Wednesday, February 16, 2011

நாவல் (பொன் விலங்கு) பயிற்சி 5

பயிற்சி 5

பாகம் 1- பிரிவு ஒன்று (நாவல் : பொன் விலங்கு)


அ. குத்துவிளக்குப் பத்திரிகையில் கேலிச்சித்திரம் வரைபவர் யார்? (1 புள்ளி)


ஆ. ஏன் மோகினி சத்தியமூர்த்தியை இரண்டாவது முறையாகத் தன் வீட்டிற்கு அழைத்தாள்?.(2 புள்ளி)


இ. குமரப்பன் மல்லிகைப் பந்தலுக்கு வருகை தந்ததன் காரணம் என்ன?(4 புள்ளி)


ஈ. "தயக்கம் ஒன்றும் இல்லை! சட்டப்படி நாளை காலையிலிருந்துதான் நான் மல்லிகைப் பந்தல் கல்லூரியின் விரிவுரையாளன். இன்றே நான் தங்குவதற்கு இடமும் வசதிகளும் தேடித்தர வேண்டும் என்று கல்லூரி முதல்வரிடமிருந்தோ நிர்வாகியிடமிருந்தோ நான் உதவியை எதிர்பார்ப்பது எப்படி நியாயமாகும்? என் சொந்த ஏற்பாட்டில் நானே தங்கிக் கொள்வதுதான் முறை! இல்லையா?" என்று அவன் சிரித்துக் கொண்டே கேட்டபோது அவள் முகம் வாடிவிட்டது.(அத்தியாயம் 16, பக்கம் 218)


  1. இவ்வுரையாடலில் வரும் 'அவன்' மற்றும் 'அவள்' யாவர்? (2 புள்ளி)


  2. இவ்வுரையாடலுக்குப் பின் நிகழ்ந்த சூழல் யாது?. (5 புள்ளி)

பயிற்சி 5
மாதிரி விடை

அ. குமரப்பன்

ஆ. நீலக்கல் பொருந்திய மோதிரத்தைச் சத்தியமூர்த்திக்கு அணிவிப்பதற்காக

இ. குத்துவிளக்குப் பத்திரிக்கையில் கேலிச்சித்திரம் வரையும் பணி.
நிர்வாக உரிமை மஞ்சள் பட்டி ஜமீந்தாருக்கு மாறியதால்.
நண்பன் சத்தியமூர்த்தி வேலை செய்யும் இடத்திற்குச் செல்லுதல்.
தனக்குத் தெரிந்த கைத்தொழிலைச் செய்ய எண்ணுதல்.
(ஏதேனும் இரண்டு காரணங்கள் எழுதினால் போதும்)

ஈ.

  1. சத்தியமூர்த்தி, பாரதி

  2. கல்லூரி நிர்வாகியின் மகள் என்ற முறையில் உபசாரம் செய்கிறான்.
    சத்தியமூர்த்தி பாரதியின் பிடிவாதத்திற்கு உடன்படுகிறான்.
    தனது காரில் கல்லூரிக்கு அனுப்பி வாட்ச்மேனை கொண்டு தங்குவதற்கு வசதி செய்து கொடுக்கிறாள். அதன்பிறகே அவள் வீடு திரும்புகிறாள்.

(நன்றி. பகாங் மாநில இலக்கியப் பயிற்றி 1, பகாங் மாநில இடைநிலைப் பள்ளித் தமிழ்ப் பணித்தியம்.)

No comments:

Post a Comment