Tuesday, April 28, 2009

நாடகம் பாகம் I ( கேள்வி (ஈ) i மற்றும் (ஈ) ii தொடர்பான பயிற்சி 4

கடந்த இரு வாங்களுக்கு முன் கொடுக்கப்பட்ட பயிற்சிக்கான மாதிரி விடை

பயிற்சிக்கும் முயற்சிக்கும் 3


(ஈ) கீழ்க்காணும் சூழலை வாசித்து, தொடர்ந்துவரும் வினாக்களுக்கு விடை எழுதுக.

"நீங்கள் வீரர்கள். உங்களுக்கு வீரம் பெருஞ்செல்வமென்பது உண்மையானால் நாங்கள் மண்வினைக் கலைஞர்களானாலும் கற்றவர்கள். எங்களுக்குக் கல்வி தானே பெருஞ்செல்வம்."
(காவிய நாயகி - காட்சி 14 - பக்கம் 47)

(i) இக்கூற்றில் இடம்பெற்ற இரண்டு கதைப்பாத்திரங்கள் யாவர்?

(ii) இவ்வாறு கூற நேர்ந்த முன் சூழல் யாது?

மாதிரி விடை

(i) பொன்னி, பெருஞ்சேரலாதன்

(ii) சோழ நாட்டின் வெண்ணிப் பறந்தலை ஊரைச் சேர்ந்த மண்வினைஞர் மருதவாணர், சேர நாட்டில் வாழும் தன் தங்கையின் அழைப்பை ஏற்று அறுவடைத் திருநாளைக் கொண்டாட தன் மகள் பொன்னியுடன் வருகிறார். சேர நாட்டின் இயற்கை அழகை இரசித்துக் கொண்டு காட்டு வழியே வரும் வேளையில், குதிரையில் சிலர் ஏறி வருவதைக் காண்கிறார்கள். வருபவர்கள் கள்வர்கள் என அஞ்சி மரத்தின் பின்னால் ஒளிந்துகொள்கின்றனர். அவர்களை வெளியே அழைத்து விசாரிக்கின்றனர் மாறுவேடத்தில் வந்த பெருஞ்சேரலாதனும் அவன் அமைச்சரும். வெளியே வரும் இருவரும் தங்களை அறிமுகம் செய்து கொண்டு வந்த நோக்கத்தைக் கூறுகின்றனர். தங்களைக் கள்வர்கள் என்று நினைத்ததோடு மட்டுமல்லாமல் கள்வர்கள் என்ற சொல்லைப் பயன்படுத்தியதால் அவர்களுக்கு அபராதம் விதிகின்ற சூழலில் மேற்காணும் கூற்று வெளிப்படுகிறது.

பயிற்சிக்கும் முயற்சிக்கும் 4

(ஈ) கீழ்க்காணும் சூழலை வாசித்து, தொடர்ந்துவரும் வினாக்களுக்கு விடை எழுதுக.

"நாம்தான் நச்சுக் கடலிலேயே நீந்தி விளையாடிக் கொண்டிருப்பவர்களாயிற்றே, அப்படியிருக்க அவன் வைக்கும் ஒரு துளி நஞ்சுக்காகவா நான் அச்சப்பட போகிறேன்."
((காவிய நாயகி - காட்சி 40 - பக்கம் 116)

(i) இக்கூற்றில் இடம்பெற்ற இரண்டு கதைப்பாத்திரங்கள் யாவர்?


(ii) இவ்வாறு கூற நேர்ந்த பின் சூழல் யாது?


(மேற்கண்ட சூழல் கேள்விக்கான விளக்கத்தை மாணவர்களுக்காக எழுதி அனுப்பியவர் ஆசிரியை புஷ்பவள்ளி சக்திவேல், SMK TAMAN SELESA JAYA, SKUDAI, JOHOR BAHRU)- நன்றி



No comments:

Post a Comment