Tuesday, January 25, 2011

நாவல் (பொன் விலங்கு) பயிற்சி 1

பயிற்சி 1
பாகம் 1- பிரிவு ஒன்று (நாவல் : பொன் விலங்கு)


அ. பொன் விலங்கு நாவலில் பயன்படுத்தப்பட்டுள்ள உத்திகளில் ஒன்றைக் குறிப்பிடுக.(1 புள்ளி)

ஆ. மல்லிகைப் பந்தல் கல்லூரியில் சத்தியமூர்த்தியை வெறுக்கும் இரு கதைமாந்தர்களிக் குறிப்பிடுக.(2 புள்ளி)


இ. சத்தியமூர்த்தியை உதவி விடுதி காப்பாளராக நியமிக்க பூபதி கூறிய காரணங்கள் என்ன?(4 புள்ளி)


ஈ. "இப்போது நான் சொல்லப்போவதெல்லாம் நம்முடைய 'டமில் டிபார்ட்மெண்ட்' டின் நன்மைக்காகத்தான். தயவு செய்து இனிமேல் எந்த வகுப்புக்குப் போனாலும் நம்முடைய டிபார்ட்மெண்டுக்குத் தொடர்புடைய ஏதாவது வரு பாடத்தை நடத்திவிட்டு வாருங்கள் .(அத்தியாயம் 20, பக்கம் 260)


  1. இவ்வுரையாடலில் இடம்பெறும் இருவரைக் குறிப்பிடுக. (2 புள்ளி)


  2. இந்த உரையாடலுக்குப் பின் நிகழ்ந்த சூழலை விளக்குக. (5 புள்ளி)


பயிற்சி 1
மாதிரி விடை

அ. உரையாடல்


ஆ. கல்லூரி முதல்வர், கல்லூரி வார்டன்


இ. வைஸ் பிரின்ஸ்பாலுக்கு வயதாகிவிட்டது.
விடுதியை ஓடியாடி அலைந்து கவனமாக பார்க்க முடியவில்லை.
மாணவர்கள் இன்னிம் சிரத்தையோடு கவனித்துக்கொள்ள வேண்டும்
(ஏதேனும் இரண்டு காரணங்கள் எழுதினால் போதும்)

ஈ.

  1. காசிலிங்கனார், சத்தியமூர்த்தி


  2. காசிலிங்கனார் சத்தியமூர்த்திக்கு அறிவுரை கூறினார். அவரின் அறிவுரையைக் கேட்ட சத்தியமூர்த்திக்குச் சிரிப்பு வந்துவிட்டது. தன்னைத் தவறாக நினைப்பார் என்பதற்காக தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டான். அவரிடமிருந்து விடைபெற்றுக் கொண்டு நகர்ந்தான் சத்தியமூர்த்தி.

(நன்றி. இலக்கியப் பயிற்றி 1 - பகாங் மாநில இடைநிலைப் பள்ளித் தமிழ்ப் பணித்தியம்)

No comments:

Post a Comment