Wednesday, January 26, 2011

நாவல் (பொன் விலங்கு) பயிற்சி 2

பயிற்சி 2
பாகம் 1- பிரிவு ஒன்று (நாவல் : பொன் விலங்கு)


அ. பொன் விலங்கு நாவல் எந்த நோக்கு நிலையில் எழுதப்பட்டுள்ளது.(1 புள்ளி)

ஆ. கள்ள நோட்டுக் கும்பலுடன் தொடர்பு இருந்ததால் கைது செய்யப்பட்ட இருவரைக் குறிப்பிடுக.(2 புள்ளி)


இ. பாரதி எழுதிய இரண்டு கடிதங்களைச் சத்தியமூர்த்தி கிழித்து வீசியது ஏன்? (4 புள்ளி)


ஈ. "வாழ்வை வெறுத்துத் தற்கொலை செய்து கொள்ளவும் துணிந்து விடுகிற அளவுக்கு அந்தப் பெண் அந்தரங்கமாகத் துயரப்படுகிறாள் என்பதை அறியும்போது எனக்கு ஆச்சிரியமாகத்தான் இருக்கிறது. ஆனாலும் துயரங்களை வெல்ல ஆவளால் முடியுமென்றுதான் எனக்குத் தோன்றுகிறது.(அத்தியாயம் 13, பக்கம் 117)


  1. இவ்வுரையாடலில் இடம்பெறும் இருவரைக் குறிப்பிடுக. (2 புள்ளி)


  2. இந்த உரையாடலுக்குப் முன் நிகழ்ந்தவற்றை எழுதுக. (5 புள்ளி)


பயிற்சி 2
மாதிரி விடை

அ. எல்லாம் அறிந்த நோக்குநிலை / இறை நோக்குநிலை / படர்க்கை நோக்கிநிலை


ஆ. மஞ்சள்பட்டி ஜமிந்தார், கண்ணாயிரம்


இ. மோகினியை மனைவியாக மனதில் ஏற்றுக் கொண்ட சத்தியமூர்த்தி பாரதியிடம் நெறுங்கிப் பழகுவதைத் தவிர்க்க.

சத்தியமூர்த்தியன் மனத்தில் இனியும் பாரதிக்கு இடமில்லை என்பதை உணர்த்த.
(ஏதேனும் இரண்டு காரணங்கள் எழுதினால் போதும்)

ஈ.
  1. சத்தியமூர்த்தி, குமரப்பன்


  2. மோகினி ஆண்டாள் நடனத்தைச் சத்தியமூர்த்தி மெய்மறந்து இரசிக்கிறான். நடனம் முடிந்த பிறகு மோகினியைச் சந்தித்து அவளைப் பாராட்டுகிறான். தன் நடனம் சிறப்பாக அமைந்ததற்கு அவன் வருகையே காரணம் என்று அவள் கூறுகிறாள். அப்பொழுது கண்ணாயிரம் அங்கு வரவே விரைவாக அவளிடம் விடைபெற்று நண்பன் குமரப்பனோடு அவன் வெளியேறுகிறான். மோகினி பற்றி குமரப்பன் வினவ இரயிலில் அவள் தற்கொலைக்கு முயன்றபொழுது தான் அவளைக் காப்பாற்றிய நிகழ்வை சத்தியமூர்த்தி விளக்கிகிறான். அதைக் கேட்ட குமரப்பன் மேற்கண்டவாறு கூறுகிறான்.

(நன்றி. இலக்கியப் பயிற்றி 1 - பகாங் மாநில இடைநிலைப் பள்ளித் தமிழ்ப் பணித்தியம்)

No comments:

Post a Comment