Sunday, January 30, 2011

நாவல் (பொன் விலங்கு) பயிற்சி 4

பயிற்சி 4
பாகம் 1- பிரிவு ஒன்று (நாவல் : பொன் விலங்கு)


அ. சத்தியமூர்த்தியின் இலட்சியத்திற்குத் தடையாக இருந்த முக்கியக் கதைமாந்தர் யார்(1 புள்ளி)


ஆ. சத்தியமூர்த்தியின்பால் காதல் கொண்ட இரு பெண்களைக் குறிப்பிடுக?.(2 புள்ளி)


இ. சத்தியமூர்த்தி தமிழ் விரிவுரையாளராவதற்கு அவன் தந்தை எதிர்ப்புத் தெரிவிக்கக் காரணம் என்ன?(4 புள்ளி)


ஈ. "இந்தக் கேள்வியை உங்களிடம் கேட்பதற்காக நீங்கள் வருத்தப்படக்கூடாது. நீங்கள் படித்துப் பட்டம் பெற்ற கல்லூரி அரசியல் குழப்பங்களுக்கும் மாணவர்களின் அடிதடி வம்புகளுக்கும் கால் நூற்றாண்டு காலமாகத் தமிழ் நாட்டில் பெயர் பெற்ற கல்லூரியாயிற்றே! முதல் வகுப்பில் தேறி இருந்தாலும் நிறைய நற்சான்றிதழ்களும், பதக்கங்களும் பரிசுகளும் பெற்றிருந்தாலும் நீங்கள் படித்தக் கல்லூரியைப் பற்றி நினைக்கும்போது நான் பயப்படுவது நியாயம்தானே?".(அத்தியாயம் 2, பக்கம் 27)
  1. இவ்வுரையாடலில் வரும் 'நான்' மற்றும் 'நீங்கள்' யாவர்? (2 புள்ளி)


  2. இவ்வுரையாடலுக்குப் பின் நிகழ்ந்த சூழல் யாது?. (5 புள்ளி)


பயிற்சி 4
மாதிரி விடை

அ. கண்ணாயிரம்


ஆ. மோகினி, பாரதி


இ. ஏழ்மையிலிருந்து மீள முடியாது.
சமுதாயத்தில் அங்கீகாரமும் மரியாதையும் கிடைக்காமை.
ஏணியைப்போல் பிறரை உயர்த்திவிட்டு தான் மட்டும் எந்த உயர்வுமில்லாமல் இருக்கும் தொழில் என்பதால்.
(ஏதேனும் இரண்டு காரணங்கள் எழுதினால் போதும்)

ஈ.
  1. சத்தியமூர்த்தி, பூபதி


  2. ஒழுக்கத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் கல்லூரி என்பதாலும், அக்கல்லூரியைச் சிறப்பாக நடத்திவரும் பூபதியும், தன்னை இந்த இலட்சியக் கல்லூரியில் வேலை செய்ய ஆர்வப்படுத்துவதற்குக் காரணமென்று சத்தியமூர்த்தி பதிலுரைக்கிறான்.நேர்க்காணலில் அறிவுப்பூர்வமாகவும் திறமையாகவும் பதிலளிக்கிறான்; துணிவுடன் வாதிடுகிறான்: மதுரைக்குத் திரும்பி தன் நியமனக் கடிதத்திற்காக்க் காத்திருக்கிறான்.

(நன்றி. எஸ்.பி.எம். தமிழ் இலக்கிய வழிகாட்டி - நெகிரி மாநில இடைநிலைப்பள்ளிகளின் தமிழாசிரியர் ஒருங்கிணைப்பு மன்றம்.)

No comments:

Post a Comment