Wednesday, March 9, 2011

நாவல் (பொன் விலங்கு) பயிற்சி 8

பயிற்சி 8

பாகம் 1- பிரிவு ஒன்று (நாவல் : பொன் விலங்கு)

அ. விரிவுரையாளராக வரவேண்டுமென்ற சத்தியமூர்த்தியின் முயற்சிக்கு உறுதுணையாக இருந்தவர் யார்? (1 புள்ளி)


ஆ. எதிர்மறை கதைமாந்தர்களில் இருவரைக் குறிப்பிடுக. (2 புள்ளி)


இ. சத்தியமூர்த்திக்கும் கல்லூரி முதல்வருக்கும் இடையே கருத்து வேறுபாடு நிகழக் காரணம் யாது?(4 புள்ளி)


ஈ. "நீயாவது 'டானா' உத்தியோகத்துக்கு வந்து சேராமல் நல்ல உத்தியோகமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும். ஏணியைப் போல நீ சாத்திய இடத்திலேயே சாத்திக்கிடக்க உன்னைக் கற்பிப்பவனாகக் கொண்டு பலர் மேலே ஏறிப் போவதைப் பார்க்கும் வயிறெரிகிற தொழில் இது." (அத்தியாயம் 4, பக்கம் 56)


  1. இவ்வுரையாடலில் வரும் 'நீ' யார்? 'தொழில்'எதைக் குறிக்கிறது? (2 புள்ளி)

  2. இவ்வுரையாடலுக்குப் முன் நிகழ்ந்த சூழல் யாது?. (5 புள்ளி)

பயிற்சி 8
மாதிரி விடை

அ. பாரதி


ஆ.கண்ணாயிரம், மஞ்சள்பட்டி ஜமீந்தார்


இ. மாணவர்களைக் கவரும் வகையில் செயல்படுவது.
பாரதியுடன் நெருக்கம்.
தன் அதிகாரத்திற்கு உட்பட்டு நடக்காமை.
மாணவர்களுக்காகப் போராடும் மனப்போக்கு.
(ஏதேனும் இரண்டு காரணங்கள் எழுதினால் போதும்)

  1. சத்தியமூர்த்தி, விரிவிரையாளர்


  2. மல்லிகைப்பந்தலு கலைக்கல்லூரியில் நடைபெற்ற நேர்க்காணலை முடித்துவிட்டு மதுரைக்குத் திரும்புகிறான் சத்தியமூர்த்தி. அவ்வேளையில் நேர்காணலின் போது நடந்த சம்பவங்கள் அவன் மனதை நெருடுகின்றன. இந்த விரிவுரையாளர் வேலை தனக்குக் கிடைக்குமோ கிடைக்காதோ எனும் கேள்வியும் அவன் மனத்தில் எழும்புகிறது. மேலும் தன் தந்தையின் எதிர்ப்பார்ப்பும் தன் மனக்கண் முன்னே நிழலாடுகிறது. இச்சூழலில் தன் தந்தை தான் செய்த இந்த ஆசிரியர் தொழிலை தன் மகனும் செய்யக்ககூடாது என்று கூறுகின்ற சூழலில் இவ்வரிகள் இடம்பெறுகின்றன.

(நன்றி. எஸ்.பி.எம் தமிழ் இலக்கிய வழிகாட்டி, நெகிரி மாநில இடைநிலைப்பள்ளிகளின் தமிழாசிரியர் ஒருங்கிணைப்பு மன்றம்.)

No comments:

Post a Comment