Wednesday, February 2, 2011

தமிழ்க்கவிதை (கவிஞர் க.பெருமாள் - கவிதையில் காணப்படும் சிறப்புகள்

கவிஞர் க.பெருமாள் (மலேசியா) புனைந்த தமிழ்க்கவிதை என்ற கவிதையில் காணப்படும் சிறப்புகள்


தலைப்பு

தமிழ்க்கவிதை


கவிஞர்

க.பெருமாள் (கவியழகர்) - மலேசியா


மையக்கரு

வாழ்வோடு கலந்து நிற்கும் நிகழ்ச்சியின் உணர்வு கலந்த வெளிப்பாடே தமிழ்க்கவிதை


யாப்பு வகை

ஆசிரியப்பா


அணிச்சிறப்புகள்

இரட்டுறமொழிதல் / சிலேடை
உதாரணம் :
எழுத்தசையும் சீர்தலையும்.

உவமை அணி
உதாரணம்:
"ஆழ்கடலில் முத்தெடுத்த களிப்புப் பொங்க"
ஆழமான கடலிலிருந்து முத்து எடுத்த மகிழ்ச்சி போன்று

உதாரணம்:
"அமுதப் பாட்டு"
அமுதம் போன்ற பாட்டு

உதாரணம்:
"யாழ்குழலின் இசையெல்லாம் இணைத்து வார்க்கும்
இன்சுவையின் எல்லைவரை கவிதை செல்லும்"

கவிதையின் சுவையானது யாழ் மற்றும் குழலின் இசையைப் போன்றது.

உருவக அணி
உதாரணம்:
"தொட்டதெல்லாம் துலக்கமுற ஒளியைப் பாய்ச்சும்"
கவிதை ஒளியைப் பாய்ச்சும் விளக்காக உருவகப்படுத்தப்பட்டுள்ளது.


(நன்றி. எஸ்.பி.எம் தமிழ் இலக்கிய வழிகாட்டி, ஜோகூர் மாநில இடைநிலைப்பள்ளித் தமிழாசிரியர்கள் கழகம்)

No comments:

Post a Comment