Wednesday, March 9, 2011

நாவல் (பொன் விலங்கு) பயிற்சி 7

பயிற்சி 7

பாகம் 1- பிரிவு ஒன்று (நாவல் : பொன் விலங்கு)

அ. சத்தியமூர்த்திக்குத் துணை நின்ற நண்பன் யார்? (1 புள்ளி)


ஆ. மல்லிகைப்பந்தல் கல்லூரியில் பணியாற்றும் இரு விரிவுரையாளர்களின் பெயரைக் குறிப்பிடுக. (2 புள்ளி)


இ. சத்தியமூர்த்தி விரிவுரையாளராக வரவேண்டுமென்று பாரதி எண்ணியதன் காரணம் என்ன?(4 புள்ளி)


ஈ. "இப்போதும் ஏதோ ஒரு விதத்தில் தனக்கு எதிரே இருக்கிற கல்லூரி உரிமையாளர் அவர்களைத் தன்னுடைய வார்த்தைகள் பாதித்திருக்கின்றன என்பதை அவன் புரிந்துகொள்ள முடிந்தது. பெருந்தன்மையும் கொடைப்பண்பும் உள்ளவராகப் பலரால் புகழப்படும் இந்தக் கோடீஸ்வரரிடம் இப்படி பேசி இருக்க வேண்டாமோ என்று அவனுக்குச் சிறிது தயக்கமும் ஏற்பட்டது." (அத்தியாயம் 3, பக்கம் 40)


  1. இவ்வுரையாடலில் வரும் 'தனக்கு' மற்றும் 'கோடீஸ்வரர்' யாவர்? (2 புள்ளி)

  2. இவ்வுரையாடலுக்குப் முன் நிகழ்ந்த சூழல் யாது?. (5 புள்ளி)

பயிற்சி 7
மாதிரி விடை

அ. குமரப்பன்


ஆ.சத்தியமூர்த்தி, சுந்தரேசன்


இ. சத்தியமூர்த்தி ஒரு வசீகரமிக்க, அறிவார்ந்த இளைஞன்.
தமிழை நன்கு கற்றுணர்ந்தவன்.
ஆழ்ந்த அறிவும் உயர் பண்பும் கொண்டவன்.
(ஏதேனும் இரண்டு காரணங்கள் எழுதினால் போதும்)

  1. சத்தியமூர்த்தி, பூபதி


  2. நேர்க்காணலின் போது சத்தியமூர்த்தியின் இளமை ஒரு குறையாகக் கருதப்படுகிறது. சத்தியமூர்த்தி உணர்ச்சி வயப்படுவதோடு இளமை குறையள்ள என்றும், முதுமை நற்பண்புக்கு உத்தரவாதம் இல்லை என்று கூறுவதன்வழி பூபதியைப் புண்படுத்தக்கூடிய சூழல் ஏற்படுகின்றது. தான் கூறிய அந்த வார்த்தைகள் பூபதியின் மனத்தை புண்படுத்தியிருக்குமோ என்று எண்ணுகின்ற சூழலில் இவ்வரிகள் இடம்பெறுகின்றன.

(நன்றி. எஸ்.பி.எம் தமிழ் இலக்கிய வழிகாட்டி, நெகிரி மாநில இடைநிலைப்பள்ளிகளின் தமிழாசிரியர் ஒருங்கிணைப்பு மன்றம்.)

No comments:

Post a Comment