Monday, March 14, 2011

நாவல் (பொன் விலங்கு) பயிற்சி 9

பயிற்சி 9

பாகம் 1- பிரிவு ஒன்று (நாவல் : பொன் விலங்கு)

அ. இரயில் சந்திப்புக்குப் பிறகு சத்தியமூர்த்தி மோகினியை எந்தக் கோயிலில் சந்தித்தான்? (1 புள்ளி)


ஆ. பொன் விலங்கு நாவலில் நாவலாசிரியர் எடுத்துக் கையாண்ட இரண்டு தமிழ் இலக்கிய நூல்களைக் குறிப்பிடவும். (2 புள்ளி)


இ. சத்தியமூர்த்திக்கும் தன் தகப்பனாருக்குமிடையே கருத்து வேறுபாடு உருவாகக் காரணம் யாது?(4 புள்ளி)


ஈ. "உங்களுக்கு இந்தக் கடிதத்தை நான் துணிந்து எழுதுவதே ஆச்சிரியமாக இருக்கலாம். இதை எப்படித் தொடங்குவதென்று எனக்குத் தெரியவில்லை. அப்படியே, எப்படி முடிப்பதென்றும், எந்த இடத்தில் முடிப்பதென்றும் கூடத்தெரியாமல் போகலாம். உங்களை எப்படி அழைத்து இந்தக் கடிதத்தை ஆரம்பிப்பது என்று சிந்தித்துத் தயங்குவதிலேயே அதிக நேரம் வீணாகக் கழிந்து விட்டது." (அத்தியாயம் 7, பக்கம் 102)


  1. இவ்வுரையாடலில் வரும் 'நான் மற்றும் 'உங்களை' யாவர்? (2 புள்ளி)

  2. இவ்வுரையாடலுக்குப் பின் நிகழ்ந்த சூழல் யாது?. (5 புள்ளி)

பயிற்சி 9
மாதிரி விடை

அ. மதுரை மீனாட்சியம்மன் கோயில்


ஆ.குறுந்தொகை, திருக்குறள்


இ. மோகினியோடு கொண்டுள்ள நட்பும் காதலும்.
தாம் பெரிய மனிதராக எண்ணிக் கொண்டிருக்கும் கண்ணாயிரத்தைத் துச்சமாக நினைத்து நடத்தல்.
தன் தந்தை வேண்டாம் என்று கூறிய இந்த ஆசிரியர் தொழிலை இவன் தேர்ந்தெடுத்தது.
தாம் விரும்பாத குமரப்பனோடு சகவாசம்.
(ஏதேனும் இரண்டு காரணங்கள் எழுதினால் போதும்)

  1. பாரதி, சத்தியமூர்த்தி


  2. பாரதியின் ஆலோசனைக்கேற்ப சத்தியமூர்த்தி மல்லிகைப் பந்தல் கல்லூரியின் உரிதையாளர் பூபதிக்குக் கடிதம் எழுதுகிறான். அக்கடிதத்தில் விரிவிரையாளர் பணியின்பால் கொண்டுள்ள ஆர்வத்தையும் ஈடுபாட்டையும் உண்ரத்த முனைகின்றான். அதன் பயனாக அவனுக்கு நியமனக் கடிதம் கிடைக்கின்றது. அவனும் வேலை நிமித்தம் மல்லிகைப் பந்தலுக்குப் புறப்படுகிறான்.

(நன்றி. எஸ்.பி.எம் தமிழ் இலக்கிய வழிகாட்டி, நெகிரி மாநில இடைநிலைப்பள்ளிகளின் தமிழாசிரியர் ஒருங்கிணைப்பு மன்றம்.)

No comments:

Post a Comment