Thursday, January 27, 2011

நாவல் (பொன் விலங்கு) பயிற்சி 3

பயிற்சி 3
பாகம் 1- பிரிவு ஒன்று (நாவல் : பொன் விலங்கு)


அ. மோகினியின் தாயார் பெயர் என்ன?.(1 புள்ளி)


ஆ. பொன்விலங்கு நாவலில் இடம்பெற்றுள்ள இரண்டு முக்கிய இடப் பின்னணிகள் யாவை?.(2 புள்ளி)


இ. சத்தியமூர்த்தி, மோகினியின்பால் கொண்ட காதலைச் சந்தேகிக்கக் காரணம் என்ன?(4 புள்ளி)


ஈ. "பார்த்தாயா தம்பி, காரும் பங்களாவும் டெலிபோனும் வைத்துக் கொண்டு உலகறிய நல்லவர்களாகவும் மனம் அறிய பொய்யர்களாகவும் வாழ்ந்து மிகவும் கௌரவமாகத் திருடிக் கொண்டிருக்கின்ற பலர் சமூகத்தில் பிடிபட மாட்டார்கள். உன்னைப்போல் வயிறு பசித்துப்போய் திருடுகிற அப்பாவிகள்தான் பிடிப்பட்டுத் திருட்டுப் பட்டமும் கட்டிக் கொள்கிறார்கள். இதோ, இப்படி என்னோடு வா".(அத்தியாயம் 1, பக்கம் 16)

  1. இவ்வுரையாடலில் வரும் 'என்னோடு' யாரைக் குறிப்பிடுகிறது. (2 புள்ளி)


  2. இவ்வாறு கூற நேர்ந்த முன் சூழல் யாது?. (5 புள்ளி)


பயிற்சி 3
மாதிரி விடை

அ. முத்தழகம்மாள்


ஆ. மல்லிகைப் பந்தல், மதுரை


இ. மஞ்சள்பட்டி ஜமிந்தார், மோகினி இரிவரும் இணைந்திருக்கும் நிழற்படம்.

மஞ்சள்பட்டி ஜமிந்தாருக்கு மோகினி தேநீர் கொடுக்கும் காட்சி.
(ஏதேனும் இரண்டு காரணங்கள் எழுதினால் போதும்)

ஈ.
  1. சத்தியமூர்த்தி

  2. மறுநாள் மல்லிகைப் பந்தலில் நடைபெறவிருக்கும் நேர்க்காணலில் கலந்து கொள்ளும் நோக்கத்தில் சிறிது நேரம் இரயில் நிலையத்தில் கண்ணயர்ந்து விடுகிறான் சத்தியமூர்த்தி. தன் சூட்கேஸ் உருவப்படும் போது தன்னிலை உணர்ந்து விழித்துக் கொள்கிறான். திருடனைக் கையும் களவுமாகப் பிடிக்கிறான். கருணையுடனும் பரிவுடனும் அத்திருடனை அணுகி விசாரிக்கின்ற சூழலில் இவ்வரிகள் இடம்பெறுகின்றன.

(நன்றி. எஸ்.பி.எம். தமிழ் இலக்கிய வழிகாட்டி - நெகிரி மாநில இடைநிலைப்பள்ளிகளின் தமிழாசிரியர் ஒருங்கிணைப்பு மன்றம்.)

No comments:

Post a Comment