Monday, March 14, 2011

கவிஞர் கவிக்கோ அப்துல் ரகுமான் (தமிழ்நாடு) - அவறைப் பற்றிய சிறு குறிப்பு

கவிஞர் கவிக்கோ அப்துல் ரகுமான் (தமிழ்நாடு) - அவரைப் பற்றிய சிறு குறிப்பு

பிறப்பு

9-11-1937 மதுரை, தமிழ்நாடு


கல்வி / தொழில்

முதுகலை (தமிழ்) பட்டமும், 'புதுக்கவிதையில் குறியீடு' என்ற ஆராய்ச்சிக்காக முனைவர் பட்டமும் பெற்றவர். வாணியம்பாடி இசுலாமியக் கல்லூரியில் பேராசிரியராகவும் பின் தமிழ்த்துறைத் தலைவராகவும் 30 ஆண்டுகள் பணிபுரிந்து இன்று முழுநேர இலக்கியப் பணியாற்றுகிறார்.


துறைகள் / திறன்கள்

கவிதை, உரைவீச்சு (புதுக்கவிதை), ஆய்வு.


பணிகள்

தமிழ்நாடு, தமிழன், அன்னம் விடுதூது ஏடுகளில் ஆசிரியர்; எண்ணற்ற ஆய்வுரைகள் ஆற்றியவர். உருதுக்கவிதைகளை மொழிபெயர்த்துள்ளார். புதிய இலக்கியக் கோட்பாடுகளை ஆய்ந்து படைப்புகளில் கையாண்டுள்ளார்.


படைப்புகள்

பால்வீதி, நேயர்விருப்பம், சுட்டுவிரல், ஆலாபனை, விதைபோல் விழுந்தவன், முத்தமிழின் முகவரி, பித்தன், சொந்தச்சிறைகள், அவளுக்கு நிலா என்று பெயர், முட்டைவாசிகள், மரணம் முற்றுப்புள்ளி அல்ல, விலங்குகள் இல்லாத கவிதை, கரைகளே ந்தியாவதில்லை ஆகியன இவருடைய நூல்கள்.


சிறப்பு அடை

கவிக்கோ.


விருதுகள் / பரிசுகள்

கவியரசர் விருது, ராணா இலக்கிய விருது, தமிழன்னை விருது, பாரதிதாசன் விருது, கலைமாமணி, அட்சர விருது, கலைஞர் விருது எனப் பல விருதுகள் பெற்றவர்.

(நன்றி. கவிதைப் பூங்கொத்து நூலின் தொகுப்பாசிரியர் கவிஞர் செ.சீனி நைனா முகம்மது)

No comments:

Post a Comment