Sunday, September 13, 2009

தேர்வை நோக்கி: பிரிவு ஒன்று (நாவல்) பயிற்சி 2

பயிற்சி 2
அ. பொன் விலங்கு நாவல் எந்த நோக்கு நிலையில் எழுதப்பட்டுள்ளது. (1 புள்ளி)

ஆ. கள்ள நோட்டு கும்பலுடன் தொடர்பு இருந்ததால் கைது செய்யப்பட்ட இருவரை குறிப்பிடுக. (2 புள்ளி)

இ. பாரதி எழுதிய இரண்டு கடிதங்களைச் சத்தியமூர்த்தி கிழித்து வீசியது ஏன்? (4 புள்ளி)

ஈ. "வாழ்வை வெறுத்து தற்கொலை செய்து கொள்ளவும் துணிந்து விடுகிற அளவுக்கு அந்தப்பெண் அந்தரங்கமாகத் துயரப்படுகிறாள் என்பதை அறியும்போது எனக்கு ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. ஆனாலும் துயரங்களை வெல்ல அவளால் முடியுமென்றுதான் எனக்குத் தோன்றுகிறது."(அத்தியாயம் 13, பக்கம் 117)

(i) இச்சூழலில் இம்பெறும் இருவரைக் குறிப்பிடுக. (2 புள்ளி)
(ii) இந்த உரையாடலுக்கு முன் நடந்த சூழல் யாது? (5 புள்ளி)

மாதிரி விடை

அ. எல்லாம் அறிந்த நோக்குநிலை / இறை நோக்கு நிலை / படர்கை நோக்கு நிலை (1 புள்ளி)

ஆ. மஞ்சள் பட்டி ஜமீந்தார், கண்ணாயிரம். (2 புள்ளி)

இ. மோகினியை தனைவியாக மனதில் ஏற்றுக்கொண்ட சத்தியமூர்த்தி பாரதியிடம் நெருங்கிப் பழகுவதைத் தவிர்க்கிறான் நோக்கத்தில் அக்கடித்ததைதக் கிழிக்கிறான். மேலும் பாரதி வீணாக தன் மீது அன்புகொண்டு ஏமாந்து போக்ககூடாது என்ற நல்ல எண்ணத்தில் அவள் கண்முன்னே அவள் எழுதுய கடிதங்களைக் கிழித்து வீசுகிறான். (4 புள்ளி)

ஈ.
(i) சத்தியமூர்த்தி, குமரப்பன்(2 புள்ளி)
(ii) மோகினியின் ஆண்டாள் நடனத்தைச் சத்ததியமூர்த்தி மெய்மறந்து இரசிக்கிறான். நடனம் முடிந்த புறகு மோகினியைச்சந்தித்து அவளைப் பாராட்டுகிறான். தன் நடனம் சிறப்பாக அமைவதற்கு அவன் வருகையே காரணம் என்று அவள் கூறுகிறாள். அப்பொழுது கண்ணாயிரம் அங்கு வரவே விரைவாக அவளிடம் விடைபெற்றுக்கொண்டு நண்பன் குமரப்பனோடு அவன் வெளியேறுகிறான். மோகினி பற்றி குமரப்பன் வினவ, இரயிலில் அவள் தற்கொலைக்கு முயன்றபொழுது அவளைக் காப்பாற்றிய நிகழ்வை சத்தியமூர்த்திக்கு விளக்குகிறான். அதைக் கேட்ட குமரப்பன் மேற்கண்டவாறு கூறுகிறான். (5 புள்ளி)

(பகாங் மாநில இலக்கியப் பயிற்றி 1 - நன்றி பகாங் மாநில இடைநிலைப்பள்ளி தமிழ்ப் பணித்தியம்)

2 comments:

  1. Intha ungkal payanam thodara en vaazththukkal. aduththa varudamum intha pani todara vendum enpathu en asai. nanri

    ReplyDelete
  2. தங்களின் கருத்துக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    ReplyDelete