Tuesday, March 1, 2011

நாவல் (பொன் விலங்கு) பயிற்சி 6

பயிற்சி 6

பாகம் 1- பிரிவு ஒன்று (நாவல் : பொன் விலங்கு)

அ. மல்லிகைப் பந்தலிலிருந்து சத்தியமூர்த்திக்கு எத்தனைக் கடிதங்கள் வந்தன? (1 புள்ளி)


ஆ. பொன்விலங்கு நாவலை எழுதிய நா.பார்த்தசாரதியின் பிற நூல்கள் இரண்டிணைக் குறிப்பிடுக. (2 புள்ளி)


இ. பணி ஓய்வுக்குப் பின் சத்தியமூர்த்தியின் தந்தையை வருத்திய இரண்டு கவலைகள் யாவை?(4 புள்ளி)


ஈ. "சித்திரா பௌர்ணமியன்று மாலை ஒரு மணி தமுக்கம் பொருட்காட்சியில் அக்காவோட நாட்டியம் இருக்கு. அதுக்கு நீங்க அவசியம் வரணுமுன்னு அக்கா ஆசைப்படறாங்க! 'வேறே யாருக்கும் தெரியப்படாது. உடனே இதைப் போய் அவரிடம் சொல்லிவிட்டு வா'ன்னாங்க. இந்த வீட்டைக்கூட அக்கா சொன்ன அடையாளத்திலிருந்துதான் நான் தேடிக் கண்டுபிடித்தேன்." (அத்தியாயம் 12, பக்கம் 165)


  1. இவ்வுரையாடலில் வரும் 'நீங்க' மற்றும் 'நான்' யாவர்? (2 புள்ளி)

  2. இவ்வுரையாடலுக்குப் பின் நிகழ்ந்த சூழல் யாது?. (5 புள்ளி)

பயிற்சி 6
மாதிரி விடை


அ. மூன்று


ஆ. குறிஞ்சி மலர், ஆத்மாவின் ராகங்கள்


இ. வீட்டைக் கட்டி வாடகைக்கு விடுதல்.
மகள் ஆண்டாளின் திருமணம்.
(ஏதேனும் இரண்டு காரணங்கள் எழுதினால் போதும்)

  1. சிறுவன், சத்தியமூர்த்தி


  2. ஒரு சிறுவன் சத்தியமூர்த்தியை வந்து சந்திக்கிறான். தமுக்கம் பொருட்காட்சியில் நடைபெறும் மோனியின் நடனத்தைக் காண வருமாறு மோகினி அழைத்ததாக அச்சிறுவன் கூறுகிறான். சத்தியமூர்த்தியோ சிறுவனிடம் தான் வருவதற்கு முயற்சி செய்கிறேன் என்று கூறுகிறான்.
    சிறுவனோ சத்தியமூர்த்தி உறுதியா பதில் சொல்லும்வரை விடாப்பிடியாக இருக்கிறான். அப்போது,
    பல வகையில் மனம் புண்பட்டுப் போய் இருக்கும் மோகினியைப் பற்றி யோசிக்கிறான்.
    தானும் புண்படுத்தக்கூடாது என்று எண்ணி அந்தச் சிறுவனிடம் அவசியம் வருகிறேன் என்று கூறி அவனை வழியனுப்புகிறான்

(நன்றி. பகாங் மாநில இலக்கியப் பயிற்றி 1, பகாங் மாநில இடைநிலைப் பள்ளித் தமிழ்ப் பணித்தியம்.)

No comments:

Post a Comment