Tuesday, February 1, 2011

கவிஞர் க.பெருமாள் (மலேசியா) - அவரைப் பற்றிய சிறு குறிப்பு

கவிஞர் க.பெருமாள் (மலேசியா) - அவரைப் பற்றிய சிறு குறிப்பு


பிறப்பு

5-5-1938 கூலாத் தோட்டம், கோலக்குரோ, பேரா மாநிலம், மலேசியா


கல்வி / தொழில்

தமிழ்ப்பள்ளி மாணவர்; 7ஆம் வகுப்புவரை பயின்று ஆசிரியர் ஆயத்தப் பயிற்சி பெற்றவர்


துறைகள் / திறன்கள்

கவிதை, கட்டுரை


பணிகள்

1954இல் ஈவேரா பெரியாரின் உரையை நேரிடையாகக் கேட்ட உணர்வெழுச்சியில் திராவிட இயக்கத்தில் ஈடுபாடு கொண்டு இன்றுவரை மலேசியத் திராவிடர் இயக்கத்தில் பல நிலைகளில் தொடர்ந்து பணியாற்றுபவர். பினாங்குத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தில் இணைந்து பணியாற்றுவதுடன், பூக்களம் என்ற இலக்கிய அமைப்பின் தலைவராகவும் இருந்து வருகிறார்


படைப்புகள்

பள்ளி நாள்களில் மாணவர் மணி மன்ற மலரில் தொடங்கி, அறுபதுகளில் யாப்புப் பயின்று தொடர்ந்து கவிதை எழுதி வருபவர். தமது கவிதைகளைத் தொகுத்து 2004இல் நூலாக வெளியிட்டுள்ளார்.


சிறப்பு அடைகள்

கவியழகர்.


விருதுகள் / பரிசுகள்

பினாங்கு ஆளுநரிடமிருந்து PJK, PJM ஆகிய அரசவிருதுகளைப் பெற்றவர். பல்வேறு கவிதைப் போட்டிகளில் பரிசு வென்றுள்ளார்.

(நன்றி. கவிதைப் பூங்கொத்து நூலின் தொகுப்பாசிரியர் கவிஞர் செ.சீனி நைனா முகம்மது)

No comments:

Post a Comment