Wednesday, May 18, 2011

தப்படி வைத்தவர் தப்புவதுண்டோ (கவிவாணர் ஐ.உலகநாதன்)

தப்படி வைத்தவர் தப்புவதுண்டோ!
(கவிவாணர் ஐ.உலகநாதன்)


வஞ்ச மனத்துட‎ன் வந்து புகுந்தவர்
வாலை யறுத்திட வாராயோ - வரும்
வெஞ்ச மருக்கிது வேளை பொருட்குவை
மேலும் குவித்துட‎ன் தாராயோ?


சேரு மலேசியச் சீர்மிகு நாட்டினைச்
சேரு மிடர்ப்பகை தீராயோ - உனை
வாரி யணைத்தவள் வாழ்வு சிறந்திட
வாரி நிதிக்குவை தாராயோ


ஆறு மலைத்தொடர் அ‎ன்பு மனத்தொடர்
ஆர்ந்த கலைத்தொடர் தாய்நிலமே - உனை
வேறு நிலத்தவர் வெல்ல முனைந்திடி‎ன்
வேட்டி லவர்தலை போய்விழுமே!


வீடு விளங்கிடப் பெற்ற குழந்தையை
நாடு விளங்கிடத் தாரீரோ - அவர்
பீடு விளங்கிடக் கேடு களைந்திடப்
பிள்ளையைப் பெற்றவர் வாரீரோ!


தங்க மெனத்தகும் துங்கு மொழிப்படி
சிங்க மெனப்புகக் கூறீரோ - நாம்
பொங்கி யெழுந்திடி‎ன் புல்ல ரிருப்பது
பூமியி னுள்ளெனக் கூறிரோ


அப்படி இப்படித் தப்படி வைத்தனர்
எப்படி யும்படி ஏறிடவே - அவர்
ஒப்பிட வீரம் உணர்த்திடு; வைத்திடும்
ஒவ்வொரு காலடி கூறிடவே!


(கவிதைப்பூங்கொத்து)

No comments:

Post a Comment