Monday, May 18, 2009

தேர்வை நோக்கி: பிரிவு ஒன்று (நாவல்) பயிற்சி 1

பயிற்சி 1
அ. பொன் விலங்கு நாவலின் முதன்மைக் கதைமாந்தர் யார்? (1 புள்ளி)

ஆ. பொன் விலங்கு நாவலில் பயன்படுத்தப்பட்டுள்ள இரண்டு உத்திகளைக் குறிப்பிடுக. (2 புள்ளி)

இ. கல்லூரி நிர்வாகி, மஞ்சள் பட்டி ஜமீந்தார் ஆகிய இருவரும் சத்தியமூர்த்தியை பழிவாங்க முனைந்ததற்கான காரணம் என்ன? (4 புள்ளி)

ஈ. "நீ ஏன் இப்படி இருக்கே? பணமும் மதிப்பும் உள்ள பெரிய மனுசன் வந்து மணிக்கணக்காகக் காத்திருக்காங்க. நான் படிச்சுப் படிச்சுச் சொல்றேன் குத்துக்கல்லாட்டமாச் சும்மா இருக்கியே... கலியாணத்துக்கு ஆடணுமின்னு பேச வந்திருக்காரு."(அத்தியாயம் ,பக்கம் 274)

(i) இந்த உரையாடலில் இடம்பெறும் இருவரைக் குறிப்பிடுக. (2 புள்ளி)
(ii) இந்த உரையாடலுக்கு முன் நடந்த சூழல் யாது? (5 புள்ளி)

மாதிரி விடை

அ. சத்தியமூர்த்தி (1 புள்ளி)

ஆ. பின்நோக்கு உத்தி, கடித உத்தி. (2 புள்ளி)

இ. சத்தியமூர்த்தி மல்லிகைப் பந்தல் கலைக்கல்லூரிக்கு விரிவுரையாளராக வரிவதைத் தொடக்கத்திலிருந்தே கல்லூரி முதல்வர் விரும்பவில்லை. பின்னர், சத்தியமூர்த்தி சிறந்த போதனையால் மாணவரிடையே நன்மதிப்பு பெறுவது கல்லூரி நிர்வாகிக்குப் பொறாமையைத் தருகிறது. அவர் அவனைப் பழிவாங்கக் காத்திருந்தார். ஜமீந்தார் மோகினியைத் தாரமாக்க நினைத்தார். சத்தியமூர்த்தி அதற்குத் தடையாக இருந்தான். பாராட்டு நிகழ்வில் சத்தியமூர்த்தி ஜமீந்தாரைப் பாராட்டாமல் வெளியேறியது ஜமீந்தாருக்குக் கோபம். எனவே, இருவரும் சத்தியமூர்த்தியைப் பழிவாங்க முனைகின்றனர். (4 புள்ளி)

ஈ.
(i) மோகினி, முத்தழகம்மாள் (2 புள்ளி)
(ii) சத்தியூர்த்தியின் பிரிவு மோகினிக்கு வேதனையைத் தருகிறது. தன் கையில் அவன் தந்த மோதிரத்தோடும் நெஞ்சில் வேதனையோடும் இருக்கிறாள். அப்பொழுது கண்ணாயிரம் தனவணிகர் ஒருவரை அழைத்து வருகிறார். தனவணிகர் வீட்டுத் திருமணத்தில் மோகினியின் நாட்டியத்தை ஏற்பாடு செய்ய கண்ணாயிரம் முயற்சி செய்கிறார். மோகினிக்கு அவருடன் பேச விருப்பம் இல்லை. எனவே, கோயிலுக்குப் போய் வருகிறாள். தலைவலி என்ற சாக்குச் சொல்லி மாடிக்குப் போகிறாள். அவ்வேளையில் மோகினியின் அம்மா அவர்களுடன் பேசும்படி வற்புறுத்துகின்ற சூழலில் மேற்காணும் கூற்று வெளிப்படுகிறது. (5 புள்ளி)

(இதனை அனுப்பி உதவியவர் ஆசிரியர் இளந்தமிழ், கோலாலும்பூர்)

No comments:

Post a Comment