Friday, April 10, 2009

நாடகம் பாகம் I ( கேள்வி (ஈ) i மற்றும் (ஈ) ii தொடர்பான பயிற்சி 3

கடந்த வாரம் கொடுக்கப்பட்ட பயிற்சிக்கான மாதிரி விடை

பயிற்சிக்கும் முயற்சிக்கும் 2


(ஈ) கீழ்க்காணும் சூழலை வாசித்து, தொடர்ந்துவரும் வினாக்களுக்கு விடை எழுதுக.

"எங்கள் சோழநாட்டு நெற்பயிருக்குக் கூடப் பகைவரை எதிர்த்துப் போராடும் வல்லமை உண்டு. எனவே வந்திருப்பவள் பெண்தானே என்று சொற்களைச் சிதறவிடாதே. முதலில் உங்கள் மன்னரை நான் சந்திக்க வந்திருப்பதாகப் போய்ச் சொல்"
(காவிய நாயகி - காட்சி 33 - பக்கம் 104)

(i) இக்கூற்றில் இடம்பெற்ற இரண்டு கதைப்பாத்திரங்கள் யாவர்?

(ii) இவ்வாறு கூற நேர்ந்த முன் சூழல் யாது?

மாதிரி விடை

(i) பொன்னி, சேரனின் மெய்க்காவல் வீரன்

(ii) போரே இல்லாத உலகைக்கான விரும்பும் பொன்னியின் கவிதையைப் படித்து மகிழ்கிறார் மருதவாணர். அப்பொழுது சந்தைக்குப் போக பொன்னி தந்தையை அழைக்கிறாள். சேர நாட்டுப் படைகளும் சோழநாட்டுப் படைகளும் போருக்குத் தயாராகி விட்டதால் வெளியில் போக வேண்டாமென மருதவாணர் தடுக்கிறார். ஆயினும், அன்னை மண்ணைக் கவர படையெடுத்து வந்த சேர மன்னனைச் சந்தித்து வசைப்பாடப் போவதாகச் சொல்லி பொன்னி போர்களத்தை நோக்கிச் செல்கிறாள். மன்னரைத் தடுக்க முடியாது என்று வீரன் ஒருவன் பொன்னியைத் தடுக்கின்ற சூழலில் மேற்காணும் கூற்று வெளிப்படுகிறது.

பயிற்சிக்கும் முயற்சிக்கும் 3

(ஈ) கீழ்க்காணும் சூழலை வாசித்து, தொடர்ந்துவரும் வினாக்களுக்கு விடை எழுதுக.

"நீங்கள் வீரர்கள். உங்களுக்கு வீரம் பெருஞ்செல்வமென்பது உண்மையானால் நாங்கள் மண்வினைக் கலைஞர்களானாலும் கற்றவர்கள். எங்களுக்குக் கல்வி தானே பெருஞ்செல்வம்."
(காவிய நாயகி - காட்சி 14 - பக்கம் 47)

(i) இக்கூற்றில் இடம்பெற்ற இரண்டு கதைப்பாத்திரங்கள் யாவர்?


(ii) இவ்வாறு கூற நேர்ந்த முன் சூழல் யாது?


(மேற்கண்ட சூழல் கேள்விக்கான விளக்கத்தை மாணவர்களுக்காக எழுதி அனுப்பியவர் ஆசிரியை புஷ்பவள்ளி சக்திவேல், SMK TAMAN SELESA JAYA, SKUDAI, JOHOR BAHRU)- நன்றி



No comments:

Post a Comment