span></dt><br /><dd>சிங்கையில் 'மாதவி' இலக்கிய மாத இதழ்; பெங்களூரில் 'திருப்பம்' மாதமிருமுறை இதழ். பெங்களூர் இளம்பாவலர்களுக்குப் 'பாவலர் பூங்கா' என்னும் பயிலரங்கு நடத்துகிறார்.</dd><br /><br /><dt><span style="color:#3333ff;">படைப்புகள்</span></dt><br /><dd>1954 முதல் கவிதை எழுது வருகிறார். இவரின் 'சந்தனக்கிண்ணம்' கவிதை நூல் மலேசியாவில் உள்ள மலாயாப் பல்கலைக்கழகத்தில் பாடநூலாக இருந்தது. திருப்புமுனை, மகரயாழ், முத்துக்கோவை, கேட்டால் கேளுங்கள், புரட்சித்தலைவர் அந்தாதி, செந்தமிழ்க் கவசம், பாவாணர் புகழ்ச்சிந்து, கண்ணம்மா, உடைந்த வீணை, தமயந்தி என்ற கவிதை நூல்களும், பாலைவன ஒட்டகத்தின் சோலைவனப் பயணம் என்ற பயணக்கட்டுரை நூலும் எழுதியுள்ளார்.</dd><br /><br /><dt><span style="color:#3333ff;">சிறப்பு அடை</span></dt><br /><dd>கவிவாணர், பாவரசு</dd><br /><br /><dt><span style="color:#3333ff;">விருதுகள் / பரிசுகள்</span></dt><br /><dd>1985-இல் தமிழக அரசின் 'பாவேந்தர் விருது'. இதுவன்றி வேறுபல விருதுகளும் பரிசுகளும் பெற்றுள்ளார்.</dd><br /><p align="right"><strong><span style="font-size:85%;color:#000099;"><em>(நன்றி. கவிதைப் பூங்கொத்து நூலின் தொகுப்பாசிரியர் கவிஞர் செ.சீனி நைனா முகம்மது)</em></span></strong></p></dl>spmilakiamhttp://www.blogger.com/profile/07727289203440877726noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6911837399102231693.post-78113463577928785842011-05-18T12:13:00.005+08:002011-05-18T12:42:30.849+08:00தப்படி வைத்தவர் தப்புவதுண்டோ (கவிவாணர் ஐ.உலகநாதன்)<div align="center"><span style="color:#ff0000;"><strong>தப்படி வைத்தவர் தப்புவதுண்டோ!</strong></span><br /><span style="color:#000099;"><span style="font-size:85%;"><strong><em>(கவிவாணர் ஐ.உலகநாதன்)</em></strong> </span></span></div><br /><br /><div style="TEXT-INDENT: 30px">வஞ்ச மனத்துடன் வந்து புகுந்தவர்<br /><div style="TEXT-INDENT: 60px">வாலை யறுத்திட வாராயோ - வரும்<br /><div style="TEXT-INDENT: 30px">வெஞ்ச மருக்கிது வேளை பொருட்குவை<br /><div style="TEXT-INDENT: 60px">மேலும் குவித்துடன் தாராயோ?</div><br /><br /><div style="TEXT-INDENT: 30px">சேரு மலேசியச் சீர்மிகு நாட்டினைச்<br /><div style="TEXT-INDENT: 60px">சேரு மிடர்ப்பகை தீராயோ - உனை<br /><div style="TEXT-INDENT: 30px">வாரி யணைத்தவள் வாழ்வு சிறந்திட<br /><div style="TEXT-INDENT: 60px">வாரி நிதிக்குவை தாராயோ</div><br /><br /><div style="TEXT-INDENT: 30px">ஆறு மலைத்தொடர் அன்பு மனத்தொடர்<br /><div style="TEXT-INDENT: 60px">ஆர்ந்த கலைத்தொடர் தாய்நிலமே - உனை<br /><div style="TEXT-INDENT: 30px">வேறு நிலத்தவர் வெல்ல முனைந்திடின்<br /><div style="TEXT-INDENT: 60px">வேட்டி லவர்தலை போய்விழுமே!</div><br /><br /><div style="TEXT-INDENT: 30px">வீடு விளங்கிடப் பெற்ற குழந்தையை<br /><div style="TEXT-INDENT: 60px">நாடு விளங்கிடத் தாரீரோ - அவர்<br /><div style="TEXT-INDENT: 30px">பீடு விளங்கிடக் கேடு களைந்திடப்<br /><div style="TEXT-INDENT: 60px">பிள்ளையைப் பெற்றவர் வாரீரோ!</div><br /><br /><div style="TEXT-INDENT: 30px">தங்க மெனத்தகும் துங்கு மொழிப்படி<br /><div style="TEXT-INDENT: 60px">சிங்க மெனப்புகக் கூறீரோ - நாம்<br /><div style="TEXT-INDENT: 30px">பொங்கி யெழுந்திடின் புல்ல ரிருப்பது<br /><div style="TEXT-INDENT: 60px">பூமியி னுள்ளெனக் கூறிரோ</div><br /><br /><div style="TEXT-INDENT: 30px">அப்படி இப்படித் தப்படி வைத்தனர்<br /><div style="TEXT-INDENT: 60px">எப்படி யும்படி ஏறிடவே - அவர்<br /><div style="TEXT-INDENT: 30px">ஒப்பிட வீரம் உணர்த்திடு; வைத்திடும்<br /><div style="TEXT-INDENT: 60px">ஒவ்வொரு காலடி கூறிடவே!</div><br /><br /><div style="TEXT-INDENT: 60px" align="right"><em><strong><span style="color:#3333ff;"><span style="font-size:85%;">(</span><span><span style="font-size:85%;">கவிதைப்பூங்கொத்து</span>)</span></span></strong></em></div></div></div></div></div></div></div></div></div></div></div></div></div></div></div></div></div></div></div>spmilakiamhttp://www.blogger.com/profile/07727289203440877726noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6911837399102231693.post-32032178228431650932011-04-08T21:57:00.005+08:002011-04-08T22:09:14.385+08:00கவிதை நீண்ட கேள்வி : கோம்பா ஆறு<div align="justify"><strong><span style="color:#6600cc;"><em>கோம்பா ஆறு கவிதையில் கவிஞர் கூறும் கருத்துகளை விளக்கி எழுதுக. </em></span></strong></div><br /><div align="justify">கவிதையைத் தன் உயிர்மூச்சாகக் கொண்டு அன்னைத் தமிழுக்குத் தொண்டு செய்யும் கவிஞர்களுள் மலேசியக் கவிஞர் தீப்பொறி பொன்னுசாமியும் ஒருவராவார். இவரது கைவண்ணத்தில் உருவான கோம்பா ஆறு எனும் இக்கவிதையானது கவிதை பூங்கொத்து எனும் நூலில் இடப்பெற்றுள்ளது. ஒரு நாட்டின் இயற்கை வளங்களுள் ஆறு இன்றியமையாத ஒரு கூறு என்ற மையக் கருத்தினைக் கருப்பொருளாகக் கொண்டு இக்கவிதை புனையப்பட்டுள்ளது. சிலாங்கூர் மாநிலத்தின் முக்கிய ஆறாக விளங்கும் கோம்பா ஆற்றின் பெருமையை மலேசிய மக்கள் அனைவரும் உணரும் வகையில் அதன் சிறப்புகளுக்குக் கவிஞர் மணிமகுடம் சூட்டியுள்ளார். </div><br /><div align="justify">இயற்கை அன்னையின் அருட்கொடையான கோம்பா ஆறு ஓடும்போதே தன் நீரால் கோலம் தீட்டியும் வழியிலுள்ள மணலை மேவிப் பாதையாக்கியும் விரும்புவதை எல்லாம் நனைக்கிற ஆற்றலுடையதாய், முற்காலத்தில் போர்கள் நடந்த வரலாற்றில், நேரடியாக அல்லாமல் மறைவாகத் தானும் கலந்து இன்றளவும் புகழுக்குரியதாய் விளங்குகிறது என்று கவிஞர் நமக்கு கோம்பா ஆற்றை அறிமுகப்படுத்துகிறார். </div><br /><div align="justify">சாதனைப் படைப்பவர்களே வரலாற்றுப் பெட்டகத்தில் இடம் பெற முடியும் என்பது வெள்ளிடைமலை. அவ்வகையில் முற்காலத்தில் போர்களிலும் மற்ற பணிகளிலும் தேர்களைப் பயன்படுத்திய பாண்டியன் மன்னன் புகழ் பெற்றான்; ஊருக்காகப் போராடிய புலித்தேவன் வரலாற்றில் இடம் பெறுவதில் வெற்றி பெற்றான். அவர்களைப் போல, இன்று நீரைக் காலாகக் கொண்டு சிலாங்கூரில் ஓயாமல் நிதமும் நடந்து செல்லும் கோம்பா ஆறு மலேசிய நாட்டின் வளம் பெருக காரணியாக இருந்து நாட்டின் வரலாற்றிலும் இடம் பெரும் மங்கா சிறப்பைப் பெற்றுள்ளது எனக் கவிஞர் புகழ்ந்துரைக்கிறார். </div><br /><div align="justify">சலசலத்து ஓடும் கோம்பா ஆற்றின் எழில் ஓவியம் சொல்லில் மாளாது என்கிறார் கவிஞர். காலையில் உதய சூரியனின் ஒளியால் தங்கமாகவும், கடுவெப்பமான நண்பகல் வெயிலில் கன்னியரின் கன்னமாகவும், மாலை நேரத்து கதிரொளியில் செம்பரத்தைப் பூவைப் போல செந்நிறமாகவும், மணியின் ஒளியாக வெளிச்சம் சூழ்ந்த இரவில் வெண்ணிலவின் சுடர்பட்டு முல்லைப் பூவாக வெண்ணிறத்திலும் பல வண்ணக் கலவை பூணுவதாக கவிஞர் இரசித்துக் கூறுகிறார். கோம்பா ஆறானது பூஞ்சோலையில் புகுந்து ஓடும்பொழுது அங்கே உலவும் தென்றலின் அசைந்தாடலுக்குத் தொட்டிலாக விளங்குவதாகக் கவிஞர் எடுத்துரைக்கிறார். சளைக்காமல் இரவுபகலாக ஓடி தன் கடமையைச் செவ்வனே செய்து கொண்டிருக்கும் கோம்பா ஆற்றின் கடமையுணர்ச்சி மனிதனுக்கு நல்லதொரு பாடமாகும். மேலும், நாளை எனப்படும் மறுநாள் பிறக்குமுன் இரவு வந்தாக வேண்டும் என்பது போல் நாம் சிறப்புற வேண்டுமானால் உறவுகளாக நமக்குப் பயன் தரும் ஆறுகள் நாட்டில் ஓடவேண்டும் என்று கவிஞர் அவா கொள்கிறார். </div><br /><div align="justify">இதுமட்டுமல்லாது, கோம்பா ஆறும் கிள்ளான் ஆறும் ஒன்றாக சங்கமிக்கும் இடத்தில் நாட்டின் தலைநகரமாகிய கோலாலம்பூர் அமைந்துள்ளது. இவ்விரு ஆறுகளும் இவ்விடத்தில் இணையாதிருந்தால் இந்த நகரம் அமைந்ததனால் உருவான இப்போதைய வரலாறும் இருந்திருக்காது. அந்த இரண்டு ஆறுகளும் ஒன்று சேர்ந்ததனால் அவற்றின் விளைவுகளாக ஏற்பட்ட பல பெருமைகளை மொத்தமாக உணர முடிந்தது என்ற உண்மையையும் நாம் உய்த்துணர வைத்துள்ளார். </div><br /><div align="justify">இதனைத் தவிர்த்து, மலேசிய நாட்டில் வாழும் பல்லின மக்கள் இருமுகங்கள் ஒருமுகமாதல் போல வேற்றுமையைக் களைந்து ஒன்றுபடாவிட்டால் தேசிய நலனின் எதிர்காலம் இருளால் சூழப்படும் என்ற கவிஞரின் எச்சரிக்கை மணி கேட்கிறது. எனவே, நாட்டில் வறுமை ஒழிந்து வளம்பெருக வேண்டுமெனில், கோம்பா ஆறு கிள்ளான் ஆறுடன் இணைந்ததுபோல, இங்கு வாழும் மூன்று இனத்தவரும் அன்பால் ஒன்று கலத்தல் வேண்டும் என்ற சிந்தனை முத்தினை கவிஞர் அழகாய்க் கோர்த்திருக்கிறார் எனலாம். </div><br /><div align="justify">கோம்பா ஆறு சுற்றுலா செல்வோருக்கு ஒரு வரப்பிரசாதம் என்கிறார் கவிஞர். இயற்கையான நீரில் குளித்து மகிழவும், காதலிக்கும் பெண்களோடு கொஞ்சி விளையாடவும் இயற்கைச் சூழலில் இதமாகச் சிறிது நேரம் கண்ணயர்ந்து தூங்கவும், குடும்பக் கவலைகளை எல்லாம் மறந்து மகிழ்வோடு பொழுதைக் கழிக்கவும் பொருத்தமான இடமாக உலு கோம்பா திகழ்கிறது. அந்த இடத்தை அடைவதற்கான பயணம் இன்பமாக இருப்பதற்கு, வழிநெடுக விற்கின்ற சுவைமிக்க கோம்பா டுரியான் உதவியாக இருக்கும். பசி வயிற்றைக் கிள்ளினாலும், அங்கே விற்கிற கோம்பா கூவே என்னும் களிப்பாக்கின் நிறங்கொண்ட பலகாரம் அதனைப் போக்க உதவும். எனவே, மகிழ்ச்சி எனும் இன்ப வெள்ளத்தில் திளைக்க கவிஞர் அங்குச் செல்லுமாறு விழைகிறார். </div><br /><div align="justify">ஆகவே, கோம்பா ஆற்றினைப் போன்று பல்வேறு பயன்களை வழங்கும் ஆறுகளை அரசும் மக்களும் உரிய முறையில் பேணிப்பாதுகாக்க வேண்டும்; அப்படிச் செய்யா விட்டால் மனித குலம் அழிவு பாதையில் காலடி பதிக்கும் என்ற உன்னத செய்தியையும் கவிஞர் இக்கவிதை மூலம் நயம்பட உணர்த்தியுள்ளார். </div><br /><div align="right"><strong><em><span style="color:#000099;"><span style="font-size:85%;">(ஆக்கம்: ஆசிரியை குமாரி புஷ்பவள்ளி சத்திவேல் SMK Taman Selesa Jaya, Johor Bahru )</span> </span></em></strong></div>spmilakiamhttp://www.blogger.com/profile/07727289203440877726noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6911837399102231693.post-32480668631141063982011-04-07T19:12:00.005+08:002011-04-07T19:25:07.152+08:00கோம்பா ஆறு (கவிஞர் தீப்பொறி பொன்னுசாமி, மலேசியா<div align="center"><span style="color:#ff0000;"><strong>கோம்பா ஆறு</strong></span> <br><span style="color:#000099;"><span style="font-size:85%;"><strong><em>(கவிஞர் தீப்பொறி பொன்னுசாமி, புக்கிட் ரோத்தான், மலேசியா)</em></strong> </span></span></div><br /><div style="TEXT-INDENT: 30px">நீர்க்கோல மிட்டுமணற் பாதை போட்டு <br /><div style="TEXT-INDENT: 60px">நினைத்தபடி நனைக்கின்ற ஆற்றல் பெற்றுப் <br /><div style="TEXT-INDENT: 30px">போர்க்கால வரலாற்றில் புதைந்து மீண்டும் <br /><div style="TEXT-INDENT: 60px">புகழ்தொட்டு நடக்குதுபார் கோம்பா ஆறு! <br /><div style="TEXT-INDENT: 30px">தேர்க்காலால் பாண்டியனும் புகழைப் பெற்றான் பெற்றான் <br /><div style="TEXT-INDENT: 60px">ஊர்க்காலால் புலித்தேவன் வெற்றி நட்டான் <br /><div style="TEXT-INDENT: 30px">நீர்க்காலால் சிலாங்கூரில் நிதம் நடக்கும் <br /><div style="TEXT-INDENT: 60px">நிதியாறே! வரலாறே! கோம்பா ஆறே!</div><br /><div style="TEXT-INDENT: 30px">காலையிலே கதிரவனால் தங்க மாகிக் <br /><div style="TEXT-INDENT: 60px">கடும்பகலில் கன்னியரின் கன்ன மாகி <br /><div style="TEXT-INDENT: 30px">மாலையிலே செம்பரத்தை போல மாறி <br /><div style="TEXT-INDENT: 60px">மணியிரவில் வெண்ணிலவால் முல்லை யாகி <br /><div style="TEXT-INDENT: 30px">சோலையிலே தென்றலுக்குத் தொட்டி லாகித் <br /><div style="TEXT-INDENT: 60px">தூங்காமல் நிறங்காட்டும் கோம்பா ஆறு! <br /><div style="TEXT-INDENT: 30px">நாளையெனும் நாள்பிறக்க இரவு வேண்டும் <br /><div style="TEXT-INDENT: 60px">நாம்சிறக்க ஆறுகளின் உறவு வேண்டும்!</div><br /><div style="TEXT-INDENT: 30px">இருநதிகள் இணையுமிடம் கோலா லம்பூர் <br /><div style="TEXT-INDENT: 60px">இல்லையெனில் இன்றிருக்கும் வரலா றில்லை <br /><div style="TEXT-INDENT: 30px">பெருநதியைத் தந்தவிரு நதிகள் அன்று <br /><div style="TEXT-INDENT: 60px">பிணைந்ததனால் பெருமைஎலாம் ஒருங்கே பெற்றோம் <br /><div style="TEXT-INDENT: 30px">இருமுகமும் ஒருமுகமாய்ச் சேராவிட்டால் <br /><div style="TEXT-INDENT: 60px">எதிர்காலம் இருளாகும் தேசி யத்தில் <br /><div style="TEXT-INDENT: 30px">வறுமைகளை ஒழிப்பதற்குக் கோம்பா போல <br /><div style="TEXT-INDENT: 60px">வாழுகின்ற இனம்மூன்றும் கலத்தல் வேண்டும்</div><br /><div style="TEXT-INDENT: 30px">குளிப்பதற்கும் காதலியைக் கொஞ்சு தற்கும் <br /><div style="TEXT-INDENT: 60px">கொஞ்சநேரம் கண்ணயர்ந்து படுப்ப தற்கும் <br /><div style="TEXT-INDENT: 30px">களிப்பதற்கும் குடும்பத்தின் கவலை எல்லாம் <br /><div style="TEXT-INDENT: 60px">களைவதற்கும் ஏற்றவிடம் ‘உலுகோம் பா’தான் <br /><div style="TEXT-INDENT: 30px">வழிப்பயணம் நீள்வதற்கும் ‘துரியான் கோம்பா’ <br /><div style="TEXT-INDENT: 60px">வகைசெய்யும் சூடான ‘கூவே கோம்பா’ <br /><div style="TEXT-INDENT: 30px">களிப்பாக்கின் நிறங்காட்டிப் பசியைப் போக்கும் <br /><div style="TEXT-INDENT: 60px">கண்டிப்பாய் நீங்களங்கே போக வேண்டும்</div></div></div></div></div></div></div></div></div></div></div></div></div></div></div></div></div></div></div></div></div></div></div></div></div></div></div></div></div>spmilakiamhttp://www.blogger.com/profile/07727289203440877726noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6911837399102231693.post-111056461528961012011-04-02T13:27:00.005+08:002011-04-03T15:59:01.200+08:00நீண்ட கேள்வி (பொன் விலங்கு) : பூபதி மற்றும் சத்தியமூர்த்தியின் தந்தை<div align="justify"><strong><em><span style="color:#006600;">பொன் விலங்கு நாவலின் துணைக் கதாப்பாத்திரங்களின் பங்கு முக்கியமானது. அவ்வகையில் பூபதி மற்றும் சத்தியமூர்த்தியின் தந்தை ஆகிய இருவரின் பாத்திரப்படைப்யை ஆராய்க.</span> </em></strong></div><br /><div align="justify">தமிழக நாவலாசிரியர் நா.பார்த்தசாரதியின் கைவண்ணத்தில் மலர்ந்த பல சிறந்த நாவல்களில் பொன் விலங்கும் ஒன்றாகும். இந்நாவலில் துணைக் கதாப்பாத்திரமாக வலம் வரும் பூபதி மற்றும் சத்தியமூர்த்தியின் தந்தை, நாவலின் கதையோட்டத்திற்குப் பெரும் பங்காற்றியுள்ளனர். இந்நாவலில் இவர்கள் இருவரின் பாத்திரப்படைப்பும் வேறுபட்டு அமைந்துள்ளது.</div><br /><div align="justify">பூபதி மல்லிகைப் பந்தலில் ஒரு கலைக்கல்லூரியை நிறுவி அதன் நிர்வாகியாக வலம் வருகிறார். எதையும் தீர ஆலோசித்து முடிவெடுக்கும் மனிதராக பூபதி இந்நாவலில் படைக்கப்பட்டுள்ளார். தமிழ் விரிவுரையாளர் பணிக்காக மதுரையிலிருந்து மல்லிகைப் பந்தலுக்காக நேர்முகப் பேட்டிக்கு வருகிறான் சத்தியமூர்த்தி. நேர்முகத் தேர்வின் போது சத்தியமூர்த்தி கூறும் பதிலால் பூபதி மனத்திருப்தி அடைந்தாலும், இன்னொரு வயது முதிர்ந்த ஓர் ஆசிரியரையும் அழைத்து அதே விரிவிரையாளர் பணிக்காக நேர்முகத் தேர்வு நடத்துகிறார். கல்லூரி முதல்வரின் முறையீடுக்கு இணங்காமல் நன்கு தீர சிந்தித்து, சத்தியமூர்த்தியையே தமிழ் விரிவுரையாளர் பணிக்குத் தன் கலைக்கல்லூரியில் நியமிக்கிறார். இதன் மூலம் அவரின் இப்பண்பு வெளிப்படுகிறது. <span style="font-size:+0;"></span></div><br /><div align="justify">மேலும், பூபதி தரமான கல்லூரியை உருவாக்கும் கொள்கையுடையவராக இந்நாவலில் சித்தரிக்கப்பட்டுள்ளார். மல்லிகைப் பந்தலில் உள்ள கலைக்கல்லூரியின் நிர்வாகியாக இருக்கும் அவர் கட்டொழுங்கும் ஒழுக்கமும் நிறைந்த ஒரு கல்லூரியை உருவாக்க வேண்டும் என்ற கொள்கையுடன் இருக்கிறார். அதற்காக வேண்டிய முயற்சிகளையும் மேற்கொள்கிறார். கல்லூரியின் நற்பெயரை நிலைநாட்ட சிறந்த பண்புடைய விரிவுரையாளர்களை நியமிக்க எண்ணுகிறார். அதைத் தவிற, ஒழுக்கம் நிறைந்த மாணவர்களை உருவாக்க முனைப்புக் காட்டுகிறார். இவற்றின் மூலம் கலைக்கல்லூரியின் பெயரை மேம்படுத்த விரும்புகிறார். தொழிலதிபராக விளங்கினாலும் படத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொள்ளாமல் கல்வித் தொண்டின் மூலம் சமுதாய முன்னேற்றத்திற்காகப் பாடுபடுபவராக விளங்குகிறார். <span style="font-size:+0;"></span></div><br /><div align="justify">பிறரின் திறமையைப் பாராட்டி உற்சாகப்படுத்தும் போக்குடையவராக பூபதி இந்நாவலில் பிரதிபலிக்கிறார். இக்குணம் கல்லூரியின் முதல் நாளன்று அவர் வீட்டில் நடைபெற்ற தேநீர் விருந்தின் போது வெளிப்படுகிறது. தேநீர் விருந்தின் போது அனைவரும் ஆங்கிலத்தில் உரையாடும்போது சத்தியமூர்த்தி மட்டும் தமிழில் உரையாடுவதைக் காண்கிறார். அந்நிகழ்வின்போது தமிழில் பேசிய சத்தியமூர்த்தியைப் பாராட்டிப் பேசுகிறார். அதனைத் தொடர்ந்து, சத்தியமூர்த்தி வகுப்பு மாணவர்களுக்கு ஆங்கிலக் கவிதையைத் தமிழில் விளக்கியதை வகுப்பு வெளியிலிருந்து கண்ட பூபதி அவனைப் பாராட்டினார். அவரின் திறமைக்குச் சான்றாக அவனை உதவி வார்டனாகவும் நியமிக்கிறார். பிறரின் திறமையை ஆதரிக்கும் அவரின் பண்பு இந்நிகழ்வுகளின் வழி நமக்குத் தெரிய வருகிறது. <span style="font-size:+0;"></span></div><br /><div align="justify">அதுமட்டுமின்றி, பூபதி சிறந்த தந்தையாகவும் இந்நாவலில் உலா வருகிறார். தன் மகளான பாரதியை மிகுந்த பாசத்துடன் வளர்க்கிறார். தாய் இல்லாமல் வளரும் பாரதிக்குத் தாய் இல்லாத நினைவு வராதபடி அவளுக்குத் தேவையான அனைத்தையும் செய்து கொடுக்கிறார். அவளின் ஆசைப்படி கல்லூரியில் கல்வியைத் தொடர்வதற்கும் சம்மதிக்கிறார். தன் மகளைச் சிறந்த முறையில் வளர்த்து நற்பண்புகளுடனும் அடக்கமுடனும் உருவாக்கும் சிறந்த தந்தையாக பூபதி இந்நாவலில் விளங்குகிறார். </div><br /><div align="justify">சத்தியமூர்த்தியின் அப்பா ஒரு முன்னாள் தமிழாசிரியராக நாவலில் வலம் வருகிறார். இவர் வறுமையைப் பலவீனமாக எண்ணுபவராக நாவலில் இடம் பெற்றுள்ளார். தான் செய்த தமிழாசிரியர் தொழில்தான் வறுமையின் பிடியில் இருக்க காரணமாக அமைந்தது என எண்ணுகிறார். வறுமையில் இருப்பதால் மஞ்சள் பட்டி ஜமீந்தார் மற்றும் கண்ணாயிரம் போன்ற வசதி படைத்தவர்களின் கீழ் வாழவேண்டும் என்று யூகித்துக் கொண்டு வறுமையை பலவீனமாக உருமாற்றிக் கொள்கிறார். அடிமை வாழ்கை வாழத் தயாராகிறார். ஆகவே, ஜமீந்தார் மற்றும் கண்ணாயிரம் போன்ற பணபலமுடையவர்களின் கீழ் அடிமையாக வேலை செய்ய முடிவு செய்கிறார். </div><br /><div align="justify">தொடர்ந்து, குடிப்பிறப்புக்கு முக்கியத்துவம் கொடுப்பவராகவும் சத்தியமூர்த்தியின் அப்பா படைக்கப்பட்டுள்ளார். தாசிக் குலத்தில் பிறந்த மோகினியைச் சத்தியமூர்த்தி காதலிப்பதை அவர் கடுமையாக எதிர்க்கிறார். குலத்தைப் பெரிதா எண்ணும் அவர் மோகினியை வெறுக்கிறார். அவளை மணக்கக் கூடாது என்று சத்தியமூர்த்தியுடன் வாக்குவாதம் நடத்துகிறார். மஞ்சள்பட்டி ஜமீந்தார் மாளிகையில் அடைப்பட்டிருக்கும் மோகினியைக் காணச் சென்ற சத்தியமூர்த்தியைக் கண்டு கோபம் அடைகிறார்; அவனைத் தடுக்கிறார். </div><br /><div align="justify">நேர்மையை எண்ணாமல் தீமைக்குத் துணைபோகும் மனிதராகவும் சத்தியமூர்த்தியின் அப்பா காணப்படுகிறார். மஞ்சள்பட்டி ஜமீந்தார் மற்றும் கண்ணாயிரம் வஞ்சக எண்ணம் படைத்தவர்கள் என்று தெரிந்தும் அவர்களுக்கு அடிமையாக இருக்க முற்படுகிறார் சத்தியமூர்த்தியின் அப்பா. கண்ணாயிரம் போன்ற தீயவர்களின் பேச்சைக் கேட்டு, சொந்த மகனையே வேதனைப்படுத்துகிறார். கண்ணாயிரத்தின் ஏவலுக்கு ஏற்ப சத்தியமூர்த்தியிடம் மன்னிப்புக் கடிதம் கொடுதத்தைக் கொடுத்து செய்யாத தவற்றிக்கு மன்னிப்புக் கோறுமாறு கேட்கிறார். ஆனால், சத்தியமூர்த்தி மறுத்துக் கடிதத்தைப் பார்த்துக் கோபமடைகிறான். </div><br /><div align="justify">ஆகவே, பூபதி மற்றும் சத்தியமூர்த்தியின் அப்பா இருவரும் நாவலின் கதையோட்டம் சிறப்பாக அமைய அவர்களின் பாணியில் பங்கு வகித்துள்ளனர். அவர்களின் பங்களிப்பு கதையை வாசகர்கள் இரசிக்கும்படி நகர்த்திச் சென்று நாவலாசிரியரின் நோக்கத்தை வெற்றியடையச் செய்துள்ளது எனலாம். </div><br /><div align="right"><strong><span style="color:#000099;"><em><span style="font-size:85%;">ஆக்கம்: பொ.உமாபாரதி, SMK Universiti 2, Johor Bahru, Malaysia</span>.</em></span></strong> </div>spmilakiamhttp://www.blogger.com/profile/07727289203440877726noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-6911837399102231693.post-21502481351024792222011-03-20T20:51:00.006+08:002011-03-20T21:07:00.919+08:00நீண்ட கேள்வி (பொன் விலங்கு) : முத்தழகம்மாள்-மோகினி<div align="justify"><strong><em><span style="color:#ff0000;">முத்தழகம்மாள்-மோகினி இருவரிடையே காணப்படும் முரண்பாடுகளை / கொள்கைப் போராட்டங்களை விளக்கி எழுதுக</span></em></strong>. </div><div align="justify"><br />இலக்கியத் தாயின் தவப் புதல்வராக விளங்குபவர் நாவலாசிரியர் நா.பார்த்தசாரதி. இவரின் பொன் விலங்கு நாவல் அறுபதாம் ஆண்டு காலக் கட்டத்தை நம் கண் முன்னே நிழலாடச் செய்கிறது. சத்தியமூர்த்தி எனும் தனி மனித வாழ்க்கைப் போராட்டங்களை மையமிட்டுப் புனையப்பட்ட இந்நாவல் சிறந்த சமுதாயப் படைப்பாகத் திகழ்கிறது. இந்நாவலில் முத்தழகம்மாளும் மோகினியும் தாய், மகள் எனும் உறவில் துணைக் கதாப்பாத்திரங்களாகச் சித்தரிக்கப்பட்டுள்ளனர். கொள்கை வேறுபாட்டினால் இரு துருவங்களாக விளங்கும் இவ்விருவருக்குமிடையே பற்பல முரண்பாடுகளை நாம் காண இயலுகிறது. </div><div align="justify"><br />கணிகையர் குலத்தில் பிறந்து அதே நிலையில் வாழ விரும்பும் ஒரு கதாப்பாத்திரமாக முத்தழகம்மாள் இந்நாவலில் வலம் வருகிறாள். தன் வழியிலேயே தன் மகளையும் உருவாக்க விரும்புகிறார். சுயநலத்தின் திருவுருவமாகவே திகழும் முத்தழகம்மாள் சொந்த மகள் தற்கொலைக்குத் துணிந்ததைப் பார்த்தும் தன் பண்பை மாற்றிக் கொள்ளத் தயாராக இல்லை. மோகினியின் விருப்பு வெறுப்புகளைப் பற்றி சற்றும் அவர் சிந்தித்ததேயில்லை. தனக்கு ஆதாயம் தரும் எந்தவொரு செயலையும் நிறைவேற்றத் துடிக்கும் காரியவாதியாகவே இருக்கிறார்.</div><div align="justify"><br />மேலும், முத்தழகம்மாள் தாய்ப்பாசத்திற்குப் பதிலாகப் பணத்தாசையையே பிரதானமாகக் கொண்டுள்ளார். தனது மகள் மோகினியை வியாபாரப் பொருளாகப் பயன்படுத்தி பணம் ஈட்ட முனைகிறார். நடனம், விளம்பரம், சினிமா, ஆண்களுடன் நெருங்கிப் பழகுதல் எனப் பல்வேறு நடவடிக்கைகளில் மோகினியை ஈடுபடுத்த விழைகிறார். உதாரணமாக அம்மன் கோயில் திருவிழாவில் நடனமாடிய மோகினி, அங்கு வந்திருந்தோரின் நடவடிக்கைப் பற்றியும் தன்னைப் பல்வோறு சில்லறை நடனங்களை ஆட வற்புறுத்தியதைப் பற்றியும் தாயிடம் முறையிடுகிறாள். இனிமேல் அது போன்ற விழாக்களில் தாம் ஆடப்போவதில்லை என்றும் கூறுகிறாள். அதனைக் கேட்ட முத்தழகம்மாள் மோகினியைக் கடுமையான சுடுச்சொற்களைப் பயன்படுத்தி திட்டுகிறார். பெருஞ்செல்வந்தரான மஞ்சள்பட்டி ஜமீந்தார், மோகினியைக் கொண்டு சினிமாப் படம் எடுக்க விருப்பம் தெரிவித்த பொழுது முத்தழகம்மாள் அதற்கு உடன்படுகிறார். அவளைப் பணம் காய்க்கும் மரமாகப் பார்க்கிறார். </div><div align="justify"><br />அதே வேளையில் மோகினியோ தனித்தன்மை வாய்ந்தவளாக விளங்குகிறாள், “நூலைப்போல சேலை, தாயைப்போல பெண்” என்ற கூற்றைத் தகர்த்தெறியும் பெண்ணாக மோகினி விளங்குகிறாள். சேற்றில் முளைத்த செந்தாமரைப் போல, தாழ்ந்த குடியில் பிறந்தாலும் தனது சிறப்பான பண்புகளால் மோகினி உயர்ந்து நிற்கிறாள். காண்பாரைச் சுண்டியிழுக்கும் பேரழகு படைத்தவளாகவும், பரதக் கலை, வீணை வாசித்தல் ஆகிய திறமையைக் கொண்டவளாக இருப்பினும் அவற்றைக் கொண்டு பெரும் பணம் சம்மாதிப்பதில் மோகினிக்குக் கிஞ்சிற்றும் நாட்டமில்லை. இதன் காரணமாகத் தாய்க்கும் மகளுக்கும் போராட்டம் அரங்கேறுகிறது.</div><div align="justify"><br />அதனைத் தவிர்த்து, பணக்காரரான மஞ்சள்பட்டி ஜமீந்தாரின் உறவை மோகினி அறவே வெறுக்கிறாள். துஷ்டனைக் கண்டால் தூர விலகு என்பது போல் கொடிய எண்ணங் கொண்ட ஜமீந்தாரிடமிருந்து மோகினி விலகியே நிற்கிறாள். அதோடு, தன்னைக் காப்பாற்றி ஆட்கொண்ட தெய்வமான சத்தியமூர்த்தியையே தனது கணவனாக மோகினி மனத்திலே வரித்துக்கொள்கிறாள். கார் விபத்தில் தன் தாயை இழந்து பிறகு ஆதரவற்ற நிலையில் மஞ்சள்பட்டி ஜமீந்தாரின் பின் செல்கிறாள். ஜமீந்தாரின் வஞ்சக சதியால் சத்தியமூர்த்தி தன்னை வெறுப்பதைக் கண்டு மனம் வெதும்புகிறாள். தனது தூய காதலுக்காகவும் கற்புக்காகவும் தற்கொலை செய்து கொள்கிறாள் மேதைப் பெண் மோகினி. மஞ்சள்பட்டி ஜமீந்தாரைத் திருமணம் செய்து கொண்டிருந்தால் ஆடம்பரமான, பகட்டான வாழ்வை அடைந்திருக்க முடியும் என்றிருந்தாலும் தெய்வீகக் காதலுக்கே முன்னுரிமை கொடுத்த மோகினி மனக்கண் முன் உயிர்ந்து நிற்கிறாள். </div><div align="justify"><br />ஆகவே, மோகினி, முத்தழகம்மாள் இருவருமே மாறுபட்ட பாத்திரப்படைப்பால் நம் மனத்தில் பாதிப்பை ஏற்படுத்துகின்றனர். ஆனாலும், மோகினி தன் கொள்கைகளால் உயர்ந்து நிற்கிறாள். அவளுடைய தாயோ தன் அற்பமான கொள்கைகளால் பின்தள்ளப்படுகிறாள். </div><div align="justify"></div><div align="right"><strong><em><span style="font-size:85%;"><span style="color:#3333ff;">ஆக்கம்: ஷோபனா, தாமான் செலேசா ஜெயா இடைநிலைப்பள்ளி, ஜோகூர் பாரு, மலேசியா </span></span></em></strong></div>spmilakiamhttp://www.blogger.com/profile/07727289203440877726noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6911837399102231693.post-5768937761986512602011-03-15T22:05:00.002+08:002011-03-15T22:15:42.141+08:00கவிதை நீண்ட கேள்வி - முகம் நீ! முகவரி நீ!<div align="justify"><strong><span style="color:#ff0000;">முகம் நீ! முகவரி நீ! எனும் கவிதையில் வெளிப்படும் சிறப்புகளை விளக்கி எழுதுக</span></strong>. </div><div align="justify"><br />தமிழன்னைக்கு கவிமகுடம் சூட்டிய கவிஞர்களுள் கவிக்கோ அப்துல் ரகுமானும் ஒருவராவார். அவரது பேனா முனை செதுக்கியுள்ள “முகம் நீ! முகவரி நீ!” எனும் செவிக்கினிய கவிதையானது கவிதைப் பூங்கொத்து எனும் நூலில் இடம்பெற்றுள்ளது. இக்கவிதை, தமிழ் மொழி அனைத்து சிறப்பு அம்சங்களையும் ஒருங்கே அமையப்பெற்ற மொழி என்பதை மையக்கருவாகக் கொண்டுள்ளது. தமிழைத் தாயாக உருவகித்து அத்தாயின் சிறப்புகளை விளக்குவதாக இக்கவிதை புனையப்பட்டுள்ளது.<br /><br />கவிஞர் இக்கவிதையின் வாயிலாகத் தமிழின் தொன்மையைக் கூறியுள்ளார். மொழிக்கு மூலமானது ஒலி. அந்த ஒலி கடலில் இருந்து முதன் முதலாய்த் தோன்றியது தமிழ்மொழி எனவும் கலை எனும் கடலை நாவினால் கடைந்ததால் வந்த அமுதமாகத் தமிழைச் சிறப்பிக்கிறார். இதன் மூலம் உலக மொழிகளுள் பழமையான மொழி, செம்மொழி தகுதியைக் கொண்டது நம் தாய் மொழி என்று உன்னத சிறப்பினைக் கூறி நம்மைப் பெருமைப்பட வைக்கிறார்.<br /><br />மேலும், “கல் தோன்றா காலத்திற்கு முன் தோன்றிய மூத்த மொழி” என்ற சிறப்பு அம்சத்தைக் கொண்டிருந்தாலும் காலம் செல்லச் செல்ல தளர்ந்து போகும் மற்ற மொழிகளுக்கிடையே நாளுக்கு நாள் இளமைப் பெற்று வருவதாகக் கூறுவதானது மனிதன் அறிவியல் துணைக்கொண்டு கணினியுகம் என்ற புதிய பரிமாணத்தைப் பெற்றிருந்தாலும் தமிழ்மொழி புதிய சொற்களஞ்சியத்தைப் பெருக்கியுள்ளதை அறிய முடிகிறது.<br /><br />அதுமட்டுமல்லாது,இவ்வுலகில் நாலாயிரத்திற்கும் மேற்பட்ட மொழிகள் பேசப்பட்டாலும் அவை அனைத்திலும் உயர்ந்து நிற்பது தமிழ்மொழியே எனக் கவிஞர் துணிந்து கூறுகிறார். தமிழ்மொழியில் உயிருக்கும் மெய்க்கும் என தனித்தனி எழுத்துகளுடன் சிறப்புற்று விளங்குவதைப் போன்று மற்ற எந்த மொழிகளாவது இருக்கிறதா என்று நம்மை ஆராயத் தூண்டுகிறார். மெய்யெழுத்துகளில், அழுத்தத்தால் வேறுபட்ட இனங்களாகப் பிரிந்திருக்கும் வல்லினம், மெல்லினம், இடையினம் என்ற மூன்றுவகை மெய்யொலிகள், இயற்கையான முறையில் ஒன்றுடன் ஒன்று இயைந்து இனிமையாக மொழியில் பயன்படும் சிறப்பான முறையைத் தமிழ்மொழி மட்டுமே கொண்டுள்ளதை உணர்த்துகிறார்.<br /><br />அத்துடன், காலமெல்லாம் உயர்வடைந்துகொண்டே இருக்கிற மொழியாகவும் தமிழ்மொழி இருக்கும் வேளையில் மற்ற மொழிகளுள் எதற்கும் இல்லாத தனிச்சிறப்புகளைக் கொண்ட மொழியாகவும் அது விளங்குவதை நாம் உய்த்துணர வேண்டும். செவ்வியல் தன்மை என்ற அரிய தகுதிகளைக் கொண்டுள்ள தமிழ்மொழி ஒவ்வொரு தமிழனின் மூச்சிலும் பேச்சிலும் வாழ்வதோடு அவன் உயர்வுக்கும் வித்திடுவதைக் கவிஞர் நமக்குப் புலப்படுத்தியுள்ளார்.<br /><br />அடுத்ததாக, ஒருவரைப் பற்றி கருத்து கூறும்பொழுது அதை நயம்பட அவர் முகம் கோணாமல் கூறும் வல்லமை பெற்றது தமிழ். ஒருவரைத் திட்டுவதற்குரிய கடுமையான சொற்களானாலும் அதைக் கூறும் போது கசப்பை விளைவிக்காமல் சிந்திக்கத் தூண்டும் இனிமை வாய்ந்ததாகத் தமிழ்மொழி விளங்குகிறது.மலர்களைக் கொண்ட பூஞ்சோலையைப் போன்று, காலம் கடக்க கடக்கச் சிறிதும் வளம் குறையாத மொழியாகத் திகழும் தமிழ்மொழியின் சிறப்பை எண்ணுங்கால் நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது. இதைத் தவிர, யாருக்கும் நில்லாமல் உலவிக் கொண்டிருக்கின்ற காற்றும், தளர்ச்சியின்றி எப்போதும் எழுச்சியுடன் நிமிர்ந்து இலங்குகின்ற ஒளியும், எந்தச் சார்புமின்றி உலகம் முழுமைக்கும் பொதுவாகப் பயன் தரும் தமிழ்மொழி போற்றத்தக்கது என்று கவிஞர் இயம்புகிறார். அத்தகைய மொழியை ஒலிக்கும் வேளையில் நாவில் ஊறுகின்ற எச்சில்கூடத் தேனாகச் சுவைக்கிறது என்றும் கவிஞர் பூரிப்புடன் கூறுகிறார்.<br /><br />தொடர்ந்து, உயிர் எழுத்துகள் பன்னிரெண்டும் மெய்யெழுத்துகள் பதினெட்டுமாய் முப்பதே எழுத்தொலிகளைக் கொண்டு மூவுலகிலும் உள்ள எந்தப் பொருளைக் குறிக்கவும், எந்தக் கருத்தை விளக்கவும், எந்த உணர்வை உணர்த்தவும் ஆற்றல் கொண்ட உலகப் பெருமொழியாகத் தமிழ்மொழி விளங்குவது வெள்ளிடைமலை. அப்பெருமொழியே வான்புகழ் வள்ளுவனின் திருநாவிலும் திருக்கரத்திலும் விளையாடி தனக்கு நிகராக வேறு நூல் இல்லை எனும் அளவிற்குச் சிறந்த திருக்குறள் மலர வித்திட்டிருக்கிறது.<br /><br />மேலும், எந்தவொரு தடங்கல் இல்லாமல் கருத்துகளைச் சுலபமாக வெளிக்கொணர அரிய அமைப்பை வகுத்துத் தந்திருக்கும் ஒரே மொழியாகத் திகழ்வது தமிழ்மொழியே. பல இலக்கிய, இலக்கண செல்வங்களைத் தமிழ் மக்களுக்கு வழங்கி அவர்தம் வாழ்வைச் செழிப்புறச் செய்திருப்பது அதன் வள்ளல் தன்மையை மெய்ப்பிக்கிறது எனலாம். எந்த மொழியை ஒப்பிட்டாலும் அந்த மொழிக்கு மூத்ததாக இருக்கும் தமிழ்மொழி நம் தாய்மொழி எனப் பறைசாற்றுவதில் பெருமிதம் கொள்ளலாம். இவ்வாறு முதன்மை வகிக்கும் தமிழ்மொழி மதவேறுபாடுகள் பார்க்காமல் அனைத்து மதத்தின் கொள்கைகளையும் சுலபமாக மக்களிடம் போய்ச்சேர வழிவகுத்துள்ளது.வேறுபட்ட சமயக் கொள்கை இருப்பினும் தமிழ்ப்பற்று மேலோங்கி இருப்பதால் அவர்களிடையே உள்ள இணக்கம் பாதிப்புறவில்லை. தமிழ்மொழியைத் தாய்மொழியாகப் பெற்றதன் வாயிலாக தமிழர்கள் என்ற சிறப்பு அடையை நாம் பெற்றுள்ளோம். உயர்ந்த பண்பாட்டைப் பெற்று நாம் பெருமைகளுக்குரிய இனமாக உலகத்தில் வாழும் பேறும் பெற்று கிட்டியுள்ளோம். தமிழ்மொழியே நமக்கு இவ்வுலகில் அடையாளத்தையும் சிறப்பையும் வழங்கியுள்ளதை நாம் மறுக்க இயலாது. அத்தகைய தமிழைப் புறக்கணிக்கும் தமிழர்கள், தங்கள் முகத்தையும் முகவரியையுமே புறக்கணித்தவர்கள் ஆவார்கள் என்ற இன்றியமையாத கருத்தையும் மறைமுகமாகச் சுட்டி நம்மை உய்த்துணர கவிஞர் வழிவகுத்துள்ளார்.<br /><br />ஆகவே, தொன்மை, தாய்மை, பொதுமை, தூய்மை, தனித்தன்மை, இனிமை, இளமை போன்ற செம்மொழித் தகுதிகளைக் கொண்டு அதன் நலம் கெடாது மென்மேலும் சிறப்பை எய்திட நம்மால் ஆன ஆக்கக் காரியங்களைச் செய்திட வேண்டும்.</div><div align="justify"> </div><div align="justify"></div><div align="right"><strong><span style="color:#000099;"><em></em></span></strong><span style="font-size:85%;"><strong><span style="color:#000099;"><em>(ஆக்கம்: ஆசிரியை குமாரி புஷ்பவள்ளி சத்திவேல் SMK Taman Selesa Jaya, Johor Bahru )</em></span></strong> </span></div>spmilakiamhttp://www.blogger.com/profile/07727289203440877726noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6911837399102231693.post-38645353341707422852011-03-14T20:22:00.003+08:002011-03-14T20:45:03.374+08:00கவிஞர் கவிக்கோ அப்துல் ரகுமான் (தமிழ்நாடு) - அவறைப் பற்றிய சிறு குறிப்பு<div align="center"><strong><span style="color:#33cc00;">கவிஞர் கவிக்கோ அப்துல் ரகுமான் (தமிழ்நாடு) - அவரைப் பற்றிய சிறு குறிப்பு</span></strong><br /></div><dl><br /><dt><span style="color:#3333ff;">பிறப்பு</span></dt><br /><dd>9-11-1937 மதுரை, தமிழ்நாடு</dd><br /><br /><dt><span style="color:#3333ff;">கல்வி / தொழில்</span></dt><br /><dd>முதுகலை (தமிழ்) பட்டமும், 'புதுக்கவிதையில் குறியீடு' என்ற ஆராய்ச்சிக்காக முனைவர் பட்டமும் பெற்றவர். வாணியம்பாடி இசுலாமியக் கல்லூரியில் பேராசிரியராகவும் பின் தமிழ்த்துறைத் தலைவராகவும் 30 ஆண்டுகள் பணிபுரிந்து இன்று முழுநேர இலக்கியப் பணியாற்றுகிறார்.</dd><br /><br /><dt><span style="color:#3333ff;">துறைகள் / திறன்கள்</span></dt><br /><dd>கவிதை, உரைவீச்சு (புதுக்கவிதை), ஆய்வு.</dd><br /><br /><dt><span style="color:#3333ff;">பணிகள்</span></dt><br /><dd>தமிழ்நாடு, தமிழன், அன்னம் விடுதூது ஏடுகளில் ஆசிரியர்; எண்ணற்ற ஆய்வுரைகள் ஆற்றியவர். உருதுக்கவிதைகளை மொழிபெயர்த்துள்ளார். புதிய இலக்கியக் கோட்பாடுகளை ஆய்ந்து படைப்புகளில் கையாண்டுள்ளார்.</dd><br /><br /><dt><span style="color:#3333ff;">படைப்புகள்</span></dt><br /><dd>பால்வீதி, நேயர்விருப்பம், சுட்டுவிரல், ஆலாபனை, விதைபோல் விழுந்தவன், முத்தமிழின் முகவரி, பித்தன், சொந்தச்சிறைகள், அவளுக்கு நிலா என்று பெயர், முட்டைவாசிகள், மரணம் முற்றுப்புள்ளி அல்ல, விலங்குகள் இல்லாத கவிதை, கரைகளே ந்தியாவதில்லை ஆகியன இவருடைய நூல்கள்.</dd><br /><br /><dt><span style="color:#3333ff;">சிறப்பு அடை</span></dt><br /><dd>கவிக்கோ.</dd><br /><br /><dt><span style="color:#3333ff;">விருதுகள் / பரிசுகள்</span></dt><br /><dd>கவியரசர் விருது, ராணா இலக்கிய விருது, தமிழன்னை விருது, பாரதிதாசன் விருது, கலைமாமணி, அட்சர விருது, கலைஞர் விருது எனப் பல விருதுகள் பெற்றவர்.</dd><br /><p align="right"><strong><span style="font-size:85%;color:#000099;"><em>(நன்றி. கவிதைப் பூங்கொத்து நூலின் தொகுப்பாசிரியர் கவிஞர் செ.சீனி நைனா முகம்மது)</em></span></strong></p></dl>spmilakiamhttp://www.blogger.com/profile/07727289203440877726noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6911837399102231693.post-21296273133760731522011-03-14T12:00:00.005+08:002011-03-14T12:44:38.456+08:00முகம் நீ! முகவரி நீ! - கவிஞர் கவிக்கோ அப்துல் ரகுமான்<div align="center"><strong><span style="color:#ff0000;">முகம் நீ! முகவரி நீ!</span></strong></div><div align="center"><strong><span style="color:#ff0000;"><span style="font-size:0;"></span></span></strong><span style="font-size:85%;color:#3333ff;"><strong><em>(கவிஞர் கவிக்கோ அப்துல் ரகுமான், தமிழ்நாடு, இந்தியா)</em></strong></span></div><br /><div style="TEXT-INDENT: 30px">ஒலிக்கடலில் முதன்முதலாய்<br /><div style="TEXT-INDENT: 90px">உதித்துவந்த பேரலையே!<br /><div style="TEXT-INDENT: 30px">கலைக்கடலை நாவினால்<br /><div style="TEXT-INDENT: 90px">கடையவந்த செவியமுதே!</div><br /><br /><div style="TEXT-INDENT: 30px">பிறந்தநாள் அறியாத<br /><div style="TEXT-INDENT: 90px">பேரழகே! பிறமொழிகள்<br /><div style="TEXT-INDENT: 30px">இறந்தநாள் காணநிதம்<br /><div style="TEXT-INDENT: 90px">இளமைபெற்று வந்தவளே!!</div><br /><br /><div style="TEXT-INDENT: 30px">நயந்த மொழிகளிங்கு<br /><div style="TEXT-INDENT: 90px">நாலா யிரமிருந்தும்<br /><div style="TEXT-INDENT: 30px">உயர்ந்தவளே! உன்னைப்போல்<br /><div style="TEXT-INDENT: 90px">உயர்மெய்யோ டிருப்பவர்யார்?</div><br /><br /><div style="TEXT-INDENT: 30px">வல்லினமும் மெல்லினமும்<br /><div style="TEXT-INDENT: 90px">வளமான இடையினமும்<br /><div style="TEXT-INDENT: 30px">நல்லினமாய் ஒன்றுபட்டு<br /><div style="TEXT-INDENT: 90px">நடக்கவழி செய்தவளே!</div><br /><br /><div style="TEXT-INDENT: 30px">உயர்மொழிநீ தனிமொழிநீ<br /><div style="TEXT-INDENT: 90px">உன்னதமாம் செம்மொழிநீ<br /><div style="TEXT-INDENT: 30px">உயிர்மொழிநீ மெய்மொழிநீ<br /><div style="TEXT-INDENT: 90px">உயர்வைத் தருபவள்நீ</div><br /><br /><div style="TEXT-INDENT: 30px">வைதாலும் தித்திக்கும் <br /><div style="TEXT-INDENT: 90px">மதுரமே! காலத்தைக்<br /><div style="TEXT-INDENT: 30px">கொய்தாலும் மலர்வனத்தில்<br /><div style="TEXT-INDENT: 90px">குறையாத பூவனமே</div><br /><br /><div style="TEXT-INDENT: 30px">நில்லாத காற்றைப்போல்<br /><div style="TEXT-INDENT: 90px">நிமிருகின்ற ஒளியைப்போல்<br /><div style="TEXT-INDENT: 30px">எல்லார்க்கும் பொதுவாக<br /><div style="TEXT-INDENT: 90px">இருப்பவளே உன்னைநாம்</div><br /><br /><div style="TEXT-INDENT: 30px">உச்சரிக்கும் போதினிலே<br /><div style="TEXT-INDENT: 90px">ஊறுகின்ற வாயதன்<br /><div style="TEXT-INDENT: 30px">எச்சிலும் தேனாகும்<br /><div style="TEXT-INDENT: 90px">இதழ்களும் பூவாகும்</div><br /><br /><div style="TEXT-INDENT: 30px">முப்பதே ஒலிகளுக்குள்<br /><div style="TEXT-INDENT: 90px">முழுவுலகும் அளப்பவளே!<br /><div style="TEXT-INDENT: 30px">ஒப்பதே இல்லாத<br /><div style="TEXT-INDENT: 90px">உயர்குறளைப் பெற்றவளே!</div><br /><br /><div style="TEXT-INDENT: 30px">வலஞ்சுழித் தோடுகின்ற <br /><div style="TEXT-INDENT: 90px">வாக்கிய நதியே<br /><div style="TEXT-INDENT: 30px">நலஞ்செழித் தோங்குகின்ற<br /><div style="TEXT-INDENT: 90px">நாணய நாநயமே!</div><br /><br /><div style="TEXT-INDENT: 30px">எம்மொழிக்கும் மூத்தவளே! <br /><div style="TEXT-INDENT: 90px">எம்மொழியாய் வாய்த்தவளே!<br /><div style="TEXT-INDENT: 30px">செம்மொழியாய் மொழிகளுக்குள்<br /><div style="TEXT-INDENT: 90px">செம்மாந் திருப்பவளே!</div><br /><br /><div style="TEXT-INDENT: 30px">தேவாரம் தொடுத்தவளே!<br /><div style="TEXT-INDENT: 90px">திருவா சகத்தேனே!<br /><div style="TEXT-INDENT: 30px">நாவார ஆழ்வாரின்<br /><div style="TEXT-INDENT: 90px">நயங்களிலே ஆழ்ந்தவளே!</div><br /><br /><div style="TEXT-INDENT: 30px">ஏசு மதத்தார் <br /><div style="TEXT-INDENT: 90px">ஈந்ததொரு கொள்கையினால்<br /><div style="TEXT-INDENT: 30px">ஏசா மதத்தை<br /><div style="TEXT-INDENT: 90px">எந்தமிழர்க் களித்தவளே!</div><br /><br /><div style="TEXT-INDENT: 30px">மக்கா மதீனாவின் <br /><div style="TEXT-INDENT: 90px">மக்காத கொள்கையுடன்<br /><div style="TEXT-INDENT: 30px">நிக்கா முடித்தவளே!<br /><div style="TEXT-INDENT: 90px">நேயம் வளர்த்தவளே!</div><br /><br /><div style="TEXT-INDENT: 30px">உன்னாலே பிறந்தோம்<br /><div style="TEXT-INDENT: 90px">உன்னாலே வளர்ந்தோம்<br /><div style="TEXT-INDENT: 30px">உன்னாலே பெருமைபெற்று<br /><div style="TEXT-INDENT: 90px">உலகத்தில் வாழுகின்றோம்!</div><br /><br /><div style="TEXT-INDENT: 30px">அகம்நீ புறம்நீஎம் <br /><div style="TEXT-INDENT: 90px">ஆருயிரும் நீஎங்கள்<br /><div style="TEXT-INDENT: 30px">முகம்நீ முகவரிநீ<br /><div style="TEXT-INDENT: 90px">முடியாத புகழும்நீ!</div><br /><br /><div align="right"><em><span style="font-size:85%;color:#3333ff;"><strong>கவிதைப் பூங்கொத்து</strong></span></em></div></div></div></div></div></div></div></div></div></div></div></div></div></div></div></div></div></div></div></div></div></div></div></div></div></div></div></div></div></div></div></div></div></div></div></div></div></div></div></div></div></div></div></div></div></div></div></div></div>spmilakiamhttp://www.blogger.com/profile/07727289203440877726noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6911837399102231693.post-49580631892841868502011-03-14T11:38:00.000+08:002011-03-14T11:38:30.650+08:00நாவல் (பொன் விலங்கு) பயிற்சி 9<div align="center"><span style="font-size:0;"></span><strong><span style="color:#6600cc;">பயிற்சி 9</span></strong><br /><br /></div><div align="center"><strong><span style="color:#ff0000;">பாகம் 1- பிரிவு ஒன்று (நாவல் : பொன் விலங்கு)</span></strong><br /><br /></div><div style="TEXT-INDENT: -25px">அ. இரயில் சந்திப்புக்குப் பிறகு சத்தியமூர்த்தி மோகினியை எந்தக் கோயிலில் சந்தித்தான்? (1 புள்ளி)</div><br /><br /><div style="TEXT-INDENT: -25px">ஆ. பொன் விலங்கு நாவலில் நாவலாசிரியர் எடுத்துக் கையாண்ட இரண்டு தமிழ் இலக்கிய நூல்களைக் குறிப்பிடவும். (2 புள்ளி)</div><br /><br /><div style="TEXT-INDENT: -25px">இ. சத்தியமூர்த்திக்கும் தன் தகப்பனாருக்குமிடையே கருத்து வேறுபாடு உருவாகக் காரணம் யாது?(4 புள்ளி)</div><br /><br /><div style="TEXT-INDENT: -25px">ஈ. "உங்களுக்கு இந்தக் கடிதத்தை <strong><span style="color:#ff0000;">நான்</span></strong> துணிந்து எழுதுவதே ஆச்சிரியமாக இருக்கலாம். இதை எப்படித் தொடங்குவதென்று எனக்குத் தெரியவில்லை. அப்படியே, எப்படி முடிப்பதென்றும், எந்த இடத்தில் முடிப்பதென்றும் கூடத்தெரியாமல் போகலாம். <strong><span style="color:#ff0000;">உங்களை</span></strong> எப்படி அழைத்து இந்தக் கடிதத்தை ஆரம்பிப்பது என்று சிந்தித்துத் தயங்குவதிலேயே அதிக நேரம் வீணாகக் கழிந்து விட்டது." (அத்தியாயம் 7, பக்கம் 102)</div><br /><ol type="i"><br /><li>இவ்வுரையாடலில் வரும் '<strong><span style="color:#ff0000;">நான்</span></strong> மற்றும் <span style="color:#000000;">'<strong><span style="color:#ff0000;">உங்களை</span></strong>' யாவர்</span>? (2 புள்ளி)<br /><br /></li><li>இவ்வுரையாடலுக்குப் பின் நிகழ்ந்த சூழல் யாது?. (5 புள்ளி)<br /><br /></li></ol><div align="center"><span style="font-size:0;"></span><strong><span style="color:#6600cc;">பயிற்சி 9</span></strong><br /></div><div align="center"><strong><span style="color:#ff0000;">மாதிரி விடை</span></strong><br /><br /></div><div style="TEXT-INDENT: -25px">அ. மதுரை மீனாட்சியம்மன் கோயில்<br /><br /></div><br /><div style="TEXT-INDENT: -25px">ஆ.குறுந்தொகை, திருக்குறள்</div><br /><br /><div style="TEXT-INDENT: -25px">இ. மோகினியோடு கொண்டுள்ள நட்பும் காதலும்.<br />தாம் பெரிய மனிதராக எண்ணிக் கொண்டிருக்கும் கண்ணாயிரத்தைத் துச்சமாக நினைத்து நடத்தல்.<br />தன் தந்தை வேண்டாம் என்று கூறிய இந்த ஆசிரியர் தொழிலை இவன் தேர்ந்தெடுத்தது.<br />தாம் விரும்பாத குமரப்பனோடு சகவாசம்.<br /><span style="font-size:85%;"><span style="color:#3333ff;"><em>(ஏதேனும் இரண்டு காரணங்கள் எழுதினால் போதும்</em>)</span></span> </div><div style="TEXT-INDENT: -25px"></div><div style="TEXT-INDENT: -25px"></div><div style="TEXT-INDENT: -25px"></div><br /><div style="TEXT-INDENT: -25px">ஈ</div><ol type="i"><li>பாரதி, சத்தியமூர்த்தி</li><br /><br /><li>பாரதியின் ஆலோசனைக்கேற்ப சத்தியமூர்த்தி மல்லிகைப் பந்தல் கல்லூரியின் உரிதையாளர் பூபதிக்குக் கடிதம் எழுதுகிறான். அக்கடிதத்தில் விரிவிரையாளர் பணியின்பால் கொண்டுள்ள ஆர்வத்தையும் ஈடுபாட்டையும் உண்ரத்த முனைகின்றான். அதன் பயனாக அவனுக்கு நியமனக் கடிதம் கிடைக்கின்றது. அவனும் வேலை நிமித்தம் மல்லிகைப் பந்தலுக்குப் புறப்படுகிறான்.</li></ol><p align="right"><span style="color:#3333ff;"><span style="font-size:85%;"><em>(நன்றி. எஸ்.பி.எம் தமிழ் இலக்கிய வழிகாட்டி, நெகிரி மாநில இடைநிலைப்பள்ளிகளின் தமிழாசிரியர் ஒருங்கிணைப்பு மன்றம்.</em>)</span></span></p>spmilakiamhttp://www.blogger.com/profile/07727289203440877726noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6911837399102231693.post-8775256133580897762011-03-09T08:29:00.008+08:002011-03-09T20:58:11.540+08:00நாவல் (பொன் விலங்கு) பயிற்சி 8<div align="center"><span style="font-size:0;"></span><strong><span style="color:#6600cc;">பயிற்சி 8</span></strong><br /><br /></div><div align="center"><strong><span style="color:#ff0000;">பாகம் 1- பிரிவு ஒன்று (நாவல் : பொன் விலங்கு)</span></strong><br /><br /></div><div style="TEXT-INDENT: -25px">அ. விரிவுரையாளராக வரவேண்டுமென்ற சத்தியமூர்த்தியின் முயற்சிக்கு உறுதுணையாக இருந்தவர் யார்? (1 புள்ளி)</div><br /><br /><div style="TEXT-INDENT: -25px">ஆ. எதிர்மறை கதைமாந்தர்களில் இருவரைக் குறிப்பிடுக. (2 புள்ளி)</div><br /><br /><div style="TEXT-INDENT: -25px">இ. சத்தியமூர்த்திக்கும் கல்லூரி முதல்வருக்கும் இடையே கருத்து வேறுபாடு நிகழக் காரணம் யாது?(4 புள்ளி)</div><br /><br /><div style="TEXT-INDENT: -25px">ஈ. "நீயாவது 'டானா' உத்தியோகத்துக்கு வந்து சேராமல் நல்ல உத்தியோகமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும். ஏணியைப் போல <strong><span style="color:#ff0000;">நீ</span></strong> சாத்திய இடத்திலேயே சாத்திக்கிடக்க உன்னைக் கற்பிப்பவனாகக் கொண்டு பலர் மேலே ஏறிப் போவதைப் பார்க்கும் வயிறெரிகிற <strong><span style="color:#ff0000;">தொழில்</span></strong> இது." (அத்தியாயம் 4, பக்கம் 56)</div><br /><ol type="i"><br /><li>இவ்வுரையாடலில் வரும் '<strong><span style="color:#ff0000;">நீ</span></strong>' யார்? '<strong><span style="color:#ff0000;">தொழில்</span></strong>'எதைக் குறிக்கிறது? (2 புள்ளி)<br /><br /></li><li>இவ்வுரையாடலுக்குப் முன் நிகழ்ந்த சூழல் யாது?. (5 புள்ளி)<br /><br /></li></ol><div align="center"><span style="font-size:0;"></span><strong><span style="color:#6600cc;">பயிற்சி 8</span></strong><br /></div><div align="center"><strong><span style="color:#ff0000;">மாதிரி விடை</span></strong><br /><br /></div><div style="TEXT-INDENT: -25px">அ. பாரதி<br /><br /></div><br /><div style="TEXT-INDENT: -25px">ஆ.கண்ணாயிரம், மஞ்சள்பட்டி ஜமீந்தார்</div><br /><br /><div style="TEXT-INDENT: -25px">இ. மாணவர்களைக் கவரும் வகையில் செயல்படுவது.<br />பாரதியுடன் நெருக்கம்.<br />தன் அதிகாரத்திற்கு உட்பட்டு நடக்காமை.<br />மாணவர்களுக்காகப் போராடும் மனப்போக்கு.<br /><span style="font-size:85%;"><span style="color:#3333ff;"><em>(ஏதேனும் இரண்டு காரணங்கள் எழுதினால் போதும்</em>)</span></span> </div><div style="TEXT-INDENT: -25px"></div><div style="TEXT-INDENT: -25px"></div><div style="TEXT-INDENT: -25px"></div><br /><div style="TEXT-INDENT: -25px">ஈ</div><ol type="i"><li>சத்தியமூர்த்தி, விரிவிரையாளர்</li><br /><br /><li>மல்லிகைப்பந்தலு கலைக்கல்லூரியில் நடைபெற்ற நேர்க்காணலை முடித்துவிட்டு மதுரைக்குத் திரும்புகிறான் சத்தியமூர்த்தி. அவ்வேளையில் நேர்காணலின் போது நடந்த சம்பவங்கள் அவன் மனதை நெருடுகின்றன. இந்த விரிவுரையாளர் வேலை தனக்குக் கிடைக்குமோ கிடைக்காதோ எனும் கேள்வியும் அவன் மனத்தில் எழும்புகிறது. மேலும் தன் தந்தையின் எதிர்ப்பார்ப்பும் தன் மனக்கண் முன்னே நிழலாடுகிறது. இச்சூழலில் தன் தந்தை தான் செய்த இந்த ஆசிரியர் தொழிலை தன் மகனும் செய்யக்ககூடாது என்று கூறுகின்ற சூழலில் இவ்வரிகள் இடம்பெறுகின்றன.</li></ol><p align="right"><span style="color:#3333ff;"><span style="font-size:85%;"><em>(நன்றி. எஸ்.பி.எம் தமிழ் இலக்கிய வழிகாட்டி, நெகிரி மாநில இடைநிலைப்பள்ளிகளின் தமிழாசிரியர் ஒருங்கிணைப்பு மன்றம்.</em>)</span></span></p>spmilakiamhttp://www.blogger.com/profile/07727289203440877726noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6911837399102231693.post-39815278222107024602011-03-09T07:53:00.007+08:002011-03-09T20:58:36.131+08:00நாவல் (பொன் விலங்கு) பயிற்சி 7<div align="center"><span style="font-size:0;"></span><strong><span style="color:#6600cc;">பயிற்சி 7</span></strong><br /><br /></div><div align="center"><strong><span style="color:#ff0000;">பாகம் 1- பிரிவு ஒன்று (நாவல் : பொன் விலங்கு)</span></strong><br /><br /></div><div style="TEXT-INDENT: -25px">அ. சத்தியமூர்த்திக்குத் துணை நின்ற நண்பன் யார்? (1 புள்ளி)</div><br /><br /><div style="TEXT-INDENT: -25px">ஆ. மல்லிகைப்பந்தல் கல்லூரியில் பணியாற்றும் இரு விரிவுரையாளர்களின் பெயரைக் குறிப்பிடுக. (2 புள்ளி)</div><br /><br /><div style="TEXT-INDENT: -25px">இ. சத்தியமூர்த்தி விரிவுரையாளராக வரவேண்டுமென்று பாரதி எண்ணியதன் காரணம் என்ன?(4 புள்ளி)</div><br /><br /><div style="TEXT-INDENT: -25px">ஈ. "இப்போதும் ஏதோ ஒரு விதத்தில் <strong><span style="color:#ff0000;">தனக்கு</span></strong> எதிரே இருக்கிற கல்லூரி உரிமையாளர் அவர்களைத் தன்னுடைய வார்த்தைகள் பாதித்திருக்கின்றன என்பதை அவன் புரிந்துகொள்ள முடிந்தது. பெருந்தன்மையும் கொடைப்பண்பும் உள்ளவராகப் பலரால் புகழப்படும் இந்தக் <strong><span style="color:#ff0000;">கோடீஸ்வரரிடம்</span></strong> இப்படி பேசி இருக்க வேண்டாமோ என்று அவனுக்குச் சிறிது தயக்கமும் ஏற்பட்டது." (அத்தியாயம் 3, பக்கம் 40)</div><br /><ol type="i"><br /><li>இவ்வுரையாடலில் வரும் '<strong><span style="color:#ff0000;">தனக்கு</span></strong>' மற்றும் '<strong><span style="color:#ff0000;">கோடீஸ்வரர்</span></strong>' யாவர்? (2 புள்ளி)<br /><br /></li><li>இவ்வுரையாடலுக்குப் முன் நிகழ்ந்த சூழல் யாது?. (5 புள்ளி)<br /><br /></li></ol><div align="center"><span style="font-size:0;"></span><strong><span style="color:#6600cc;">பயிற்சி 7</span></strong><br /></div><div align="center"><strong><span style="color:#ff0000;">மாதிரி விடை</span></strong><br /><br /></div><div style="TEXT-INDENT: -25px">அ. குமரப்பன்<br /><br /></div><br /><div style="TEXT-INDENT: -25px">ஆ.சத்தியமூர்த்தி, சுந்தரேசன்</div><br /><br /><div style="TEXT-INDENT: -25px">இ. சத்தியமூர்த்தி ஒரு வசீகரமிக்க, அறிவார்ந்த இளைஞன்.<br />தமிழை நன்கு கற்றுணர்ந்தவன்.<br />ஆழ்ந்த அறிவும் உயர் பண்பும் கொண்டவன்.<br /><span style="font-size:85%;"><span style="color:#3333ff;"><em>(ஏதேனும் இரண்டு காரணங்கள் எழுதினால் போதும்</em>)</span></span> </div><div style="TEXT-INDENT: -25px"></div><div style="TEXT-INDENT: -25px"></div><div style="TEXT-INDENT: -25px"></div><br /><div style="TEXT-INDENT: -25px">ஈ</div><ol type="i"><li>சத்தியமூர்த்தி, பூபதி</li><br /><br /><li>நேர்க்காணலின் போது சத்தியமூர்த்தியின் இளமை ஒரு குறையாகக் கருதப்படுகிறது. சத்தியமூர்த்தி உணர்ச்சி வயப்படுவதோடு இளமை குறையள்ள என்றும், முதுமை நற்பண்புக்கு உத்தரவாதம் இல்லை என்று கூறுவதன்வழி பூபதியைப் புண்படுத்தக்கூடிய சூழல் ஏற்படுகின்றது. தான் கூறிய அந்த வார்த்தைகள் பூபதியின் மனத்தை புண்படுத்தியிருக்குமோ என்று எண்ணுகின்ற சூழலில் இவ்வரிகள் இடம்பெறுகின்றன.</li></ol><p align="right"><span style="color:#3333ff;"><span style="font-size:85%;"><em>(நன்றி. எஸ்.பி.எம் தமிழ் இலக்கிய வழிகாட்டி, நெகிரி மாநில இடைநிலைப்பள்ளிகளின் தமிழாசிரியர் ஒருங்கிணைப்பு மன்றம்.</em>)</span></span></p>spmilakiamhttp://www.blogger.com/profile/07727289203440877726noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6911837399102231693.post-44674371019308939632011-03-05T17:01:00.009+08:002011-03-05T18:05:44.546+08:00சிறுவர் இளையோர் சிறுகதைப் போட்டி<div align="center"><strong><span style="color:#3333ff;">மலேசித் தமிழ் எழுத்தாளர் சங்கமும் தமிழ் இலக்கிய ஆசிரியர் கழகமும் இணைந்து நடத்தும்</span></strong></div><div align="center"><strong><span style="color:#3333ff;"><span style="font-size:0;"></span></span><br /><span style="color:#ff0000;"><em>சிறுவர் – இளையோர் சிறுகதைப் போட்டி</em></span></strong><em> </em><br /><br /></div><div align="justify">சிறுவர், இளையோருக்கான படைப்புகளை உருவாக்கும் நோக்கத்தோடு மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கமும், மலேசியத் தமிழ் இலக்கிய ஆசிரியர் கழகமும் (இலக்கியகம்) இணைந்து RM10,000.00 பரிசு திட்டத்தில் சிறுகதைப் போட்டியை நடத்தவிருக்கின்றது. இப்போட்டிக்கு மலேசிய உமா பதிப்பகமும், மலேசியத் தமிழ்ப்பள்ளித் தலைமையாசிரியர் மன்றமும் ஆதரவு அமைப்புகளாக உள்ளன.<br /><br />மாணவர்களின் வாசிப்புக்கான இலக்கியங்கள் நம் நாட்டில் படைக்கப்படுவது அரிதாகி விட்ட காரணத்தினால் இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.<br /><br /><strong><span style="color:#009900;">நோக்கங்கள்</span></strong> </div><ol><li>மலேசியத் தமிழ் இலக்கியத் துறையில் ‘சிறுவர் & இளையோர் சிறுகதை (Cerpen Kanak-kanan & Cerpen Remaja) இலக்கியத்தை அறிமுகப்படுத்துதல். <div align="justify"></div></li><br /><li>தமிழ்ப்படைப்பாளர்களிடையே சிறுவர் & இளையோர் சிறுகதை இலக்கியம் படைத்தலை ஊக்குவித்தல்.</li><br /><br /><li>தமிழ்ச்சிறுவர்க்கும் தமிழ் இளையோருக்கும் இலக்கியச் சுவையூட்டி அதன்பால் ஆர்வத்தைத் தூண்டுதல்.</li><br /><br /><li>இலக்கியத்தின் வழி தமிழ்ச்சிறுவர், தமிழ் இளையோரின் சிந்தனையை வளப்படுத்திப் பண்படுத்துதல்.</li><br /><br /><li>இலக்கியத்தின்வழி தமிழ்ச்சிறுவர், தமிழ் இளையோரின் உணர்வுகளையும் சிக்கல்களையும் வெளிப்படுத்தி, பெற்றோரும் இளையோருடன் தொடர்புடைய மற்றோரும் அவற்றைத் தெளிவாகப் புரிந்து கொள்ள உதவுதல்.</li><br /><br /><li>தமிழ்ச்சிறுவர், தமிழ் இளையோர் எதிர்கொள்ளும் சிக்கல்களையும் அவற்றின் காரணங்களையும் மூலங்களையும் சிறுகதை இலக்கியத்தில் அடையாளங்காட்டுவதன்வழி, உரிய தரப்புகள் அவற்றுக்குப் பொருத்தமான தீர்வுகளைக்கான வழிவகுத்தல்.</li></ol><p><br /><strong><span style="color:#009900;">பிரிவுகள்</span></strong><br />இப்போட்டி இரு பிரிவாக நடத்தப்படும்.<br /><strong><span style="color:#ff6600;">முதல் பிரிவு</span></strong>: சிறுவர் சிறுகதை (Cerpen Kanak-kanak – 7 முதல் 12 வயதினர் வாசிப்புக்கான படைப்பிலக்கியம்)<br /><br /><span style="color:#ff6600;"><strong>இரண்டாம் பிரிவு</strong></span>: இளையோர் சிறுகதை (Cerpen Remaja – 13 முதல் 19 வயதினர் (பதின்ம வயதினர்) வாசிப்புக்கான படைப்பிலக்கியம்.<br /><br /><strong><span style="color:#009900;">பரிசுகள்</span></strong><br />மொத்தப் பரிசுத் தொகை: ரொக்கப் பணம் RM10,000.00<br /><br /><strong><span style="color:#ff0000;">சிறுவர் சிறுகதைக்கு: RM5,000.00</span></strong><br />10 சிறந்த சிறுகதைக்குத் தலா RM500.00 வீதம் வழங்கப்படும்.<br /><br /><strong><span style="color:#ff0000;">இளையோர் சிறுகதைக்கு: RM5,000.00</span></strong><br />10 சிறந்த சிறுகதைக்குத் தலா RM500.00 வீதம் வழங்கப்படும்.<br /><br /><span style="font-size:85%;"><strong><em>(குறிப்பு: முதல் இரண்டாம், மூன்றாம் பரிசுகள், ஆறுதல் பரிசுகள் என்று வகை பிரிக்கப்படாமல் தேர்வாகின்ற 10 சிறுகதைகளும் சிறந்த சிறுகதைகள் (பரிசுக்குரியவை) என நடுவர்களால் அறிவிக்கப்படும்)</em> </strong><br /></span><br /><strong><span style="color:#009900;">விதிமுறைகள்</span></strong><br /></p><ol><li>மலேசியத் தமிழ்ப் படைப்பாளர்கள் அனைவரும் இப்போட்டியில் பங்கு பெறலாம்</li><br /><br /><li>போட்டியில் பங்கு பெறுபவர் இப்போட்டிக்கான சிறுவர் சிறுகதை, இளையோர் சிறுகதை ஆகிய இரு பிரிவுகளிலும் பங்கு கொள்ளலாம்.</li><br /><br /><li>சிறுவர், பதின்ம அகவையினராகிய நம் நாட்டுத் தமிழ் இளையோர், இன்றைய பல்வகை மலேசிய வாழ்க்கைச் சூழல்களில் எதிர்கொள்கின்ற சவால்களையும் சிக்கல்களையும், உணர்வுகளையும், அதோடு அவர்கள அடைகின்ற சாதனைகள் அல்லது வெற்றிகளை மட்டுமே கருப்பொருளாகக் கொண்டு சிறுகதை எழுத வேண்டும்.</li><br /><br /><li>சிறுகதை நல்ல தமிழிலும், எளிய நடையிலும், மொழிநயம், கலைநயம், பொருள் நயம் (கருத்து நயம்) ஆகிய கூறுகள் பொருந்தியதாகவும் அமைய வேண்டுவதோடு அந்தந்த வயதினர்க்கேற்ற மொழியிலும் அவர்களின் மன நிலைக்கும் அனுபவத்திற்கும் ஏற்புடையதாகவும் அமைந்திருத்தல் வேண்டும்.</li><br /><br /><li>சிறுகதைப் படைப்பாளரின் சொந்தப் படைப்பாகவும், இதற்கு முன் அச்சேற்றப்படாததாகவும் இருத்தல் வேண்டும். (இதற்கான உறுதி மொழியை சிறுகதை படிவத்தின் இறுதியில் வழங்கி கையொப்பமிட்டிருக்க வேண்டும்). கதைப் படிவத்தில் கதைத் தலைப்பு மட்டுமே இருத்தல் வேண்டும்; எழுதியவரின் பெயர் அப்படிவத்தில் இருத்தல் கூடாது.</li><br /><br /><li>சிறுகதை அளவு.<br />A4 அளவுத்தாள்<br />12 புள்ளி எழுத்துரு அளவு (Font Size)<br />1.5 அளவு வரி இடைவெளி (Line Spacing)<br />1,000 சொற்கள் (சிறுவர் சிறுகதைக்கு)<br />1,500 சொற்கள் (இளையோர் சிறுகதைக்கு)<br /><br />கணினியில் தட்டச்சு செய்யப்பட்டு அச்சுப்படிவத்தை (Hard Copy) மட்டும் அனுப்பி வைக்க வேண்டும்.</li><br /><br /><li>சிறுகதையைப் பதிவுத் தபாலில் அனுப்பி வைக்க வேண்டும்.</li><br /><li>நடுவர்களின் முடிவே இறுதியானது.</li><br /><br /><li>படைப்பின் பதிப்புரிமை ஏற்பாட்டாளர்களுக்கு உரியதாகும். (படைப்பாளர், தங்களுடைய சிறுகதைகளை நூலாக்கும் உரிமையை ஏற்பாட்டாளர்களுக்கு வழங்கும் வகையில் உறுதிக்கடிதம் ஒன்றை வழங்கவேண்டும்.)</li><br /><br /><li>போட்டி விதிகளுக்கு உட்படாத படைப்புகள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டா.</li></ol><div align="center"><br /><em><strong><span style="font-size:85%;">போட்டிக்கான படைப்புகள் வந்து சேர வேண்டிய இறுதி நாள்: 31.3.2011<br />மேல்விபரங்களுக்கு</span>:</strong></em><br /><strong><span style="color:#cc33cc;">மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம்</span></strong><br />No.6-B, Jalan Murai 1, Batu Complex, Bt.3 Off Jalan Ipoh,<br />51200 Kuala Lumpur, Malaysia.<br />Tel/Fax: 03-6250 4544<br /><span style="font-size:85%;"><strong><em>H/P: 012-2668416 குணநாதன் H/P: 012-6025450 ந.பச்சைபாலன்</em></strong></span> </div><ol></ol>spmilakiamhttp://www.blogger.com/profile/07727289203440877726noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6911837399102231693.post-75841084708504186802011-03-01T21:05:00.001+08:002011-03-01T21:08:45.778+08:00நாவல் (பொன் விலங்கு) பயிற்சி 6<div align="center"><span style="font-size:0;"></span><strong><span style="color:#6600cc;">பயிற்சி 6</span></strong><br /><br /></div><div align="center"><strong><span style="color:#ff0000;">பாகம் 1- பிரிவு ஒன்று (நாவல் : பொன் விலங்கு)</span></strong><br /><br /></div><div style="TEXT-INDENT: -25px">அ. மல்லிகைப் பந்தலிலிருந்து சத்தியமூர்த்திக்கு எத்தனைக் கடிதங்கள் வந்தன? (1 புள்ளி)</div><br /><br /><div style="TEXT-INDENT: -25px">ஆ. பொன்விலங்கு நாவலை எழுதிய நா.பார்த்தசாரதியின் பிற நூல்கள் இரண்டிணைக் குறிப்பிடுக. (2 புள்ளி)</div><br /><br /><div style="TEXT-INDENT: -25px">இ. பணி ஓய்வுக்குப் பின் சத்தியமூர்த்தியின் தந்தையை வருத்திய இரண்டு கவலைகள் யாவை?(4 புள்ளி)</div><br /><br /><div style="TEXT-INDENT: -25px">ஈ. "சித்திரா பௌர்ணமியன்று மாலை ஒரு மணி தமுக்கம் பொருட்காட்சியில் அக்காவோட நாட்டியம் இருக்கு. அதுக்கு <strong><span style="color:#ff0000;">நீங்க</span></strong> அவசியம் வரணுமுன்னு அக்கா ஆசைப்படறாங்க! 'வேறே யாருக்கும் தெரியப்படாது. உடனே இதைப் போய் அவரிடம் சொல்லிவிட்டு வா'ன்னாங்க. இந்த வீட்டைக்கூட அக்கா சொன்ன அடையாளத்திலிருந்துதான் <strong><span style="color:#ff0000;">நான்</span></strong> தேடிக் கண்டுபிடித்தேன்." (அத்தியாயம் 12, பக்கம் 165)</div><br /><ol type="i"><br /><li>இவ்வுரையாடலில் வரும் '<strong><span style="color:#ff0000;">நீங்க</span></strong>' மற்றும் '<strong><span style="color:#ff0000;">நான்</span></strong>' யாவர்? (2 புள்ளி)<br /><br /></li><li>இவ்வுரையாடலுக்குப் பின் நிகழ்ந்த சூழல் யாது?. (5 புள்ளி)<br /><br /></li></ol><div align="center"><span style="font-size:0;"></span><strong><span style="color:#6600cc;">பயிற்சி 6</span></strong><br /></div><div align="center"><strong><span style="color:#ff0000;">மாதிரி விடை</span></strong></div><br /><br /><div style="TEXT-INDENT: -25px">அ. மூன்று<br /><br /></div><br /><div style="TEXT-INDENT: -25px">ஆ. குறிஞ்சி மலர், ஆத்மாவின் ராகங்கள்</div><br /><br /><div style="TEXT-INDENT: -25px">இ. வீட்டைக் கட்டி வாடகைக்கு விடுதல்.<br />மகள் ஆண்டாளின் திருமணம்.<br /><span style="font-size:85%;"><span style="color:#3333ff;"><em>(ஏதேனும் இரண்டு காரணங்கள் எழுதினால் போதும்</em>)</span></span> </div><div style="TEXT-INDENT: -25px"> </div><div style="TEXT-INDENT: -25px"> </div><div style="TEXT-INDENT: -25px"> </div><br /><div style="TEXT-INDENT: -25px">ஈ</div><ol type="i"><li>சிறுவன், சத்தியமூர்த்தி</li><br /><br /><li>ஒரு சிறுவன் சத்தியமூர்த்தியை வந்து சந்திக்கிறான். தமுக்கம் பொருட்காட்சியில் நடைபெறும் மோனியின் நடனத்தைக் காண வருமாறு மோகினி அழைத்ததாக அச்சிறுவன் கூறுகிறான். சத்தியமூர்த்தியோ சிறுவனிடம் தான் வருவதற்கு முயற்சி செய்கிறேன் என்று கூறுகிறான்.<br />சிறுவனோ சத்தியமூர்த்தி உறுதியா பதில் சொல்லும்வரை விடாப்பிடியாக இருக்கிறான். அப்போது,<br />பல வகையில் மனம் புண்பட்டுப் போய் இருக்கும் மோகினியைப் பற்றி யோசிக்கிறான்.<br />தானும் புண்படுத்தக்கூடாது என்று எண்ணி அந்தச் சிறுவனிடம் அவசியம் வருகிறேன் என்று கூறி அவனை வழியனுப்புகிறான்</li></ol><p align="right"><span style="color:#3333ff;"><span style="font-size:85%;"><em>(நன்றி. பகாங் மாநில இலக்கியப் பயிற்றி 1, பகாங் மாநில இடைநிலைப் பள்ளித் தமிழ்ப் பணித்தியம்.</em>)</span></span></p>spmilakiamhttp://www.blogger.com/profile/07727289203440877726noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6911837399102231693.post-66890046372944475102011-02-24T09:24:00.001+08:002011-02-24T09:25:49.293+08:00யார் தமிழ்படிப்பார் (கவிஞர் பொன்முடி) - கவிதையில் காணப்படும் சிறப்புகள்<div align="center"><strong><span style="color:#33cc00;">கவிஞர் பொன்முடி (மலேசியா) புனைந்த யார் தமிழ் படிப்பார் என்ற கவிதையில் காணப்படும் சிறப்புகள்</span></strong><br /></div><dl><dt><span style="color:#3333ff;">தலைப்பு</span><br /></dt><dd>யார் தமிழ் படிப்பார்</dd></dl><dl><br /><dt><span style="color:#3333ff;">கவிஞர்</span><br /></dt><dd>பொன்முடி(இயற்பெயர் : திரு.சுப்பிரமணியம்) - மலேசியா</dd></dl><dl><br /><dt><span style="color:#3333ff;">மையக்கரு</span><br /></dt><dd>மாணவர்கள் உயர்நிலைக் கல்வி வரை தமிழ்க்கல்வி பயில்வது தொடர்ந்தால்தான் நம் நாட்டில் தமிழ் வளரும்.</dd></dl><dl><br /><dt><span style="color:#3333ff;">யாப்பு வகை</span><br /></dt><dd>ஆசிரியப்பா</dd></dl><dl><br /><dt><span style="color:#3333ff;">அணிச்சிறப்புகள்</span><br /></dt><dd><span style="color:#ff0000;">உருவக அணி</span><br />உதாரணம்:<br /><em>"தமிழ்மொழித் தேனே"</em><br />தமிழ் மொழி தேனாக உருவகம்.<br /><br />உதாரணம்:<br /><em>"தாய்நலங் காப்பது சேய்கடன் தானே"</em><br />தமிழ் தாயாக உருவகம்.<br /><br />உதாரணம்:<br /><em>"தொடக்கப் பள்ளியில் தோளில் சுமந்ததை<br />இடைநிலைப் பள்ளியில் இறக்கி வைப்பதா"</em><br />தமிழ்மொழி, சுமக்கப்பட்டு பின் இறக்கி வைக்கப்பட்டதொரு பொருளாக உருவகம்.<br /><br />உதாரணம்:<br /><em>"தாயா அருமைச்சேயினுக் கெதிராய்த் தீயாய் மாறித் தீய்க்க<br />முனைவாள்"</em><br />தமிழ் தாயாக உருவகம்.<br /><br /><span style="color:#ff0000;">உவமை அணி</span><br />உதாரணம்:<br /><em>"பொற்றதாயைப் பிள்ளை மறுப்பது"</em><br />தாய் மொழியை மறுப்பது தாயை மறுப்பதைப் போன்றது.<br /><br />உதாரணம்:<br /><em>"உற்ற தாய் அன்பினை உதறிப் போவது"</em><br />தமிழ்ப்பற்றை உதறிப் போவது தாயன்பை உதறிப் போவதைப் போன்றது.<br />உதாரணம்:<br /><em>"சொந்தம் என்று வந்த பந்தம் சோறு போடுமா"</em><br />தமிழ்மொழி சோறு போடுமா என்று கேன்பதைப் போன்றது.<br /><br />உதாரணம்:<br /><em>"இமயச் செயல்"</em><br />இமயம் போன்ற உயர்ந்த செயல்.</dd><br /><p align="right"><strong><span style="font-size:85%;color:#000099;"><em>(நன்றி. எஸ்.பி.எம் தமிழ் இலக்கிய வழிகாட்டி, ஜோகூர் மாநில இடைநிலைப்பள்ளித் தமிழாசிரியர்கள் கழகம்)</em></span></strong></p></dl>spmilakiamhttp://www.blogger.com/profile/07727289203440877726noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6911837399102231693.post-73247359230783050102011-02-16T10:36:00.001+08:002011-02-16T10:43:36.495+08:00நாவல் (பொன் விலங்கு) பயிற்சி 5<div align="center"><span style="font-size:0;"></span><strong><span style="color:#6600cc;">பயிற்சி 5</span></strong></div><br /><div align="center"><strong><span style="color:#ff0000;">பாகம் 1- பிரிவு ஒன்று (நாவல் : பொன் விலங்கு)</span></strong></div><br /><br /><div style="TEXT-INDENT: -25px">அ. குத்துவிளக்குப் பத்திரிகையில் கேலிச்சித்திரம் வரைபவர் யார்? (1 புள்ளி)</div><br /><br /><div style="TEXT-INDENT: -25px">ஆ. ஏன் மோகினி சத்தியமூர்த்தியை இரண்டாவது முறையாகத் தன் வீட்டிற்கு அழைத்தாள்?.(2 புள்ளி)</div><br /><br /><div style="TEXT-INDENT: -25px">இ. குமரப்பன் மல்லிகைப் பந்தலுக்கு வருகை தந்ததன் காரணம் என்ன?(4 புள்ளி)</div><br /><br /><div style="TEXT-INDENT: -25px">ஈ. "தயக்கம் ஒன்றும் இல்லை! சட்டப்படி நாளை காலையிலிருந்துதான் நான் மல்லிகைப் பந்தல் கல்லூரியின் விரிவுரையாளன். இன்றே நான் தங்குவதற்கு இடமும் வசதிகளும் தேடித்தர வேண்டும் என்று கல்லூரி முதல்வரிடமிருந்தோ நிர்வாகியிடமிருந்தோ நான் உதவியை எதிர்பார்ப்பது எப்படி நியாயமாகும்? என் சொந்த ஏற்பாட்டில் நானே தங்கிக் கொள்வதுதான் முறை! இல்லையா?" என்று <strong><span style="color:#ff0000;">அவன்</span></strong> சிரித்துக் கொண்டே கேட்டபோது <strong><span style="color:#ff0000;">அவள்</span></strong> முகம் வாடிவிட்டது.(அத்தியாயம் 16, பக்கம் 218)</div><br /><ol type="i"><br /><li>இவ்வுரையாடலில் வரும் 'அவன்' மற்றும் 'அவள்' யாவர்? (2 புள்ளி)</li><br /><br /><li>இவ்வுரையாடலுக்குப் பின் நிகழ்ந்த சூழல் யாது?. (5 புள்ளி)<br /><br /></li></ol><div align="center"><span style="font-size:0;"></span><strong><span style="color:#6600cc;">பயிற்சி 5</span></strong><br /></div><div align="center"><strong><span style="color:#ff0000;">மாதிரி விடை</span></strong></div><br /><div style="TEXT-INDENT: -25px">அ. குமரப்பன்<br /><br /></div><div style="TEXT-INDENT: -25px">ஆ. நீலக்கல் பொருந்திய மோதிரத்தைச் சத்தியமூர்த்திக்கு அணிவிப்பதற்காக</div><br /><div style="TEXT-INDENT: -25px">இ. குத்துவிளக்குப் பத்திரிக்கையில் கேலிச்சித்திரம் வரையும் பணி.<br />நிர்வாக உரிமை மஞ்சள் பட்டி ஜமீந்தாருக்கு மாறியதால்.<br />நண்பன் சத்தியமூர்த்தி வேலை செய்யும் இடத்திற்குச் செல்லுதல்.<br />தனக்குத் தெரிந்த கைத்தொழிலைச் செய்ய எண்ணுதல்.<br /><span style="font-size:85%;"><span style="color:#3333ff;"><em>(ஏதேனும் இரண்டு காரணங்கள் எழுதினால் போதும்</em>)</span></span> </div><div style="TEXT-INDENT: -25px"> </div><br /><div style="TEXT-INDENT: -25px">ஈ.</div><br /><ol type="i"><li>சத்தியமூர்த்தி, பாரதி</li><br /><li>கல்லூரி நிர்வாகியின் மகள் என்ற முறையில் உபசாரம் செய்கிறான்.<br />சத்தியமூர்த்தி பாரதியின் பிடிவாதத்திற்கு உடன்படுகிறான்.<br />தனது காரில் கல்லூரிக்கு அனுப்பி வாட்ச்மேனை கொண்டு தங்குவதற்கு வசதி செய்து கொடுக்கிறாள். அதன்பிறகே அவள் வீடு திரும்புகிறாள்.</li></ol><p align="right"><span style="color:#3333ff;"><span style="font-size:85%;"><em>(நன்றி. பகாங் மாநில இலக்கியப் பயிற்றி 1, பகாங் மாநில இடைநிலைப் பள்ளித் தமிழ்ப் பணித்தியம்.</em>)</span></span></p>spmilakiamhttp://www.blogger.com/profile/07727289203440877726noreply@blogger.com0